Monday, 25 May 2015

அன்புள்ள அப்பா - செண்பகவல்லி

இலை 1
அப்பாவுடன் பழங்காநத்தத்தில் வாழ்ந்த காலம் பற்றி எழுதுகிறேன்.

ஐந்து வயதிருக்கும்போதே அம்மாவுடன் சேர்ந்து வாசல் தெளிப்பது, கோலம் போடுவது போன்ற வேலைகளைச் செய்தது ஞாபகமிருக்கிறது. அப்பா நான் போடும் கோலத்தைப் பார்த்து, 'விஜி போட்டா measurement எடுத்தது மாதிரி போடும்' என்று சொல்வார்கள்.

பின்னர் என்னை எத்தனையோ முறை "அடிக்கடி முகம் கழுவும்மா" என்று கூறுவார்கள். அதன் அருமை அப்பொழுது தெரியவில்லை. இப்பொழுது அதே வார்த்தையை நான் பலருக்குக் கூறுகிறேன்.

காலை எழுந்தவுடன் ஆசனம் செய்யச் சொல்வார்கள். "முகத்தில் எப்பொழுதும் கடுகடுப்பு இருக்கக் கூடாது, சிரித்த முகமாகவே இருக்க வேண்டும்" என்று அடிக்கடி கூறுவார்கள்.

பழங்காநத்தத்திற்கு தாத்தா வந்தால், அப்பா இரவு தாத்தாவுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருப்பார்கள். நின்று கொண்டே பேசுவார்கள். தாத்தா அவர்கள் "உட்காருப்பா", "உட்காருப்பா" என்று பலமுறை சொன்னவுடன் சிறிய ஸ்டூலைப் போட்டு உட்கார்ந்து பேசுவார்கள்.

நான் அஞ்சாம்கிளாஸ் படிக்கும்போது கோடைவிடுமுறையில் பசளைக்குப் போகவேண்டும் என்று பிடிவாதம். நன்றாகப் புயல் அடித்துக் கொண்டிருக்கிறது(1964 தனுஷ்கோடியை விழுங்கிய புயல்). அத்தனையும் மீறி என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அப்பா PSS  ஆபிஸிலிருந்து வரும்போதே ஜீப்பில் வந்தார்கள். பின்னர் என்னையும் சுலோசனா அத்தாச்சியையும் ஜீப்பில் ஏற்றி, பசளைக்குப் போகும் பஸ்ஸில் ஏற்றி அனுப்பி விட்டார்கள்.
அங்கு போனால் பெரிய அத்தை என்னையும் சுலோசனா அத்தாச்சியையும் கட்டிப்பிடித்துக்கொண்டு, "கடைசியிலே பிறந்ததுனு இரண்டு பேரையும் இந்தப் புயலில் அனுப்பிவிட்டிருக்காங்க" என்று கேட்டார்கள்.

என்னை என் அப்பா நன்றாக உருவாக்க வேண்டுமென்று எத்தனை முயற்சிகள் - "music class", "drawing class" பின்னர் "type-writing class".

ஆறாவது படிக்கும் போதே சுவாமி பாட்டுகள் (கனகதாரா ஸ்தோத்ரம்,  கந்த சஷ்டி, கோளறு பதிகம், திருப்புகழ், திருவருட்பா, சுப்ரபாதம், மஹிஷாசுரமர்த்தினி ஸ்லோகம், திருப்பாவை, திருவெம்பாவை) அத்தனையும் மனப்பாடம் செய்ய வைத்தார்கள்.

ஒவ்வொரு கார்த்திகைக்கும் அப்பாவின் கையைப்பிடித்துக் கொண்டு திருப்பரங்குன்றத்திற்கு செல்வேன். ஒருமுறை பெரிய கார்த்திகையன்று இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்த போதே மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. அப்பா என்னிடம் கூறுகிறார்கள் - "முருகன் நம்மை சோதிக்கிறான்", மழையிலும் நடந்து வருகிறோமா இல்லையா என்று". இப்படி ஒவ்வொரு விதத்திலும் பக்தி உணர்வை ஊட்டி ஊட்டி வளர்த்திருக்கிறார்கள்.

அப்பாவிற்கு சாப்பாட்டில் பிடித்தது என்று அதிகமாகக் கிடையாது. "நல்ல இட்லி", "நல்ல பில்டர் காபி", இவை இரண்டும் அதிகமாக விரும்புவது.

ஆனால் அப்பா அடிக்கடி கூறும் வார்த்தை "நாக்கிற்கு அடிமையாகக் கூடாது. அடிமையானால் வாழ்க்கையில் முன்னேற முடியாது" என்று.

பின்னர் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் "ஆசை அறுமின்! ஆசை அறுமின்! ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்" என்று.

எப்போதும் வீட்டில் உபயோகிக்கும் தலையணை உறை தூய வெண்மையாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை காட்டுவார்கள். நல்ல coffee powder regularஆக வாங்கிக் கொடுப்பது, வீட்டில் ஒவ்வொரு பொருளையும் எடுத்த இடத்தில் வைக்கவேண்டும், தான் செலவழிக்கும் செலவிற்கு எப்பொழுதும் கணக்கை எழுதி வைப்பது. இப்படிப்பட்ட அப்பாவின் பழக்கவழக்கங்களை யாராலும் மறக்க இயலாது.

எத்தனை கல்யாணங்கள் அந்த பழங்காநத்தம் வீட்டில் நடந்திருக்கிறது. அத்தனையும் அப்பா அவர்கள் யோசனையின்படி கோடை விடுமுறை சமயம் நடக்கும். லீவு நாட்கள் நன்றாகக் கழியும். (நன்றாக enjoy பண்ணுவோம்)

பின்னர் சேலத்தில் அப்பாவுடன் கொஞ்ச நாட்கள் இருந்திருக்கிறோம். அங்கிருக்கும் போது காலையில் ஐந்து மணிக்குக் குழாயில் தண்ணீர் வரும், அதைப் பிடிப்பதற்காக, 3 மணிக்கு எழுந்து திரி ஸ்டவ்வில் வெந்நீர் போட்டு வைத்துக் கொண்டு, அந்நேரத்திலேயே எழுப்பி "எந்திருச்சு குளிம்மா" என்று கூறுவார்கள். அப்படி மூன்று மணிக்கு எழுந்திரித்து குளித்துவிட்டு  பாடப்புத்தகத்தைக் கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தவுடன் வரும் "சுகமான தூக்கம் இருக்கிறதே" அதற்கு ஈடு இணை எதுவுமில்லை.

பின்னர் சேலத்திலிருந்து நாகமலைப் புதுக்கோட்டை.

NGO colonyயில் இடம் அமைந்து, வீடு கட்டியது, ஒரு தெய்வீக வரப்பிரசாதம். காசு வேணுமென்றால் அண்ணன் கொடுத்திருப்பார்கள். அந்த வீடு அமைவதற்குள் அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பது கூடவே இருந்து பார்த்த எனக்குத்தான் நன்றாகத் தெரியும்.

வியாழக்கிழமை காலையிலிருந்தே வீட்டை க்ளீன் பண்ண ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொரு ஜன்னல் கம்பியையும் துடைத்து, வீடு முழுவதும் கழுவி, வெள்ளிக்கிழமை காலையில் வீட்டைப் பார்க்கும் போது "தபோவனம்" போன்று இருக்கும். அதற்குத் தோதாக அம்மாவின் வேலை. வீட்டைக் கட்டும் போது பார்த்துப் பார்த்து செய்த வேலைகள் எத்தனை.


"இந்த வீட்டுல சுதர்ஸன சக்கரம் வைத்துள்ளது. அதனால் எந்தத் தீய சக்தியும் அண்டாது" என்று பலமுறை கூறியிருக்கிறார்கள்.

வீடு கட்டிய புதிதில் ஒவ்வொரு பூச்செடியாக வைத்து அழகு பார்த்தார்கள். வாழைமரம் உண்டாக்கினார்கள். மாலை வேளைகளில் அப்பாவுடன் உட்கார்ந்து அந்தப் படிகளிலே கழித்த காலத்தை மறக்க இயலவில்லை.

எத்தனை விஷயங்கள் பேசியிருப்போம்.

(இன்னும் பேசுவோம்)

Wednesday, 20 May 2015

விழுது - தீபா / தனலட்சுமி

செல்வ நிலையம் தாத்தா.
பெரிய மகன்,பெரிய அண்ணன்,பெரிய மாமா ,பெரியப்பா,பெரிய தாத்தா என்ற எல்லா உறவுகளுக்கும் சொந்தக்காரரர் எங்கள் செல்வநிலையம் தாத்தா. பெரிய என்ற அடைமொழி தாத்தாவுடன் இணைந்தது மூத்தவர் என்ற அடையாளத்தால் மட்டும் அல்ல. உண்மையில் தாத்தா பெரிய மனிதர் என்பதால்.
நீ என்ன புது விஷயத்தை சொல்ல வருகிறாய் என்ற வினா எழும்.அதற்க்கு பதில் - யார் பெரியவன் ?, என்று ஒரு ஹிந்தி பாடல் சிறுவர்களுக்காக வரும், அதில் வயதால் மூத்தவர், பெரியவரா,பணத்தால் உயர்ந்தவர் பெரியவரா, மாட மாளிகை கட்டியவர் பெரியவரா என கேள்வி எழுப்பி கடைசியில் பரோபகார குணம் படைத்த ,மனம்,செயல்.பொருள் உதவி சுயநலம் இன்றி யார் செய்கிறாரோ ,மனித நேயம் மிகுந்தவரே பெரியவர் என்று போதனை மொழியாக வரும். அந்த மொழிக்கு உதாரணம் பெரிய தாத்தா.
உறவுகளுக்கு மதிப்பும் மரியாதையும் தந்து அரவணைத்து செல்வார்கள். அவர்களுடைய தேவை யாருக்கு வேண்டுமோ அங்கே நிற்பார்கள்.மாமாக்கள்,மற்றும் அம்மா மார்களை கேட்டால் சொல்வார்கள் அவர்களின் பெரியமாமாவை பற்றி .தன தங்கை மக்களை தம் மக்கள் போல் வளர்த்து உயர்த்தியதில் அவர்களுக்கு ஈடே கிடையாது.அவர்கள் வருமானத்தில் தம் குடும்பத்தை மட்டும் கவனித்து இருந்தால் தம் பிள்ளைகளுக்கு மட்டும் இன்னும் சிறப்பாய் செய்திருக்க முடியும்.அதெல்லாம் தாண்டி அவர்களுக்கு தம் சகோதர,சகோதரிகளின் மக்களையும் தம் மக்களாய் பார்க்கும் பக்குவமும் பண்பும் இருந்தது.இது நாம் நம் மூத்த தலைமுறையிடம் இருந்து கற்க வேண்டிய பாடம்.
எந்த இடத்தில் தன்னுடைய அவசியமோ அங்கே தாத்த காட்டாயம் இருப்பார்கள். காட்டூரில் எங்கள் அப்பா மறைந்த பின்னர்,ஊரை காலி செய்து கிளம்பும் நேரம் தாத்தா என் அம்மாவிற்கு (தந்தை என்று ஒருவர் தனக்கு இருந்திருந்தால் என்ற நினைவு வராமல்) தந்தை ஸ்தானத்தில் இருந்து தோள் கொடுத்தார்கள். அதே போல் மதுரையில் நாங்கள் குடியேறிய பின்பும் முதல் ஆளாய் வந்து நின்று துணை நின்றார்கள்.வாரம் ஒருமுறை கட்டாயம் தாத்தாவின் வரவு இருக்கும்.அம்மாச்சியும்,தாத்தாவும் உட்கார்ந்து பேசுவார்கள். தன மாமாவை பார்த்தவுடன் என் அம்மா புது டிகாசன் போட்டு சுவையான காபி டவரா-செட் இல் பவ்யமாய் கொண்டு வந்து தருவார்கள்.
நறவம் நாறிய நன் நறுஞ் சாந்திலும்
நிறைய நீறு அணிவார் எதிர் செல்லலே- நிறைய நீரனிந்தவர் எதிர் செல்ல எமனும் அஞ்சுவான். என்பது நாவுக்கரசர் கூற்று. அதன் படி நிமிர்ந்த நடையுடன் நெற்றி நிறைய நீர் அணிந்து தேஜஸான முகத்துடன், கண்களில் ஒளி பொருந்தி தாத்தா வந்து நிற்கையில் தன்னால் positive energy நம்முள் வந்து நிறையும்.
எங்களுக்கு முதல் அறிமுகம் சுபா தாத்தா என்று தான். மதுரைக்கு வந்த பின்னே செல்வநிலையம் தாத்தா ஆனார்கள்.வானதி அத்தாச்சி கல்யாண சமயம் திருச்சி வந்த தாத்தா அப்பத்தாவை என் அப்பா காட்டூர் அழைத்து வந்து மிகவும் சந்தோசப்பட்டார்கள். அவர்களுடன் ஜெயஸ்ரீயும்,நானும் மதுரை வந்து ஒரு மாத பொழுது செல்வநிலையத்தில் களித்தோம். தாத்தா வீடு கூட்ட சொல்லி தருவார்கள் நல்ல படுக்க போட்டு அந்த பேருக்கு மாரை தள்ள வேண்டும் என்று செய்முறை விளக்கத்துடன், அதுக செய்யட்டும் விடுங்க என்று அப்பத்தா குரல் கொடுப்பார்கள்.பழைய புகைப்படங்கள் காட்டி இலக்கம் சொல்வார்கள் தாத்தாவோடு உட்கார்ந்து ஆஷ் -சீட்டு விளையாடுவோம். தாத்தா மூக்கு கண்ணாடியில் சீட்டை பார்த்து அதற்க்கு தக்கபடி விளையாடி இருக்கிறோம். எனக்கும் கூட இங்கிலீஷ் சொல்லி தர முயன்றார்கள் ஆனால் நான் முசுட்டு குணத்துடன் கோபித்து கொண்டிருப்பேன்.
சமண மலைக்கு தாத்தாவுடன் ஒருமுறை நடை பயணம் சென்றோம், அப்போது அங்கே அதிக ஆள் நடமாட்டமே இருக்காது எங்களுக்கு முன்னே ஒரு இளைஞன் நடந்து செல்ல அவனை அழைத்து, நீ இன்னார் மகன் தானே என்று விளித்து இப்படி தனியா வராத தம்பி ,நாலணா காசுக்காக அடித்து போடும் இடம் இது என்று எச்சரிக்கை செய்தார்கள்.
தாத்தாவின் பலதரப்பட்ட முகங்கள் உண்டு நம்மால் முழுமையாய் சொல்ல இயலுமோ தெரியவில்லை.தினமும் எட்டு மணி அடித்தவுடன் என் வீட்டுக்காரர் வயிற்றில் பசி மணி அடித்துவிடும் ,அதுவும் தாத்தாவின் வளர்ப்பினால் இன்றுவரை எங்கள் உடன் வரும் பழக்கம்.மருதாணி தன் வண்ணங்களை நம்மில் பதித்து செல்வதை போல் பலரிடம் தாத்தாவின் நினைவுகள் பதிவுகளாக இருக்கும் .இந்த பதிவு முடிவல்ல ஆரம்பம் எங்கள் வீட்டில் தாத்தாவின் சுவடுகள் அழுத்தமாய் பதிந்திருக்கிறது அடுத்தடுத்து வரும்.

 

 

  • Subhasree Sundaram ஆம் அக்கா.. கீதாம்மா மற்றும் உங்கள் அனைவர் நிலை குறித்த கவலைகள் குறித்தும், பிச்சைபிள்ளை சாவடியில் வீடு பார்த்திருப்பதாகவும் தாத்தாவின் கையெழுத்தில் கடிதம் படித்த நினைவு வருகிறது. 
    சீட்டு விளையாட்டின் பாரம்பரியம் முதலில் அப்பாவிடம் இருந்தும், பிறகு தாத்தாவிடமிருந்து 304, 504 என விரிந்தது.
  • Rajesh Balasubramanian B காட்டுர்ல என்ன செய்றது தெரியாம இருந்த போது மாமா கடவுள் மாதிரி வந்தாங்க......கீதா அம்மா சொல்லிய வார்த்தை
    23 hrs · Unlike · 3
  • Shanmuganathan Arunachalam கடவுள் மாமா..!

Monday, 18 May 2015

விழுது - ரேவதி

இலை 1

செல்வ நிலையம்
 எங்களது நந்தவனம்
 அதில் இருந்த பெரும் விருட்சம்
 தாத்தா...
அந்த விருட்சம் எத்தனையோ
ஜீவ ராசிகளுக்கு
 அடைக்கலம் alidhadhu
நானும் ஒரு சிறு எறும்பாய்
 அந்த விருட்சத்தில்
 ஊர்ந்து இருக்கிறேன்
 என்பதே என் வாழ்வின்
 பெருமை....
மழை போல்
 வாழ்ந்து....
நிறைய மனங்களை
 நனைத்து இருக்கிறிர்கள்
 தாத்தா...
அந்த மழையில்
 முளை விட்ட
 சிறு விதை
 நான்....
மீண்டும் துளிர்ப்பேன்.......





Aravindan Selvaraj Very poetic intro! Pl keep writing..


Karuppiah Shanmugam அடடே பாட்டாவே பாடிட்டியா .....

சபாஷ்

Revathi Arunachalam பாந்தமனவர்களை நினைக்கையில் ....பாடல் வருவதில்வியப்பில்லை...................................பாசாங்கு செய்ய மனமும் இல்லை.

இலை 2

முத்து ரத்தினம்
பெற்றுஎடுத்த
நவ மணிகளில்
முதல் ரத்தினம்....
...
என் அப்பத்தாவும்...பெரிய தாத்தாவும்..
இந்த அண்ணனும் தங்கச்சியும்....ஒருவருக்கு ஒருவர்
மன சஞ்சலங்களை பகிர்ந்து கொண்டு..ஆறுதல்சொல்லிக்கொண்டு
மனோதிடத்துடன் இறுதிவரை
இணைந்து இருந்து
என்னுள் சிரஞ்சீவியாக
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.....
தாத்தாவின் நடை வைத்தே அப்பத்தா அவர்கள் மனதைகண்டு கொள்வார்கள். தாத்தா கம்மிய குரலில் பேசுவார்கள்
அப்பத்தா" எதுக்கு அண்ணே kalanguringa " என்று உறுதியான
குரலில் சொல்வார்கள்....சற்று நேரம் மௌனம் தொடரும்...பின்பு அப்பத்தா தரும் காப்பியை குடித்துவிட்டு..."வரேன்சௌந்தரம்" என்று தாத்தா
நடந்து செல்வார்கள். அதை வாசலில் இருந்து அப்பத்தா கண்ணைவிட்டு மறையும் வரை பார்த்தே இருந்து விட்டு..."எப்பேர்ப்பட்ட அண்ணன்" என்று பெரு மூசெரிவதை... வியந்து பார்த்து இருக்கிறேன்.

இளம் வயதில் கைம்பெண் ஆன தங்கச்சியை கரம் பிடித்து கரை ஏற்றிய அண்ணன்...... அந்த நன்றி மறவாத தங்கை....உயிர்ப்போடு என்னுள்


Aravindan Selvaraj The last few lines..very emotional!. A great brother for an equally great sister!

Deepa Senbagam வரிகள் சொல்லும் சரித்திரம்.செவி வழி வந்தவை வரி வழியாக மனதை அடைகிறது. ஒவ்வொருவர் எழுத்தும் தாத்தாவைப் patriya ஒரு புது கோண பார்வையில் விரிகிறது.

Ravindran Aiyadurai இந்த வீரமங்கை வேலுநாச்சியாரைப் பற்றி தனிக் காவியமே எழுதலாமே ரேவாப் பொண்ணு(அல்லது)எங்கள் பெரிய தம்பி

Jeyasree Suresh பெரிய அம்மாச்சி இறந்த அன்று வாழைப்பழம் வழக்கமாக வீட்டில் கொணர்ந்து விற்கும் ஒரு பாட்டி "பழம் வாங்கலையா சாமி" என வினவ, அதற்கு தாத்தா அவர்கள் "என் தங்கச்சி செத்துப்போச்சும்மா" என்று சொல்லும்போது உடைந்து கண்ணீர் வந்ததை பார்த்த அன்று அவர்கள் பாசத்தை உணர முடிந்தது.



இலை 3

அய்யா துரை....
ஆச்சார்யன்(ர்)
இறுமாப்பு அற்றவர்
 ஈந்து மகிழ்ந்தவர்..
உறவுகளின் தோழர்....
ஊர் போற்ற வாழ்ந்த் உத்தமர்
 என்றும்நினைவில் நிலைத்து இருப்பவர்
 ஏணிப்படியாக இருந்துஎங்களைஏற்றியவர்
 ஐயம் அகற்றிய அய்யா
 ஒழுக்கத்தின் உண்மை பொருள்
 ஓம்காரம் எமக்குரைத்த எங்கள் குரு
 ஓவுஷதம் நீரே எங்களுக்கு

Subhasree Sundaram "உயிர்" எழுத்துக்களில் "மெய்" நிறைத்து, இது அய்யன் ஆத்திசூடி!!

இலை 4

தாத்தா வீடு....
நாங்கள் சுதந்திரமாக கால் பதித்த இடம். எங்கள் அப்பாவின்"அப்பா" என்ற வெற்றிடம் எப்படி நிரப்பட்டதோ அதற்கு சற்று குறைவின்றி எங்களுக்கு தாத்தா என்ற பாச உணர்வை உணர செய்த பெரிய தாத்தா....
சுபா நீ சற்றே பின்பு பிறந்ததால் அந்த விபூதி தோய்ந்த விரல்கள் பற்றி வீதி உலா நடந்தேறியது.
குஞ்சுகள் என்று குழந்தை சிரிப்போடு தாத்தா எங்களை வரவேற்பது என் குதூகலம் கூட்டியது. அநத களிப்பில் தாத்தாவின் கால்களில் ஏறி நின்று ஊஞ்சல் ஆடிய உவகையன நாட்கள் அவை.
ஜன்னல் கம்பிகளை பிடித்தபடி தாத்த...ா தூங்க கால் மிதிப்பது ஞாயிற்றுக்கிழமை வேலை.
சந்தனம் இழைக்க தண்ணீர் தருவது
சந்தனம் இழைப்பதை வேடிக்கை பார்ப்பது
வேடிக்கை பார்க்கையில்விரல் நீட்டி விஷமம் பண்ணுவது
"அதிகப்ப்ரசங்கி"என்று அதட்டல் வாங்குவது ....
தாத்தாவின் அதட்டலை அச்சடித்தார் போல்
இருக்கும் அந்த பொட்டு...ஆச்சர்யம் கொடுத்து
அழுத்திவிடும்....

Karuppiah Shanmugam 


குலகுரு கவசம்

பெரிய தாத்தா நினைவுகளில்அனைவரும் நீந்தி கொண்டு இருக்கும்
வேலையில் கடந்த ஆண்டு காவடியின் நினைவுகளில் நீட்சியை மறைக்க முடிய வில்லை. அதோடு ஸ்ரீ மான் ASP அவர்களின் நூற்றாண்டு நினைவாக கடந்த ஆண்டுநான் எழுதிய சிறு கவசத்தை பகிர்வது மூலம் என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.


திருச்சிற்றம்பலம்
...
அல்லல் போம் வல் வினை போம்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்
போகா துயரம் போம்-குணமதிக மா
அருணை கோபுரம் மேவும் கணபதியை தொழுதக் கால்.
தெளிவுகுருவின் திருமேனி கண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தாமே..
அறுபடைஅழகனை
ஆழ்ந்தே நினைக்க
அகத்தினில் மலரும்
ஐயனின் உருவம்.
அருளரமுதே!
அறிவு கொழுந்தே!-என்றும்
எமை ஆளும்-அண்ணாமலை
புதல்வா...
அங்குத்தாயின் அருகே அமர்ந்து
ஆசிகள் அளிக்கும்- ஆறுமுகன்
மைந்தா....
அம்மையம்பதியில்
ஆனந்தமாய் அமர்ந்து
ஆன்மீகம் அளிக்கும்
அற்புத சீலா!
எளியோர் மனத்தே
என்றும் இருந்து
இன்னல் தீர்க்கும் -இக
பர சுகமே...
ஒன்றாய் பலவாய்
ஒளிரும் மணியே!
பழனி மலையின்-பக்தி
கனியே....-என்
சிந்தை நிறை-சிவ
ஞான குருவே-சிறு
மலைதேனே..
நினையா மனதை
நினைத்திட செய்யும்-நிமலா
நின்தாள்
சரணம்! சரணம்!
அழகா!அமரா!
அம்மை நகரின்
அருட்பெருஜோதி!
நின்தாள் சரணம்!
தயாள குணம் தந்து
எமை ஆண்டிடவே
வருவாய்..வருவாய்
வடிவார் அமுதே!
அடியார் உறவாய்
அருளே உருவாய்..
திருவே தருவாய்.. .
ஐயா சுப்பா!
குருவாய் வருவாய்
இருளை களைவாய்
அன்பர்கள் துணைவா
சாயி நேசா!
சத்திய நாதா!
காவடி சுமந்த
கருப்பனின் வடிவே
கவனம் ஈர்க்கும்
காந்த விழியே!
கருப்பனின் வாளே....
முருகனின் வேலே...
கருப்பனை தாங்கி களி நடம் புரிந்தாய்
பார்த்திபனுரில் பரவசம் கண்டாய்
பாலமுருகனை பாடியே துதித்தாய்
பாத யாத்திரை எங்களுக்கு அளித்தாய்...
பழனியின் வடிவே!
எங்கள் குருவே!
உம்மை நினைக்க
நிலையது உயரும்...
நினைத்தது நடக்கும்...
நிம்மதி நிலைக்கும்...
கேட்டது கிடைக்கும்...
அங்கம் சிலர்க்கும்...
அமைதி பெருகும்....
பார்க்க..பார்க்க
பயமது விலகும்...
பாவங்கள் தீரும்....
பகை அது நீங்கும்...
உம்மருள் இன்றி
உலகென்னகில்லை
உன்னைவிட்டால்
உறவெனக்கு இல்லை
உனையே நினைக்க
உனையே துதிக்க
எமை ஆண்டிடுவாய்-எங்கள்
ஐயா..
குறையோன் வாழ்வில்
நீயே கவசம்.
எம் குறை தீர்க்க
எழில் வேல் முருகனை
எழுந்தோடி வரசெயும்
எம் குலஞானி..
எத்தனை துன்பம்
எத்தனை இடர்கள்
அத்துணை இடரால்
அவதியுறாமல்- எதையும்
தாங்கும் இதயம் தந்த
மாசில்லா குருவே!
மரகத மணியே!
வாழ்க! வாழ்க! தணிகை படியாய்...
வாழ்க!வாழ்க!பழனிஎம்பதியாய்...
வாழ்க!வாழ்க! பரங்குன்றின் அழகாய்....
வாழ்க!வாழ்க! செந்தூர் அலையாய்...
வாழ்க!வாழ்க! சுவாமி மலை ஞான மாய்....
வாழ்க! வாழ்க! சோலைகனியாய்.!

Friday, 15 May 2015

விழுது - சண்முகநாதன்

இலை 1

விசும்பின் துளிவீழின் அல்லால் இங்கே பல நிலங்கள் பசுமை கண்டிருக்குமோ... அவ்வுயிர்த்துளியில் புல்லாய் முளைக்கும் பேறு பெற்றவன் என்ற பெருமையுடன் பாத கமலங்களில் நமஸ்கரிக்கிறேன்

இலை 2

மற்றும் சில மகிழ்வான என் இளம்பிராயத்து பழங்கானத்த.. நினைவுகள்.. கணம் நீதிபதி...
அவர்களுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்வதில் சந்தோஷப்படுகிறேன் :
..காலையில் “வந்தேமாதரம்.. சுஜலாம்..சுபலாம்..” ரேடியோவில்கேட்காத நாட்கள் இல்லை
...
அந்த பச்சை கலர் ‘மாஜிக் ஐ” அடிக்கடி ட்யூன் பண்ணி வைப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும்
குளிக்கும் இடத்தில் சிட்டுக் குருவிகள் குளிக்கத் தண்ணீர் நிரப்பி வைப்பதை சத்குரு தவறாமல் செய்வார்கள்.
மாடிப்படியில் உட்கார்ந்தபடி ஒரு பிரவுன் கலர் ஸ்டூலை காராகப் பாவித்து ஓட்டியபடி.. சிறு மூங்கில் கம்பை இடது பக்க கல்லிடுக்கில் செருகி.. கியர் மாற்றி.. ஓட்டியது.. இதுவே எனக்கு ஆட்டோமொபிலில் பெருவிருப்பம் கொண்டதற்குக் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்..
பக்கத்து வீட்டில் ஃபேன் மேல் கூடு கட்டி குஞ்சு பொரித்திருக்கும் சிட்டுக்குருவிகள்......
வீடுகளுக்கு நடுவே இருக்கும் சந்தில் ஓலைக் காத்தாடி பென்சிலில் கலர் அடித்து காக்கா முள் குத்தி ஓடவிடுவது..
அந்த முல்லைக் கொடிகளில் இருக்கும் பூக்களை பறிக்க காம்பவுண்ட் சுவற்றில் ஏறி..ஏறுவதற்கு வாகாய் சுவற்றில் இருக்கும் என் கால் பெருவிரல் வைக்கச் சரியான சிறு செங்கல் குழி..
சாமி ரூமில் மனக்கும் சந்தனம்... அரக்கும் போது சத்குருவின் கைகளில் ஆடும் சதைக்கதுப்பு..
சாமி ரூம் நிலைப்படியில் ஒரு சரிவான மேடு இருக்கும்.. அது என்னுடைய கார் பொம்மைகளை.. தானே உருள வைக்கும்.. உருளும் காருக்கு முன்பாக இரு தீப்பெட்டிகளை வைத்து ,, அதன் நடுவில் இந்த கார் இடிக்காமல் போய்விட்டால் வரும் இன்பம்...
ரவி அத்தான் எனக்கு முதன் முதலாய் டைம்பீஸ் வைத்து கடிகாரம் பார்க்கச் சொல்லிக் கொடுத்தது.. ( உங்களுக்கு நினைவிருக்கிறதா அத்தான்..?)
இரவில் வெள்ளை வெளேரென்று தலைகாணி உரை போடுவது...
பக்கத்து சந்தில் ஓயாமல் கேட்கும் சண்டைச் சத்தம்..
அதைப் பார்க்க முற்படுகையில் காதில் விழும் சத்குருவின் அதட்டல் குரல்..
.
இரவில் பாபுவும்.. அத்தானும் மாடியில் சுவற்றில் உட்கார்ந்து கொண்டு பேசுவது..
அப்பவெல்லாம் ட்ரவுசரில் தோள்பட்டை பெல்ட் இருக்கும் எக்ஸ் போலக் குறுக்காக.. அந்த ட்ரவுசர் போடும்போது.. நான் நடனம் ஆடுவது போல இருக்குமாம்.. அதை.. (“ ஷன்முகனாதா.. அங்க அந்த ட்ரவுசரைப் போட்டுக் கண்பி..” என்பார்கள்... நானும் குஷாலாக செய்து வைப்பேன்.. அதிலொரு பெருமை..!
அப்பா ஃப்ரண்ட்சுடன் சீட்டு விளையாடியதைப் போட்டுக் கொடுத்தது...
தம்பி ஸ்ரீதரை உப்பு மூட்டை தூக்கிச் சென்றது.. வழியில் வண்ணான் வீட்டில் இருக்கும் கழுதைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பது..(என்ன வேடிக்கையோ..? அவ்வளவு நேரம் நிற்பேன்..)
சாயந்திரம் அத்தை டீ போடும்போது ஸ்டவ்விலிருந்து வரும் புகை வாசனை..
அம்மாவைப் ‘போடி’ என்று சொன்னதற்கு சத்குருவிடம் வாங்கிய அறை...
சத்குரு கழற்றி வைக்கும் மஞ்சள் நிற ரப்பர் காலணி..
அவர்களின் கால் அமுக்கி விடுவது.....
பழங்கானத்து பாலம் வரை வாக்கிங் சென்றது.. அப்போது திருமலைத் தென் குமரி படத்திலிருந்து பாடல் பாடியது...
டி.வி.எஸ் பள்ளியில் 2 ம் வகுப்பு படித்தபோது..வரும் வழியில் கோவலன் பொட்டலுக்கெதிரில் மீன் பிடித்தது.. (வலையாக என் சட்டையை உப்யோகித்துவிட்டு.. வீட்டில்.. சத்குரு இருவரும் வழங்கிய வெகுமதிகளை வாங்கிக் கொண்டது..)
பாப்பா அத்தாச்சி க்ளாசில் டீச்சர் சொல்லி ஒரு மாணவியின் புத்தகத்தை தூக்கி மூஞ்சியில் எரிந்தது...
நினைவுகள்...நினைவுகள்....மரிக்குமோ..?

இலை 3

பதிவு என்றதும் தான் எனக்குத் தெரிந்தத்து.. அவரவர் மொழியில் பதிவு செய்யலாம் என்ற செய்தி... மிக்க மகிழ்ச்சி...இன்று எழுதியது.. மூர்த்தி மாமாவின் எழுத்தில் கிடைத்த உந்துதலால்...தம்பி அரவிந்தனின் அகரத்தோடு.. என் பதிவுகளும் தொடரும் ..நாளை முதல் .நூற்றாண்டு மிகச் சிறப்பாக முத்தாய்ப்பாக இருக்க அனவரும் ஒன்று கூடுவோம்...சத்குருவாயும்..பிதாமகராயும் விளங்கும் எந்தையின் புகழ் பரப்புவோம்... நெஞ்சம் விம்மி வழிகிறதடா...!

இலை 4
சத்குரு பதிவு : 2 :
அப்பொழுது நான் ஜெயராஜ் நாடார் ஸ்கூலில் படித்துக்கொண்டுருந்தேன்..மூர்த்தி மாமா வெள்ளைசாமி நாடார் கல்லூரியில். ஹாஸ்டலில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தார்கள். தினமும் மாலையில் செல்வ நிலையம் வருவது வழக்கம்.
அப்படி ஒரு நாள் அங்கே வந்திருந்தபோது.. வீட்டில் மேஜை மேல் பெரிய கண்ணாடி வைக்கப்பட்டிருக்கும். அதற்கு முன்னால் பெரும்பாலும் அமர்வது வழக்கமாய் இருக்க..
பாமா அக்கா மூர்த்தி மாமாவிடம், “ ஏம்ப்பா மூர்த்தி..இங்க வர்ரப்ப எல்லாம் அந்தக் கண்ணாடி முன்னாலேயே உக்கார்ற..! ‘ என்று பரிகாசம் தொனிக்கும் குரலில் சிரித்துக்கொண்டே கேட்க...
“ அத்தாச்சி.. அது எதுக்குன்னா.. நான் எப்போதும் ஒரு பெரிய மேதை முன்னால் உட்காருவதையே விரும்புகிறேன்..” என்று சிரித்தபடி உடனடியாக யோசிக்கவே இல்லாமல் பதில் சொன்னர்களாம்.
நான் அங்கு சென்ற சமயம் சத்குரு .. இந்த நிகழ்ச்சியை என்னிடம் சொல்லி, “ ஷண்முகனாதா பதில் சொல்றதிலயும்.. பொருத்தமா ..சாதுர்யமா எப்படி பேசனும்னு..புரிஞ்சுதா..? “
“..ம்.. புரிஞ்சுச்சு.. மாமா..” என்று உண்மையிலேயே புரியாமல் பதில் சொல்ல..
“ என்ன புரிஞ்சுக்கிட்ட..? “ என்று விடாமல் கேட்க.. ..நான் முழித்தேன். எனக்கு அது புரியத்தான் இல்லை.
“ சாம்பிராணி.. கண்ணாடியில தெரியிற நம்ம உருவத்தை.. எவ்வளவு.. அழகா.. சாதுர்யமா ‘மேதை” ன்னு சொல்லி ...அந்த புத்திசாலித்தனம் வேணும்டா..! எப்பவும்..” என்று தலையில் மெதுவாகக் குட்டினார்கள் சத்குரு..
மோதிரக்கைக் குட்டு என்பது இதுதானோ..?
இந்த வாக்குச் சாதுர்யம் ஒரு வேதியியல் மாணவரை நீதிபதி ஆக்கிப் பார்த்திருக்கிறது என்பது.. நாம் அனவரும் அறிந்ததே..!


இலை 7
Sydney Carton’s Sacrifice… 
அப்டின்னு ஒரு பாழாப்போன பாடம் இங்க்லிஷ்ல . அப்ப 9 ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன்...
ஒண்ணும் இல்ல “ சாக்ரிஃபைஸ்’ அப்ப்டிங்கற வார்த்தைக்கு .. என்ன அர்த்தம்?....னு கேட்டாங்க.
தெரியலைன்னு சொல்லிப்புட்டேன். அப்படி ஒரு கோபம் சத்குருவின் முகத்தில்..! புருவங்கள் சுருங்கி.. கண்கள் பெரிதாகி..! 
டி.வி.எஸ் ல அப்பாவின் நண்பர் ஒருவரின் நான்கு பிள்ளைகள் வீட்டில் எங்களுடன் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். தினமும் மாலையில் சத்குரு அப்போது தங்கியிருந்த திரு.முருகரத்னம் ( தமிழ் பேராசிரியர்.. காமராசர் பல்கலை ) என்பவரின் வீட்டில் டியூஷன். 
இந்தக் கேள்வி சேகர் என்பவனிடம் கேட்கப்பட.. பாவிப்பய.. ‘தியாகம்” அப்டின்னு சரியான பதிலைச் சொல்லிப்புட்டான்.
அவ்வளவுதான்..?
நெற்றிக்கண் .. திறக்கப்பட...கழனிப் பானையில விழுந்த எலி வடிவாய் ... ‘ நாதன் ‘ நான் ‘நக்கீரன்..’ ஆனேன்..!
“மடச் சாம்பிராணி.. இந்த வார்த்தை கூடத் தெரியாம.. என்னடா படிக்கிறீங்க..?
“.........” மனசு.. தொடை.. எல்லாம் கிடு..கிடு..
பெரும்பாலும் மாலை நேரங்கள் மிகவும் பயங்கரமானதாகத்தான் தோன்றும்.
தினசரிப் பயங்கரங்கள்.
இங்கே கோபத்திற்குக் காரணமே.. எனக்கு அர்த்தம் தெரியாமல் போனது கூட இல்லை..!
இன்னொருவனுக்குத் தெரிந்திருந்ததே..! அதுதான்
.....சத்குருவால் சகிக்க முடியாமல் ..கோபம் வந்துவிட்டது.. போலும்
POSSESSIVENESS..... 
இந்த வார்த்தைக்குப் புது அர்த்தம் கற்பித்தவர்..சத்குரு..!
இது அன்று..!
இன்று....
... எங்கள் பள்ளியில்.. ஆசிரியர்களிடம்... மாணவ.. மாணவியரிடம்.. நான் கேட்கிறேன்..? தினசரி..
“....... “ என்ன அர்த்தம்..?
பி.கு: 8, 9 மற்றும் 10- என ஒவ்வொரு வகுப்பிலும் தினசரி புதியதாய் 5 ஆங்கில வார்த்தைகளுக்கு .. தமிழில் அர்த்தத்தோடு ..சிறிய வாக்கிய அமைப்பும் பயிற்சி கொடுக்கப் பணித்திருக்கிறேன்..
“ குரு தேவோ..மஹேஷ்வரஹ..”


இலை 8


சத்குரு : பதிவு 4:
பாகம் ..1
சாதுர்யமாகப் பேசுவது.. என்பது பற்றி நேற்றுச் சொல்லியிருந்தேன்...
சாதுர்யமாய் நான் நினத்துக்கொண்டு பேசியதை... இங்கே பதிவு செய்கிறேன்.
இந்தப் பதிவு.. யாரையும் சுட்டிக்காட்டுவதற்காக அல்ல..!...
பட்டறையில் அடிபடாமல் உருப்பெறுதல் சாத்யமில்லையே..!
உளிகளின் ஆதிக்கமில்லாமல் நற்சிலைகள் உருப்பெறுவதில்லயே..!
**************************************************************************************
அப்பத்தாவுக்கு.. அப்போது உடல் நிலை மிகவும் சரியில்லை.... என் அப்பத்தாவை அப்படிச் சோர்ந்து போய் நான் பார்த்ததில்லை... டி.வி.எஸ் மருத்துவ மணையில் .. சொக்கிகுளத்தில் சேர்த்திருக்கிறது... அங்கு இருந்த நாட்களில்.. மிகவும்..புலம்புவார்கள்..
“ இந்தக் கழுதைஹ வந்து பாக்கக்கூட இல்லயே.. வளத்த காரணத்துக்காகவாவது வந்து பாக்கலையே..! ஆமா அவனுக்குப் பத்திரிக்கை வைக்க வந்தப்ப.. வெளியே..போடீன்னுதான் சொன்னேன்.. நாசமத்துப்போக...பாசமுமா அத்துப் போகும்...?”
இந்தப் புலம்பல்..வெம்பல்.. என் முன்னால் தான்.. அப்பா முன்னடி முடியாது.
இந்த நிலையில்..
காலனியில் நான் என் ஃப்ரெண்டு வீட்டில் நின்று கொண்டிருந்தேன்.. அந்த வழியே.. சந்திரசேகர்.. வருகிறார்..! சேகரைக் கூப்பிட்டு நான் சாதுர்யமாகப் பேசுவதாய் நினைத்துச் சொன்னேன்.
“சேகர் .. அப்பத்தா ரொம்பப் புலம்பிக்கிட்டேயிருக்காங்க.. அம்மாகிட்டச் சொல்லி வந்து பாக்கச் சொல்லுய்யா..! அப்பத்தா சொன்ன வார்த்தைகளை அப்படியே.. “வளத்த பாசம் கூடவா தெரியாமப் போகும்” ன்னு நானும் சொன்னேன்.
அப்போது எனக்குத் தெரியாது... நடக்கப் போவது...என்ன? என்று.
கடைசி நேரத்திலாவது அத்தையும், அக்காவும் வந்து பார்க்கட்டுமே என்று நினத்துச் சொல்லியது.

----- தொடரும்..பாகம் 2

Cont'd...
......2..3 நாட்கள் கழிந்திருக்கும்.. சென்னையிலிருந்து சின்ன மாமா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஷண்முக பவனத்திற்கு வந்திருக்க...
அவர்களைக் கூட்டிக் கொண்டு.. மாலையில் செல்வ நிலையம் சென்றேன்...அனவரும் பேசிக்கொண்டிருக்க.. பெரிய அத்தான் பார்வை மட்டும் என் மீதே நிலைத்திருந்ததைக் கவனித்துக் கொண்டிருந்தேன்...
ஓர் நொடியில்.. என் பார்வைக் கோடும்.. அவர்களின் பார்வைக்கோடும் சந்திக்க.. சாமி வந்தது போல் எழுந்து... ஏய் இங்கே வா..? என்று முன் வரந்தாவிற்கு வரச்சொல்லி நகர.. பின்னா...டியே நானும் போனேன்...
“ஏண்டா.. (............................................) என்னவெல்லாம் பேசியிருக்கிறாய் நீ..? என்று சத்தமிட்டபடி என் சட்டையைப் பிடித்துத் திருகி..
விட்டார் ஒரு அறை.. வலது கன்னத்தில்...!
இந்த அடி..!
பழங்கானத்தத்தில் அக்ராஹரத்தில் இருந்த சமயம் ஏதோ நான் செய்த சேட்டைக்கு.. அப்பத்தா என்னைத் தூணில் கட்டி வைத்து அடித்த அடி..!
பசளை பள்ளிக்கூடத்தில்வீட்டுப்பாடம் அவசரமாக எழுதி.. கையெழுத்து சரியில்லை என்று வாத்தியார் எஸ்.பி.ராமன் அடித்த அடி..!
சத்குருவிடம் அம்மாவைப் போடி என்று சொன்னதற்கு வாங்கிய அடி..!
எர்ணகுளத்தில் அப்பாவிடம் வாங்கிய அடி..!
இந்த அடிகள் அத்தனையிலும் பெரிதாக வித்தியாசங்கள் இல்லை.
எல்லாமுமே என்னிடமிருந்த ஏதொ ஒரு தவறை திருத்திக்கொள்ள எனக்குக் கிடைத்த வாய்ப்புக்களாக நினைக்கிறேன்.
எந்த நிகழ்வுமே... அந்தந்த நேரத்து நியாயங்கள்...தானே.
நிகழ்வுகள் பலவும் கலந்ததுதானே வாழ்க்கை.....!
.... தொடரும் ..பாகம் 3


Contn'd
................. அந்த நிமிஷத்தில் யார் யாரோ என்னென்னமோ பேசினார்கள்.. நான் ஆத்திரமாயிருந்தேன்.. ரௌத்திரமாயிருந்தேன்... ஆனால் அழவில்லை. சிவகுமார் மாமா அப்படியே என்னைக் குண்டுக் கட்டாய் தூக்கி வெளியே கொண்டு விட்டார்கள்.. “ வீட்டுக்குப் போயிருப்பா.. நீ” என்று சொல்லி.
நான் எவரிடமும் .. அப்பாவிடமும் இதை ப்பற்றிச் சொல்லவில்லை.
மறு நாள் ஜெயா மாமாவின் திருமணம்
திருமணத்தின் போது .சின்ன மாமா சத்குருவிடம்.. இதைப் பற்றிச் சொல்லிவிட்டார்கள்.... நான் கவனித்தேன்......
சத்குரு எதுவும் பேசவில்லை...! முகம் மட்டும் இருண்டிருந்தது.
அதன் பின் நானும் செல்வ நிலையம் பல நாட்கள் போகவே இல்லை
ஒரு வாரம் கழிந்திருக்கும்... நான் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று.. அங்கே சத்குரு பக்கத்தில்.. வந்தார்கள்..
“ ஏப்பா.. அவன் என்ன உன்ன அடிச்சுட்டானா..?” கேட்கும்போதெ குரல் தளுதளுக்கிறது.. எனக்கும் அழுகை வர.. ஒரு துளி உருண்டோடுகிறது.
அப்படியே என் சட்டை மேல் பட்டனை விலக்கிப் பார்க்க.. நெஞ்சில் விரல் நகக் கீரல் பதிந்திருந்தது.. கண்டுவிட்டு.. அது தெருவென்றும் பாராமல்.
கைகூப்பி.. “ அவனுக்காக என்னை மன்னிச்சுக்கடாப்பா..”.. என்று சொல்லி நின்ற கணத்தில்....
“ நீ என் பிள்ளையடா..! என்று என் அப்பனின் சுட்டு விரல் பற்றி நின்ற கருப்பண் தெரிந்தான்.
(அந்த நிமிஷத்து என் மன உணர்வை 40 வருஷங்களின் பின் இன்று தமிழால் உருவம் கொடுக்கிறேன்..)
அதெல்லம் ஒன்றுமில்லை மாமா.. பரவயில்லை.. இப்ப என்ன .. நீங்க அடிச்சா. என்ன?.. பெரியத்தான் அடிச்சா என்ன..? என்று பேசத் தெரிந்த மனதுக்கு... மௌனமாயிருக்க மட்டுமே முடிந்தது...
கண்களில் மட்டும் வெள்ளம்...பெருக்கெடுத்தது..!
என்னை அடித்த அதே கைகள்.. எனக்கு ஆசிகள் வழங்கவும் செய்தன..
நான் விமானப்படையில் அம்பாலா என்ற இடத்தில் இருந்தபோது பெரிய அத்தான் உரிமையோடு வந்து தங்கியதும்..! .. வெள்ளியில் டம்ளர் ஒன்றை அக்கா பரிசாக வழங்கிச் சென்றதும்....
.....பெரியத்தான் தன் இறுதி நாட்களைத் தாங்கொணாத வேதனையுடன் கழித்துக்கொண்டிருந்தபோதும்.. என் மனைவியின் உடல் நிலை குறித்து..நினைவு கூர்ந்து... இந்தச் சின்ன வயசில்.. ஜெகதீஸ்வரிக்கு இருக்கும் வேதணையை விடவும் தனக்கு வந்தது பெரியதல்ல என்று கூறியதும்.......
வாழ்க்கையின் இருமை நிலைகளைக் கற்றுக் கொடுத்தன என்றால் அது நிச்சயமாக மிகையில்லை.
குளிர்ச்சியின் மறுகோடி தானே வெப்ப நிலை....!
அன்பின் மறு கோடிதானே.. வெறுப்பும்..!



Subhasree Sundaram பாமா அம்மா அழுத்தமாய் சொல்வது போல் - குணபூஷணம்  in real sense..

Subhasree Sundaram We as a group are oxymorons - முரண்களின் உச்சத்தில், 360°புள்ளியில் இணையும் ஆலவட்டங்கள்.


Aravindan Selvaraj Great writing annathe..excellent tempo. It takes a legendary step to apologise. And even more to forgive and forget! Life goes on..


Aravindan Selvaraj Oxy"morons"...smile emoticon

இலை 9
சத்குரு : பதிவு 5:
முதல் சங்கம்:
ஓம் அஸ தோமா ஸ த் கமய
தமசோமா ஜோதிர்கமய
ம்ருத்யோர்மா அமிர்தம் கமய...
ஓம்சாந்தி சாந்தி சாந்தி [இதன் பொருள் ]
என்னைப் பொய்யிலிருந்து உண்மைக்கும்..
இருளிலிருந்து ஜோதிக்கும்..
மரணத்திலிருந்து.. மரணமில்லாப் பெருவாழ்விற்கும்
இட்டுச்செல்வாயாக..! மூன்று வகையிலும் பேரமைதி நிலவட்டும்..!

நான் தீக்க்ஷை பெருவதற்காக ஈஷா யோக வகுப்புக்காளில் இருந்தபோது..
முதல் கவளம் உண்பதற்கு முன் சொல்லவேண்டிய மந்திரம்.. என்பதாகச் சொல்லப்பட்டது
*****************************
முதல் சங்கம் அமுதூட்டும்....... திருமந்திரம்.
‘ஓங்காரத்துள்ளே உதிக்கும் பரம்பொருளே...’
இந்தப் பாடல் பாடும் ஒவ்வொரு சமயமும்.. என்னுள்ளே பதிந்திருக்கும் அந்தக்குரலின் வழியேதான் செவி மடுக்கிறேன்... ஸ்ரீமன்.ஏ.எஸ்.பி யின் குரல்.
முதல் முதலாய் வாழ்க்கையோடு இணையும் எதுவும்.. நெஞ்சுக்குள்ளே அச்சாய்ப் பதிந்துவிடத்தானே செய்யும்...!
மிகச் சில பிம்பங்கள்.. முருகாத்தாத்தாவின் திவ்ய வடிவினை ..
சிர்ரஸ் மேகத் தீற்றலினூடே தெரியும் நிலவு போல்.. மனதில் பதித்திருக்கின்றன.
( என்னுடைய SENSORY PERCEPTIVE CORTEX ஞாபக... மூளை அடுக்குகளுக்கு .. நன்றி)
அம்மையம்பதியில்.. அந்தக்காலத்தில் நெடுஹாலைத் தாண்டி இருக்கும் அந்த அறையில் .. பூஜை அறை இருந்தது நினவிலிருக்கிறது..
அங்கே அவர்களுடன் அமர்ந்திருந்தது....
சந்தன மணத்துடன் எனக்குச் சந்தனம் வைத்துவிட்ட அந்த விரல்கள்..
அவர்களுடன் பக்கத்தில் சப்பணமிட்டு.. சாப்பிட உட்கார்ந்தது நினைவில் இருக்கிறது...
வாழை இலையில் சாப்பாடு பரிமாறப்பட... கருவேப்பிலைப் பொடி நெய் விட்டுப் பிசைந்து.. உருட்டி.. எனக்கு ஊட்டி விட்ட
முதல் கவளம்...
நினைவில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது...
இது ‘முதலாவது’ முதல் சங்கம்... எனக்குக் கிட்டிய பேறு...!
*************************************************************************************
சத்குருவிடம்... பல நாட்கள் உடன் இருந்து சாப்பிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.
இலையின் சுத்தம்...
ஒன்றோடொன்று கலவாத பல வண்ண உணவு வகைகள்..
தயிர் சாதம் அள்ளிச் சாப்பிடும்போது ஒரு லாவகம்..சாப்பிட்டு முடியும் வரை தயிரின் வெண்மை அப்படியே இருக்கும்..
( இது என் அப்பாவிடமும் கண்ட ஒரு விஷயம்.)
பருப்பும்.. நெய்யும்.. கலந்து
முதல் கவளம் .................எனக்குக் கிடைக்கும்..
விபூதி மணத்துடன் ..அத்தை அவர்களின் கைமணமும் கலந்து எல்.சுப்ரமணியன்.. லுக்பாண்ட்டி.. இவர்களின் ஃபயூஷன் இசை போல இருக்கும்...போங்களேன்..!
மாம்பழம் இருந்தால் இன்னும் விசேஷம்....
மாம்பழம் சத்குருவின் மிகப்பெரிய ‘வீக் பாயிண்ட்’ என்பதும்...
மாம்பழம் வேண்டி கோபித்துக்கொண்டு வந்த முருகனோ..!
அதைவிடப் பெரிய “வீக் பாய்ண்ட் என்பதும் .....கவனிக்கப்படவேண்டியது
( ‘ப்ளஸ் பாயிண்ட் வீக் பாய்ண்ட் ஆவது முருகனிடம் மட்டுமே சாத்தியம் ) ‘
இது இரண்டாவதாய் மற்றுமொரு முதல் சங்கம்...!
ஏனெனில்.. நான் மிதுன ராசிக்காரனல்லவா..?
அவர்கள் புகட்டியது.......
அந்த முதல் கவளங்கள் " இரண்டு " மட்டும் அல்ல...
வாழும் வகையறியும் உபனிஷத்துக்கள் பல என் அத்தணை புலன் களின் வழியும் ஊட்டப்பட்டது ... என்பது உணர்ந்த உண்மை
**************************
இன்று என் மகள் கண்மணி சொல்கிறாள்..” அப்பா நீங்க சாப்பிடறதப் பாத்தா..ஆசையா இருக்குப்பா. நானும் உங்க கூடவே சாப்புட்றேன் பா...”
எனக்குக் கிட்டிய பேறு...!





Karuppiah Shanmugam எவரிடமும் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்

சாபிடுவதில் என்ன ஒழுங்கு என்று !

ஆனால்பல வண்ண காய் கொழம்பு ஒன்றுடன்

ஓன்று சேராமல் அந்தந்த எல்லைக்குள் வைத்து

உள்ளங்கையில் கூட படாமல் சாப்பிட சொல்லி தந்தவர் எங்க பெரியப்பா .... பசலை மக்களுக்கே என்றால் .ஹீ ஹீ

Ravindran Aiyadurai அப்பா அவர்களின் பருப்பு சாதப் பிசைவின் கைஒட்டிய மீதத்தை தட்டின் விளிம்பில் வழித்து சாப்பிடும் போதுஅருகமர்ந்து சாப்பிடும் எங்களுக்கும் ஒரு பங்கு அந்த அமிழ்திற்கு சீதாக்குட்டி வைத்த பெயர் "பக்கம்"

Ravindran Aiyadurai அரவிந்தரைத் தொடர்ந்து அருண் தவச் செல்வங்களின் அணிவகுப்பு -- தொடரட்டும் தொய்வின்றி



இலை 10
சத்குரு : பதிவு : 6
இதற்கு முன் – 
குரு, சத்குரு இவர்களின் திருக்கைகளால் உண்ட அமுதம், பட்டினத்தார் சொற்களைத் திருமந்திரம் ஆக்கி இருப்பது எதேச்சையாய் நிகழ்ந்ததென்றால்.. எவர் கண்ணிலும் படாமல் இருப்பதும் எதேச்சை என்று கொள்ளவில்லை.
இப்போது ‘மொய்குழலார் ஆசை ‘ விலக்கி’, சத்குரு ‘நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டியதைப்’ பகிர விழைகிறேன்.
திருமணங்கள் பத்துப் பொருத்தம் பார்த்து, பெரியோர்கள் நல்லாசிகளுடன் நடந்து கொண்டிருக்க... சத்குருவுக்கு இவைகள் என்றும் இரண்டாம் பட்சம். சத்குருவின் தொலை நோக்குப் பார்வையில் நிகழ்ந்த திருமணங்கள் இங்கே ஏராளம். உறவுகளின் வளமைக்காகச் சமூக சிந்தணையோடு ஒரு பெண்ணையும் ஆணையும் சேர்த்து வைக்க எடுக்கும் முடிவுகள்.. மிகவும் ஆச்சரியகரமானவை.
இவர்களின் தேர்ந்தெடுப்பில் இருக்கும் மணமகனோ.. மணமகளோ ஒருவித தியாக உணர்வோடு அந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இருக்க வேண்டிய சூழ் நிலை இருக்கும். ஆக சத்குரு முன்னிறுத்தும் ஒவ்வொரு திருமணத்திலும் ஒரு நிமித்தம் நிச்சயம் இருக்கும். அது புரிந்துவிட்டால் சத்குருவின் பிரம்மாண்டம் புரிபடும். உறவுகளின் அருமை உறைக்கும். !
செல்வ நிலைகளைத் தாண்டிய ஆதரவின் முக்கியத்துவம் பிடிபடும்.!
தன் பிள்ளைகளுக்கு அமைந்த திருமணங்களே இதற்குச் சான்றுகள். தன் பிள்ளைகள் என்று சொல்வதில் என் தகப்பனும் அடக்கம். தங்கை பிள்ளையை வேறாய்க் கருதியதே இல்லை என்பதை நான் சொல்லத் தேவையே இல்லை. 
சற்று விளக்கமாய்ப் பதிவு செய்கிறேன்.
என் தகப்பன் எப்படி இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே..! என் அம்மாவைக் கரம் பிடிக்கையில் என் அப்பாவின் மன நிலை என்ன என்பதை என்னிடம் பகிர்ந்திருக்கிறார்கள். எப்படி அப்பா இதற்குச் சம்மதித்தீர்கள்?.. என்று நானே கேட்ட பொழுது..
அப்பாவின் பதில்.
“ இவளா எனக்கு ..? கேட்டது என் மனம்
இவள்தான் உனக்கு என்றது சுற்றம்..?.. 
இது தகப்பன் இல்லாது போனதற்காக.. எதன் காரணத்தை முன்னிட்டு மேற்கொண்ட சமரசம்..?
இது எனக்குள் எழுந்த கேள்வி.. அந் நாட்களில்.! 
ஒரு அழகான, இளவரசன் போன்றவன் மனதில் எப்படியெல்லாம்.. ‘மொய்குழலார் ஆசைகள்” நிறைந்திருக்கும்..? முன்னின்று நடத்திய சான்றோர் எப்படி இதைப் பார்த்திருந்தார்கள்..? 
மணமாலை சூடி என்னைப் பெற்றவர் தம்பதியராய் வீற்றிருக்க... எத்தணை விமர்சனங்கள் ஓடியிருக்கும்..?
பிள்ளையாரே.. தனக்கு வருபவள் .. தன் தாயார் போன்றிருக்க வேண்டும்.. என்று நினத்ததால் தானே.. ஓடிப்போய் குளத்தங்கரையில் உட்கார்ந்தார்..?
கணபதிக்குத் தெரிந்தது அருணாசலத்திற்குத் தெரியவில்லை..!
(...அங்கேயும் உமையவளும் கருப்புத்தானே..!..)
என் தகப்பனுக்குச் சொல்லக் குரல் எழுந்தபோது...
அங்கே ஒலித்தது சத்குருவின் குரல்..
“அப்பா அருணாசலம்.. அச்சம்பத்துப் பொண்ணு திரும்பிச் சென்றால்... உன் தங்கச்சி (ராதா அத்தை) திரும்பி வந்துவிடும்.. பார்த்துக்கோ..!”
இதற்கு மறு வார்த்தையும் உண்டுமோ..?
என் அம்மாவை ஏற்றுக் கொண்டு..வாழ்ந்தார் என் தந்தை.. 
எத்தணையோ இடி .. மின்னல்களினூடே..!
ஒரு நாள் என் கல்லூரிப் பருவத்தில் என் தகப்பன் அம்மாவுக்கு எழுதிய கடிதத்தை என்னிடம் காண்பித்தபோது.. 
அதில் இழையோடியிருந்த அன்பை,, அன்னியோன்யத்தை.. 
கண்டு குறை தீர்ந்தேன்..! வெளித்தோற்றங்களிலே வாழ்வதில்லை வாழ்க்கை..!
அப்படியே.. ஏற்றுக்கொண்டு வாழ்வதே வாழ்க்கை.. என்று கற்றேன்.
பின்னாட்களில்.. 
என் முறை வந்தபோது..
இவள்தான் உனக்கு என்றது.! என் பெற்றொர்..
இவளா உனக்கு ..? எனக் கேட்டது சுற்றம்..!
இந்நிலையில்....
என் தகப்பனை உதாரணம் கொண்டும்.. 
சத்குரு ஜோசியர் தாத்தாவிடம் என் ஜாதகத்தை புயல் அடித்திருந்த ஒரு காலத்தில், எடுத்துக்கொண்டு சென்ற பொழுது .. கூறிய.. “அய்யா..! உங்களுக்கும் தம்பிக்கும் ஒரே மாதிரி விவாஹப் பொருத்தம்... இடி .. மின்னல் யாவும் இருக்கும் ஆனால் பிரிவினை என்பது இல்லை..!” என்பதையும்...நினைவில் கொண்டு..
என் திருமணத்தின் ‘நிமித்தம்’ எது என்றும் புரிந்துவிட.. 
என்பாற்பட்ட எதிலும்.. சத்குருவின் தாக்கம் இழையோடியிருப்பதை உணர்ந்தபடி
வாழ்ந்து வருகிறோம் .. இனிய மக்களோடு..!
பதிவு : 6 ன் தொடர்ச்சி :
சில பதிண்ம வருஷங்களின் முன்..
திருமணம் என்பதன் பொருளும்.. விளக்கமும் சில பல தவிர்க்க முடியாத காரணங்களையும், காரணிகளையும் உடன் கொண்டிருந்தது.
ஆனால் சமீப காலங்களில் மனங்களின் சிந்தணைத் தளங்களில் இது பற்றிய எண்ணங்கள் மிகவும் மாறுபாடு கொண்டதாயும்.. புரட்சிக் கருத்துக்களை உள்ளடக்கியும் இருந்து வருகிறது. இதற்குக் காரணங்களும் நிறைய...
அந்த நாட்கள் போல ஆளுமையாலும்.. அதிகாரத்தாலும் ஆட்சி செய்ய முடிவதில்லை.. பணிவு இருபுறமும் எதிர் பார்க்கப் படுகிற அதே நேரம் இருவரிடமுமே அது பெரும்பாலும் இருப்பதே இல்லை..
மனைவிதானே...என்றோ! கணவன் தானே.. என்றோ!! என்று ஒருவர் மற்றவர்க்கென மனதுக்குள் இதமான எண்ணங்கள் எழுவது.. இல்லை என்றாகிவிட்டது..
விரும்பியது அமையாவிடில்.. அமைந்ததை விரும்பு.. என்பதும் அவ்வளவு சுலபமானதாய் இல்லை..
விரும்பியதே அமைந்து விட்டாலும் .. சமரஸங்களோ.. விட்டுக் கொடுத்தல்களோ.. மயக்கங்கள் தீர்ந்தபின் தேவையே இல்லை என்றாகிவிடுகிறது..!
கொஞ்சம் கொஞ்சமாய்த் திருமணம் என்பதில்.. நம்பிக்கை குறைந்து வருகிறது.. கண்கூடாகத் தெரிகிறது.
திருமணம் ஆனவர்கள் எல்லோரும் வாழ்கிறார்களா..? உழல்கிறார்களா..? என்பதும் கேள்விக்குரியதாக இருக்கின்றது.
அவரவர்க்குறிய ஏக்கங்களோடு சேர்ந்து வாழ்தலும்... 
அவரவர்க்குறிய தேடுதல்களோடு தனித்து வாழ்தலும்...
அனைத்திற்குமே அதற்குறிய நியாயங்கள் நிச்சயம் உண்டு... 
இவை அனைத்தும் தாண்டி... 
மனதில் விரியும் வாழ்வெனும் பெருங்கடல்
கரை ஓர அலைகள் அனைத்தும் தாண்டி.. 
அதைக்கடக்கும் உரிய காலங்களும் தாண்டி..
அலைகளற்ற கடலும்.......
அலைகளற்ற இடத்தில்.. மிதக்கும் படகும்...
அதைத் தள்ளும்பொருட்டு
கண்களில் பதிவது ஒற்றைத் துடுப்பல்ல.. 
இரண்டு..!
ஒன்று ‘ குரு “ வினுடையது.. மற்றும்.
ஒன்று.. ‘சத்குரு ‘ வினுடையது.....
இலை 11
சத்குரு : பதிவு : 7
சாது மிரண்டால்.... !!
குருக்களின் திருமேனி கண்டு, திரு நாமம் செப்பி அவர்தம் திரு வார்த்தை கேட்கும் பொருட்டு சிந்திக்க வேண்டி இருப்பதற்காக அந்தப் படகு இரண்டு துடுப்புகளுடன் நமக்காகக் காத்திருக்க.. ஒரு சுற்று பழங்கானத்தம் சென்றுவிட்டு வருவோம்.
செல்லும் வழியில் .. ஜெகதா தியேட்டர்.
அதன் மேல் விளக்கை ஏந்தி முறுக்கிய மீசையுடன் நிற்கும் அந்தச் சிலை.. பழங்கானத்தத்தின் முக்கிய அடையாளம். போகும் போதும் வரும் போதும் சிறுவன் என் கண்கள் அதன் மேல் பதியாமல் இருந்ததில்லை.
அப்போது “சாது மிரண்டால்” படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
பீம்சிங் டைரக்ஷனில் நாகேஷ், பாலையா மற்றும் டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்தது.
“கோயில்லாம் காண்பிக்கிறாளாம் “ என்று யாரோ சொன்னது கேட்டு.. சத்குரு எங்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு.. போக..
போய் உள்ளே உட்கார்ந்து.. மங்கலான வெளிச்சம்.. சிகரெட்.. பீடி புகை மற்றும் வியாபரச் சத்தங்கள் வியாபித்திருக்க..
சிவப்பு கலரில் திரையை மூடி சூப்பராக திரைச்சீலை தொங்கும் .. அதன் கீழ் நுனியில் வண்ண விளக்குகள்.. எரிவதற்குக் காத்திருந்தோம்..
அந்தத் திரை சுருண்டு மேலெழும்ப.. ஒரு ம்யூசிக் போடுவார்கள். வென்சர்ஸ் க்ரூப்பின் ஒரு அழகான இசைப் பதிவு.. 
ஒவ்வொருமுறையும் இந்த இசை ஒலிக்கும்போது.. இங்கே சத்குருவின் வீட்டில் பின் புறத்தில் அந்த இசை கேட்கும் .. அதை மிகவும் ரசிப்பேன்.
விளக்கு எரிந்தது... திரை எழும்பியது.. இசை ஒலிக்க.. மனசுக்குள் உற்சாகம்..அப்பல்லாம்.. சினிமா பார்க்கப் போறோம் என்பது..குறைந்தது 10 நாட்களுக்காவது பேசப்படும் விஷயம்.
விளம்பரம்.. இண்டியன் ந்யூஸ் ரிவ்யூ.. அதன் பின்.. படம்..
ஆரம்பித்தவுடன் இரண்டு .. கார் விளக்குகள் இருட்டில் வரும்.. வயிற்றில்.. மெதுவாக பயம் .. எட்டிப் பார்த்தது.. 
தொடர்ந்து.. தொப்பி அணிந்த நடிகர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது..என்று படம் ஓட.. ஒரு காட்ஷியில் கார் டிக்கியினுள் ஒரு டெட் பாடியைக்.. காண்பிக்க.. அதில் மிரண்டு.. தலையைக் குனிந்தவன் தான் படம் முடியும் வரை.. நிமிர்ந்து பார்க்கவே இல்லை..
நடுவில் இதைக் கவனித்த சத்குரு.. மடச்சாம்பிராணி என்று அவர்களுடைய இருக்கைக்கு பக்கத்திலேயே.. நிற்க வைத்து என்னைப் படம் பார்க்க வைக்க மிகுந்த பிரயத்தனப்பட்டார்கள்.. 
போதாததற்கு..
அவர்கள் நினைத்துப் பார்க்க வந்தது போலப் படம் பக்தி மணம் கமழ இல்லாமல் போக...முழுக் கவனமும்.. கோபமும்.. என் மீதில்...
நானும் விடுவேனா என்ன..? படத்தையே பார்க்கவே இல்லை... அன்றைக்கு அவர்கள் கோபத்திற்கு வடிகால் நான் மட்டுமே..!
அன்று மிரண்டவன் தான்...
அதற்கப்புறம் சினிமா என்றாலே.. பிடிக்காது என்று சொல்லிவிடுவேன்..
சத்குருவிடம் ‘ குட் பாய் ‘ என்று பெயரும் வாங்கினேன்...!
ஆனால் அந்தப் படம் உண்மையிலேயே காமெடிப் படமாம்..
அதான் விஷயமே...!
இலை 12
சத்குரு : பதிவு : 8
எப்படியெல்லாமோ ஸ்கூல் வாழ்க்கையை அனுபவித்திருக்கலாம் பலரும்.. சத்குருவின் இறகின் கதகதப்போடு... இங்கே 
நான் என் நினைவுகளைப் பகிர்கிறேன்.
டி.வி.எஸ் ஸ்கூலில் இர்ண்டாவது வகுப்பு. என் சேட்டைகள் சற்றும் குறைவில்லாமல். தனசேகரன் என்பவன் நண்பன் என்னோடு. இங்கிருந்து கிளம்பி சாலையின் வழி செல்லும் போது.. முதலில் தேடுவது குரங்குக் கூட்டம். அனேகமாக கண்களில் தட்டுப்பட்டுவிடும். அப்புறமென்ன.. ‘இன்னும்கொஞ்ச நேரம் இருந்தாக்க என்ன..? ங்கற அளவுக்கு அளவளாவி.. 
ஒருமுறை அந்தக் குரங்குக் கூட்ட்த்தில் ஒரு குரங்கு.. ஒரு வீட்டு சாக்கடைத் துளையினுள் தலையை விட்டு.. எடுக்க முடியாமல் திணற.. அங்கே குரங்குகளின் கூட்டம்.. சற்று நேரத்தில் அது இறந்தும் விட்ட்து. 
அதற்காக ஒரு கோயிலும் கட்டியிருக்கிறார்கள். நாங்கள் குடியிருந்த தாஸ் வீட்டு முன்பு.
அப்புறம் நடை. வழியில் மைக் செட் கடையில்.. ‘விழியே.. விழியே..உனக்கென்ன வேலை.. ன்னு பாட்டு அந்த சீசனில் ஹிட்.. அது காதில் விழும்.
ரோட்டை க்ராஸ் செய்ய எங்களுக்குள் ஒரு கண்டிஷன். ஒரு டைகர் லய்லேண்ட் (எண்.5 திருப்பரங்குன்றம் ) பஸ்ஸையாவது.. பார்த்துவிட்டு..அந்த புலி எம்பளத்தைப்.. பார்த்துவிட்டுத்தான் கடப்போம். இந்த பஸ் 4 ம் நம்பர் தெப்பக்குளம் ரூட்டிலும் ஓடியது. 
காலையிலாவது .. ஒரு பஸ். 
மாலையிலோ 5 பஸ்கள் வரும் வரை காத்திருப்போம்.
ஒரு நாள் இப்படித்தான்.. பஸ்கள் தாமதமாக வந்துகொண்டிருக்க.. நாங்களும் 5 எண்ணிக்கைக்காக்க் காத்திருக்க... எங்களை வெகு நேரம் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த சத்குரு .. கண்காணித்துவிட்டு.. இந்தப் பக்கம் வந்து... தலையில் தட்டி அனுப்பி வைத்தது... 
இன்னொருமுறை..
ஸ்கூல் விட்டு வரும் போது.. வருவது கோவலன் பொட்டல்.
தன் முயற்சியில் சற்றும் தளராத... விக்கிரமன்.. கதையில் வரும் மரம் கோவலன் பொட்டலில் இருக்கும் அந்த ஆலமரம் தான் என்பது எங்கள் கற்பணை..
“இங்க தாண்டா.. கோவலனை வெட்டினாய்ங்களாம்..” அனேகமாக தினசரி இதைச் சொல்லிக்கொள்வோம்.
அதற்கு எதிர்த்தார்போல் ஒரு குளம் இருக்கும்..
ஒரு நாள் அங்கே .. நிறைய காகங்களும்.. கொக்குகளும் பறந்திருக்க..மண்ணும் நீரும் சம விகித்த்தில் கலந்தாற்போல இருந்த குளகுளப்பில் மொலு மொலு வென்று சிறிய மீன்கள் பல.. நீந்திக்கொண்டிருக்க..
அப்புறமென்ன.. தீர்மானித்தோம்.. செயலிலும் இறங்கி விட்டோம்..
கைகளால் பிடிக்க முடியவில்லை. எல்லாம் துடித்து நழுவுகின்றது..தனசேகரன் சொன்னான்.. “சட்டையை கழட்டி வலை போடுவோம்டா..”
எப்பேற்பட்ட யோசணை.. நண்பேண்டா..!
நல்ல வெள்ளைச் சட்டை.. கழற்றி மீன் பிடித்தோம்.. முதல் மரியாதை படம் பார்க்கும் போது இந்த ஞாபகம் வந்த்து. சில நேரங்களில் ராதா .. தனசேகர்ர்களாக மாறி விடுவது.. பிராயத்தின் கோலம் போலும்..!
மீன் பிடித்தாகி விட்ட்து.. கொண்டு போகவேண்டுமே..?
இந்த முறை நான் ..” அதான் டிஃபன் டப்பா இருக்குல்ல..”
துடிதுடிக்க சம்படத்தில்மீன் களோடும்.. மனதில் ஒரு புலியை கொன்ற பெருமித்தோடும்.. பனியன் எல்லாம் சகதியோடும்... தோளில் ஷூக்களை மாட்டிக்கொண்டு.. எங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம்... தொடர்ந்த்து வீடு நோக்கி...
வழியில் நிறையப் பேர்களின் பார்வை.. எங்கள் மேல் தங்கியது...
இன்று 5 பஸ் கணக்கெல்லாம் இல்லை. அந்த ரூலுக்கு லீவு..இன்னக்கி..!
வீடும்.. வந்தது..! ஆனால்...நடந்ததோ..!
அப்பத்தாவுக்கு.. கோபமும்.. ஆத்திரமும்.. புறப்படு என்னோடு..! என்று தருமியை அழைத்துகொண்டு செல்லும் அதே பாணியில் சத்குரு வீடு நோக்கிப் பயணம் நீடிக்க.. எனக்குள் ..என்னென்னமோ.. நடந்துகொண்டிருந்த்து..
தனசேகரனை எப்போதிருந்தோ காணவில்லை..! 
தொடரும்...

சத்குரு பதிவு 8 ந் தொடர்ச்சி :
தொலைந்தோம்..டா.. இன்று நினைத்துக்கொண்டிருக்க வீடும் வந்துவிட்ட்து. இந்த மாதிரி நேரங்களில்.. வீடெல்லாம் சீக்கிரம் வந்துவிடும்.. கொஞ்சம் கூட மேனர்ஸே இல்லாம..!
குற்றவாளிக்கூண்டுதான் அங்கில்லை..! பராசக்தி சிவாஜி போல் நான் மட்டும்..!
“அண்ணே! இவன் பண்ணியிருக்கிற வேலையைப் பாத்தீகளா..!” என்று விவரிக்க
சத்குருவுக்கு ஒரு கணம் என்னைக் கண்டு.. கோபம் வந்தாலும் அதையும் மீறிச் சிரிப்பு வந்துவிட..
“ குலப்பெருமையைக் காப்பாத்திட்டடா.. எங்க.. காட்டு பார்க்கலாம்..” ன்னு சொல்ல..
ஒரு மாதிரி நம்பிக்கையில்லாமல் திறந்து காட்டினேன்...
(இன்னக்கி உதையா.. விசிறிக் கம்பா..?)
இன்னும் சத்குருவின் முகத்தில் சிரிப்பு மாறவில்லை...
அப்படியே.. அப்பத்தாவிடம்..” சௌந்தரம் ஒம் பேரன் என்ன பிடிச்சிருக்கான்னு பார்த்தியா..?” என்று கேட்டபடி சம்படத்தைக்காட்ட..
இப்போதுதான் நானும் கவனித்தேன்...
அதிலிருந்தது.... மீன்களல்ல..! 
தலைப்பிரட்டைகள்..!
அதற்கப்புறம் பாப்பா அத்தாச்சி யுடன் தான் ஸ்கூல் என்ற நடமுறை வழக்கத்திற்கு வந்த்து.
அப்பவெல்லாம் தனசேகரன் தனியாத்தான் போவான் ஸ்கூலுக்கு. பாவம்.!!


இலை 13
சத்குரு : பதிவு 9 :
இசையும் சத்குருவும் :
“ இசையில் வசமாகா இதயமெது...? இறைவனே இசை வடிவம் எனும் போது..!”
‘’ராதா..ஸமேதா கிருஷ்ணா..! கிருஷ்ணா..!...
ஷெண்பகவள்ளி அத்தாச்சியின் குரல். ஒலிக்கிறது...அந்த ஹாலில் அனவருமே அமர்ந்திருக்க....கணீரென்ற குரல். கே.பி.எஸ். ஸின் கம்பீரமும்.. சொல் தெளிவும்...” அன்றைக்கெல்லாம் சூபர் சிங்கரோ...சப்தஸ்வரங்களோ இல்லை.. இருந்திருந்தால்...! 
அந்த ஆர்வத்தை உணர்ந்த சத்குரு.. இசை முறையாகப் பயில வகுப்புக்கு அனுப்பி வைத்தார்கள். கோமதி என்று அத்தாச்சியின் தோழி ஒருவரை ஞாபகம் இருக்கிறது.
‘முருகா.. முருகா.. வென்று பாரதியின் பாடலை எத்தணை முறை கேட்டாலும்.. தெவிட்டாத இனிமை...” 
நம் வீட்டில் ஒரு ராகம்.. 
சீர்காழியின் குரலில் ஒரு ராகம்...
வாணி ஜெயராம் குரலில் ... முருகனே குழந்தையாய்த் தவழ்வது போன்றதொரு ராகம்...
விஜி அத்தாச்சியின் குரலில்... “ நமச்சிவாய வாழ்க பாடலும்.. அதை “ பூங்கழல்கள் வெல்க..! என்று மென்மையாய் முடிக்கும் அழகும் நான் வெகுவாக ரசித்தவை.
ஓரிரு சந்தர்ப்பங்களில் சத்குருவின் குரலும் நடுவில் இழையும்..
.சத்குருவின் குரலில்.. கேட்கும்போது... உச்ச ஸ்தாயியில் சஞ்சரிப்பதில்லை. ...குரலின் வரைமுறை.. எல்கைகளுக்கு கட்டுப் பட்டாற்போல்.. ஒரு கிடை மட்டப் ப்ரயோகம்...அதன் கவர்ச்சியும்.. ஈர்ப்பும்.. படர்க்கையும் ..
ரம்மியமான ஒரு வருடல்.
“ வீரவேல்..... விண்ணோர் சிறை மீட்ட தீர வேல்...” என்னுடைய ஃபேவரிட்.
“ அயிகிரி நந்தினி.. நந்தித மேதினி....”
இது விஜி அத்தாச்சியின் குரலில் ஒலிக்கும்போது.. கண்களை மூடிக்கொண்டு கேட்டால் . சுசிலா அம்மா பாடுவது போலிருக்கும். இவர்களின் கோலக் கம்பிகளில் மெல்லிய ஆனால் அழுத்தமான .. கோடுகளுக்கும்... இவர்களின் குரலுக்கும் ஒருவிதத் தொடர்பு… குரலின் ஃபிஸிகல் ரெப்ரெசண்டேஷன் போல...
“பண்ணின் இசையாகி நின்றாய்.. போற்றி...” என்னுடைய விருப்பமான தேர்வு..அவர்களின் தேன் குரலில்..
இப்படி சத்குருவின் பிள்ளைகள் மாலை நேரங்களை.. பக்தி மணம் கமழத் தெய்வீகமாய் மாற்றிக் கொண்டிருக்கும் பல வேளைகளில்.. 
ஓரத்தில் நானும் பாட முயற்சித்துக் கொண்டிருப்பேன்..
அந்தத் தருணங்களில்...
ஒவ்வொரு பாடலின் முன் எழும் இசைக் கருவிகளின் ஒலியில்... பாடும் குரல் ஒலிக்கும் முன்பு அந்தப் பாடல் என்னவென்று கண்டுபிடிக்க.. மனது இசையுடன் பயணிப்பது.... போன்றதொரு சுகானுபவம்....
உதாரணத்திற்கு.... இசைக்கருவிகள் ஆரம்பிக்க மனம்..”இது சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ..” பாட்டு என நினைத்துக்கொண்டிருக்கும்போது...’அய்ய்யோ.. இது “ அழகிய மிதிலை நகரினிலே..” ன்னு மாறி.. பிறகு “ நேற்று வரை நீ ..யாரோன்னு..” பாடல் ஒலிக்கையில்... (முடிந்தால் கேட்டுப்பாருங்கள்)
மனதுக்குள் பெயர் தெரியாது ராகங்கள் நர்த்தனம் ஆடிக்கொண்டிருப்பது தெரிய வருவதும்...
இசையின்பால் மனதைச் செலுத்தக் கற்றுக்கொண்டதும் தெரிய வருகிறது
“ நின் தத்துவம் தவறென்று.. 
சொல்லவும் அவ்வையின்.. 
தமிழுக்கு.. உரிமை உண்டு..” 
என்ற வரிகளைச் செவி மடுக்கையில் விழியோரம் எப்பொழுது கேட்டாலும் துளிர்க்கும் ஒரு துளியில் “இறைவனே இசை வடிவம்” என்ற பரவசமான பேருண்மையை 
சத்குரு உணர்த்தியிருப்பதை என் மனது உணர்கிறது.....
""பெறாமல் பெற்றென்னை.. ..பெரிதும் மகிழ் அன்னையும் நீ
பேணி எனை வளர்த்த தந்தையும் நீ
கற்ற கலை யாவினிற்கும் குருவும் நீ ....."".

இலை 14
சத்குரு : பதிவு 10 :
Written on 23 May :
9 ஆம் எண் இறைவனுக்குச் சமீபம் என்பதால் பதிவு 9 ல் இறைஉணர்வை இசை மூலம் உணர வைத்த சத்குருவின் மேன்மை கண்டோம்.
இன்று காலை வண்டியூரில் தாயாய் நிற்கும் மாரி அம்மன் எழில்மிகு கோலம் கண்டும்.. நாளை எங்கள் குலதெய்வம் கும்பிடப்போகும் நல் நினைவில் உளம் நெகிழ்ந்து.. உருகிக் கொண்டேயிருக்க....
குருவாயும்..சத்குருவாயும்.. அவர்களைப்ப்ற்றிய கருத்துப் பகிர்வுகள் ஏன்? என்பதை நம் குழந்தைகள் அறியும் வண்ணம் .. உற்று நோக்கி அவர்களின் தரிசனம் கிட்டாதவர்க்கும்.. ஒரு உருவெளிக்கோடாகவாவது அவர்கள் காட்சி தரட்டும்.. என்ற அவாவில்.. இந்தப் 10ம் பதிவு.. ... 
குரு ( ASP ) விடம் சத்குருவுக்கு இருந்தது பெருமதிப்பும்.. பேரன்பும் கலந்த உறவு..
அவர்களிடம் கற்றதும் அதற்குத் தக நின்றதும்... மனதில் பெரு வியப்பை ஏற்படுத்தும் ..! 
குருவிடம் தான் கற்ற அனத்தும்.. சந்த்தியர்க்கும் செல்ல வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் சத்குரு வாழ் நாள் முழுதும் வாழ்ந்திருந்தார்கள்
அதனால் அவரின் பேர் விளங்க வைத்து நின்ற மகன் நம் சத்குரு..
சுற்றமும்.. நட்பும் சூழ வாழ்ந்திருந்தவர்.நம் சத்குரு..
இதற்கு நடுவில்.. இரண்டாம் உலகப் போரும்...போர்முனையில்.. வீரனாகவும் உருக்கொண்டவர் சத்குரு.
சுபாஷ் சந்திர போஸின் நம்பிக்கையான.. நேர்முக வீர்ர்.
காந்தீயச் சிந்தனைகளும்.. நேருவின் உலகம் தழுவிய விஸ்வரூபமும் கண்டு.. சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்ட வீரமகன் .. நம் சத்குரு.
ஒரு சிறந்த மூத்த சகோதரனாய்.. தங்கை தம்பியரின் நல்வாழ்வுதனில் பெருவிருப்பம் கொண்டவராய்...
கணவனை இழந்து பரிதவித்த முதல் தங்கை..பெற்ற பிள்ளையை தோள் மேலிட்டுத்.. தாய் மாமன் தான் தகப்பனாய் உருமாறியவர் சத்குரு..
பிள்ளைகள் ஐவரை விட்டுத் தங்கை தெய்வமானதும்... தெய்வமே அம்மாவாய் மூத்த தங்கை அப்பிள்ளைகளுக்கு ஆகிவிட.. அர்ணாய் நின்றிருந்தவர் சத்குரு
இன்னும் ஒரு தங்கை... சிந்தணைக் குழப்பங்களில் சிக்கி நிற்க.. செல்வங்கள் தொலைந்துபோக..அங்கேயும் ஆட்கொண்டு நின்றவர் .. சத்குரு...
நடுவில் .. நடந்தேறிய திருமணங்கள்.... தம்பி கண்ட சிறை வாசம்.. இப்படி ஒன்றுடன் ஒன்று பிணைந்து நின்ற பல குடும்பங்களில்... உற்ற துணையாய்...பன்முகங்களிலும் நின்றவர் சத்குரு.
அவர் தம் சிந்தனைகளில் என்றென்றும்.. பல குடும்பங்களின் நல்வாழ்வு மட்டுமே.. நிலைத்திருந்த்து.
நாட்டுப்பற்று சற்றும் குறையாமல்.. மூத்த தங்கை மகனை கப்பல் படையில் பணியிருத்த முனைந்த முயற்சி தோல்வியுற...
கொஞ்சமும் சளைக்காமல்.. 40 வருஷங்களின் பின்.... 
தங்கையின் பேரனை.. விமானப் படையில் சேர்த்து... அழகு பார்த்தவர்.. சத்குரு..
இத்தணைக்கும் நடுவில்.. தன் குடும்பத்தை எவ்வளவு கவனத்துடன் பார்த்திருக்க முடியும்.. என்பது..உங்கள் கற்பணைக்கே .. விட்டு விடுகிறேன்.
இதில் ஆழக் கற்க வேண்டியது எதுவென்றால்...
வாலி மூன்று தலைமுறைக்கும் மேலாய்க் காலத்திற்கேற்ற கவிதைப்பணியாற்றியது போல்...
அந்தந்த்த் தலைமுறைக்கேற்ற.. தேவைகளை நிர்ணயித்துக் குடும்பங்கள் வாழ்ந்து துளிர்விட மழை நீராய் நின்றவர் .. நம் சத்குரு.
மழை நீர் பாரபட்ஷமின்றி.. பசுமை வளர்க்கும்..
இது புகழுரை அல்ல..
தன் தகப்பனிடம் கற்றதைச் செயல்வடிவாக்கி ... 
தீரனாய் வீரபாண்டிய கட்டபொம்மன் போல் நிற்கும் 
ஒரு கம்பீர உருவெளிக் கோட்டின் 
அன்பு முகம் காட்டும் முயற்சி...
நம்மிடையே உலவித் திரிந்த ஆறுமுகனை அடையாளம் காணும் .. அன்பு யாகம்..!
அருள் புரிந்து ஆதரித்து ஆண்டது ஒரு முகம்
அன்பு கூர்ந்து அரவணைத்துக் காத்து நின்றதொரு முகம்
பொருள் செறிந்த பேரறிவைப் புகட்டியது ஒரு முகம்
தேசியம் பேசித் தலை நிமிர்ந்து நின்றதொரு திருமுகம்
வாழ்வின் பாதை இதுவென்று பலருக்கும் சுட்டி நின்றது ஒரு முகம்
இருள் படர்ந்த போதெலாம் இன்னல் அகற்றத் துணை நின்றதொரு முகம்
இலை 15

சத்குரு 11 :
இன்று நேருஜி யின் நினைவு தினம். சத்குருவின் மன ஆழங்களில் பதிந்திருந்த இந்த தேசத்தலைவனின் பரிமாணங்களை நாமறிவோம்.
இந்தப் பதிவின் சமர்ப்பணம் அவருக்கு.
“ 26 மே 1964 நேருஜி டேராடுனிலிருந்து வருகிறார். மாலை முதலே உடல் நிலை சரியில்லாதது போல் தோன்றுகிறது. பின்புறம் கடுமையான வலி. அதிகாலையில் தாங்க முடியாத அளவு வலி ஏற்படுகிறது. மருத்துவரை அழைக்கச் சொல்லிவிட்டு மயக்கமடைந்து விழுகிறார்... ஐயோ! இதற்கு மேல் என் பேனா எழுத மறுக்கிறதே...கண்கள் இருண்டு வருகிறதே...! நான் எப்படி இதை எழுதப் போகிறேன்.....” இவ்வாறு தொடர்கிறது அவரின் மறைவுப் பதிவுகள்
உலக மேதை நேரு என்ற புத்தகத்தை முதல் முதலாய் சத்குரு என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கொடுத்தார்கள். 12 வயதில் எனக்கு அது சற்றுப் பெரிய புத்தகம்தான்.. இருந்தாலும் படித்துவிட்டு... முடித்துவிட்டேன் என்று சத்குருவிடம் சொல்கிறேன்.
சத்குரு “ எங்கே அந்தப் புத்தகத்தைக் கொடு “ என்று சொல்லி அவருடைய இறுதி நாளைப் பற்றிச் சொல்லும் அந்தப் பக்கங்களைக் கொடுத்து “ சத்தமாகப் படி “ என்கிறார்.
நான் அதை ஸ்கூலில் ஒரு எஸ்ஸேயை பரீஷையின் போது படிப்பது போலப் படிக்க... சத்குருவிற்கு வந்ததே கோபம்.
“முட்டாள்.. என்னடா படிக்கிறே!.. கொண்டா இப்படி.. எப்படிப் படிக்க வேண்டும் தெரியுமா..?” என்று அதே கோபத்தோடு கையிலிருந்த புத்தகத்தை “வெடுக்” கென்று வாங்கி...
தன்னுடைய மனதிற்குள் சிம்மாசனமிட்டு அமர வைத்திருக்கும் ஒரு ஒப்பற்ற தலைவனைப் பற்றிச் சொல்லும் புத்தகத்தை.. அவர் மறையும் நாளில் உணர்ச்சிப் பெருக்கோடு எழுதப் பட்டிருக்கும் வாசகங்களை... சத்குரு எதிர் பார்க்கும் தொனியில்.. உள்ளுக்குள் வைத்திருக்கும் பெருமதிப்பை என் குரலில் அதைக் கொண்டு வராமல் நான் படித்தது... 
கற்பூர வாசனை அறியாதவனாய் நான் சத்குருவின் கோபத்தைக் கிளறியிருக்க வேண்டும்...
அந்தப் புத்தகத்தை கையில் வாங்கிப் படிக்கிறார்கள். நேரு மயக்கமடைந்து விழுவதைப் படிக்கையில்... சத்குருவின் குரல் தழுதழுக்கிறது... மேலும் படிப்பது தொடர... வார்த்தைகளில் உணர்ச்சிப் பெருக்கு.. கண்களில் துளிர்க்கும் அந்தக் கண்ணீர்... !! அவ்வளவு உணர்ச்சி ப்ரவாகம்..!! .. 
இன்று நினைக்கும்போதும் நேருவின் மேல் சத்குருவுக்கு இருந்த அபிமானம் புரிந்து கொள்ள முடிகிறது.
நேருஜி எழுதிய பல புத்தகங்கள்.. டிஸ்கவரி ஆஃப் இண்டியா.. இந்திராவுக்குக் கடிதங்கள் உள்ளிட்ட பலவும் அவர்கள் படித்திருக்கிறார்கள். தீ பரவட்டும் என்ற அறிஞர் அண்ணாவின் புத்தகம் எப்படி திராவிட இயக்கத்தில் பதிந்து போய் பேரியக்கமாக உருவெடுத்ததோ.. 
அதேபோல் நேருஜியின் எழுத்துக்கள் தேசப் பற்றையும்.. சுதந்திரப் போராட்ட ஈடுபாட்டையும் சத்குருவிடம் விதைத்திருக்க வேண்டும் என்றால்... அவர்கள் எனக்குப் “படி” என்று அறிமுகப்படுத்திய அந்த முதல் புத்தகம்.. எனக்குள் படித்தல் என்ற ஒரு இன்றியமையாப் பழக்கத்தை ஏற்படுத்தியதும்... தொடர்ந்து படிக்கத் தந்த கிருபானந்த வாரியார் எழுதிய கம்ப ராமாயண விரிவுரை.. தமிழ் மேல் என்னுடைய ஈர்ப்பை அதிகப்படுத்தியது. 
சத்குருவின் சுட்டுதலில் என் தமிழ் மொழி மேல் நான் கொண்ட பேரார்வம்.. கேந்த்ரிய வித்யாலயாவில் என் மகளைப் படிக்க வைக்காமல் மூன்றாம் வகுப்பிலேயே எங்களை விட்டுப் பிரிந்து இங்கு வந்து தமிழ் கற்கக் காரணமாயும் அமைந்தது. புத்திரி சோகத்தைப் புரிய வைத்தது


என் படிக்கும் பழக்கத்தினால் தமிழ்க் கடல் மட்டுமல்லாது.. மேற்கொண்ட தொழில் நுட்பம் சார்ந்த நூல்களை ‘விருப்பத்தோடு” படித்தறிய முடிந்ததும்.. சத்குருவின் முதல் விதையினால் என்றால்.. 
எனக்குள்ளே இன்று ஒரு வனாந்திரம் செழுமையாய் வளர்ந்திருப்பதை உணர்கிறேன்.
எழுத்தறிவித்தவன் சத்குரு வன்றோ..!


இலை 16

சத்குரு பதிவு : 12:
அந்த வனாந்திரங்களில் சுற்றித் திரிந்ததில்.. கண்ணுற்ற மரங்கள் பலப்பல..!
மரங்கள் பலவற்றிலும் தாவித்தாவித் திரிந்தாலும் அதிகமான சஞ்சாரம் சுஜாதா எனும் ஹைபிரிட் .விருட்ஷம்... ஒவ்வொரு கிளையிலும் வெவ்வேறு பூவும்.. கனியும். பங்களூரில் இருந்த சமயம் இவரைப் போய்ப் பார்க்க முடிந்தது...
சரி.. இப்போது சேலம்...
முன் பதிவின் நிகழ்வு சேலத்தில் நிகழ்ந்தது. நேருஜியின் நினைவு நாள் என்பதால் நடுவில் இடைச் செருக வேண்டி இருந்தது. தொடர்ந்து சேலத்து நினைவுகளைப் பதிவு செய்கிறேன்.
அப்பொழுது ‘ஏ.டி.சீ” அண்ணா போக்குவரத்துக் கழகமாயிருந்த அரசு பஸ்ஸில் நானும் சத்குருவும் மதுரையிலிருந்து பயணம். 7 மணி நேரம். எனக்கு 7 வது வகுப்பு முழுப் பரீட்ஷை விடுப்பு. 
அப்பொதெல்லாம் லீவுக்கு எங்க போற..? என்பது ஒரு மிக முக்யமான டிஸ்கஷன்.. எங்கேயாவது போகணும் அதுதாண்டா லீவு.! 
இப்படி ஒரு எழுதாத ரூல். போய்விட்டு வந்ததும் முதல் நாள் வகுப்பில் பீற்றிக் கொள்வது என்பது பொதுவான.... ஆனால் சுவாரசியமான விஷயம்
லீவுக்குப் பெரும்பாலும் அம்மைய நாயக்கனூர், அச்சம்பத்து சின்னமனூர் இதில் ஏதாவதொன்றிருக்கும். அதென்னமோ அம்மையனாயக்கனூரில் செல்லும் ஒவ்வொரு தடவையும் கண்டிப்பாக முடிதிருத்தம் செய்யப்படும். எனக்கு நினைவுதெரிந்து கல்யாணம்மாச்சியே முன்னின்று இருமுறை இதை நடத்தியிருக்கிறார்கள். ( விமானப் படையில் சேர்ந்து 8/1/1981 – அன்று என்னுடைய ஸ்டெப் கட் வெட்டப்பட்டு மொட்டை என்று தீர்மானமாய்ச் சொல்வதற்கு 15 செகண்ட் முன்னாடியே நிறுத்தப்பட்டு “முடியலங்காரம்” செய்யப்பட்டபோது—(கொடுமைடா அது..!) – (சத்தியமாய்க் கல்யாணம்மாச்சியை நினைவு கூர்ந்தேன்..!)

தோட்டத்துக் கிணற்றில் குளியல்.. நீச்சல்.. கொய்யா மற்றும் மாங்காய் எறிந்து உப்பும் மிளகாயும் தொட்டு தின்பது.. போன்ற கதைகள் நிறைய கை வசம் உண்டு. 
முருகாத்தாத்தா பீடத்தில் இருந்து இந்தச் சேட்டைகளை ரசிப்பதாய் ஒரு ரகசியப் பெருமையும் உண்டு. 
இதன் பாதிப்பாய் எங்கள் குல தெய்வத்துதியில் 
“ குழந்தையர்கள் விளையாடப் பரவசிப்பாய் போற்றி “ என்றும் எழுதியிருக்கிறேன்.
(கணம் நீதிபதி அவர்களின் கவனத்திற்கு இதை வைக்கிறேன் )

பாருங்கள் பஸ்ஸிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டேன்..!
..........
பஸ்ஸில் நெடுக நிறையக் கேள்விகள் நான் கேட்கிறேன். முக்கியமானது அந்த ட்ரைவ்ர் போடும் ‘கியர்’ பற்றியது. ‘”அத எதுக்கு திருப்பி.. திருப்பி போட்றார் ட்ரைவர்..?”
“அதுவா.. அப்பத்தான் வண்டி யிலிருக்கும் இஞ்சினில் இருந்து சக்கரத்திற்கு கிளச் மூலமா பவர் கிடைக்கும்.” “ வேகமாப் போணும்ணா 1, 2.. ன்னு அஞ்சு கியர் போடணும்...”
பின் நாட்களில்.. 30 வருஷங்களின் பின்.. அட்வான்ஸ்டு கார் ஸ்ர்வீசிங் பற்றிய பயிற்சி வகுப்புக்களின் போது.. Main Lay shaft, Gear shift Fork, Speed synchronizer Mechatronics என்று அந்த 5 கியர்களைப் பற்றி விலா வாரியாகத் தெரிந்து கொண்டேன்..
வழியெல்லாம் ஒவ்வொரு ஊர் கடக்கும் போதும்.. அந்த ஊரின் பெயரைச் சொல் என்பார்கள். முழிப்பேன். “ஷண்முகனாதா.. அங்க பார்.. கடைகள் மேலே தொங்கவிட்டிருக்கும் பெயர்ப் பலகையில் .. கடைசியில் தெருப் பேர்.. ஊர்ப் பேர்.. எல்லாம் இருக்கும்..” யார்ட்டயும் நம்ம கேட்கவே வேண்டாம் என்று அந்தப் பயணத்தில் சொல்லிக்கொடுத்தார்கள் சத்குரு.
விமானப் படையில் இருந்த சமயம் நாவிகேஷன் ( Navigation ) பற்றிய பாடங்கள்.. மற்றும் செய்முறைப் பயிற்சிகளின் போது..இதுவே “ வே பாயிண்ட் - (Way point) “ என்றும்.. லாட்டிட்யூட் .(Latitude ). லாங்ஜிட்யூட் ( Longitude ) கோ ஆர்டினேட்ஸ் - (Co.ordinates) எனவும் தொடர்புறுத்தி விவரங்கள் அறிந்தேன். விமானங்கள் பறப்பது இந்த Way point களின் வழியேதான். 
எங்கேயிருந்து எங்கே பாருங்கள்....!
ஒரு பஸ்ஸிலிருந்து கொண்டே நாவிகேஷன் பற்றிய பாடம் எனக்கு சத்குரு எடுத்திருக்கிறார்கள் என்றால்.. இதைப் போன்று ஒவ்வொரு நிகழ்வையும் கோர்த்துக் கோர்த்துத் தொடர்புபடுத்திப் பார்ப்பதில் என் நன்றியறிதலைப் பதிவு செய்ய இயல்பாய் எனக்கு வாய்ப்புக் கிடைப்பது சத்குருவின் பேரருள் என்றே நினைக்கிறேன்..!
சரி இனி மறுபடி சேலத்திற்கு வருவோம்..
அம்மாப்பேட்டையில் வீடு. 
தினமும் அதிகாலை சீக்கிரமாய் எழுந்திரிப்பது .. (நான் மட்டும் கொஞ்சம் லேட்) எனக்குச் சலுகை உண்டு. சத்குரு படுக்கையின் ஓரம் உடகார்ந்துகொண்டு பெயருடன் ‘குஞ்சு” என்ற அடைமொழியோடு எழுப்புவார்கள். 
எழுந்ததும் பல்விளக்கி குளித்து.. 6 மணி க்கு முன்பாக சாமி படங்கள் முன் உட்கார்ந்து விட வேண்டும். சந்தனப் பொட்டு.. லாவகமான துணியால் ஒற்றி எடுத்தல்.. இவை முடிந்து...
“ கைத்தல நிறைகனி....
“ சரண கமலாலயம்.. “
என்று பாட்டுக்கள். அப்பல்லாம் கொஞ்சம் சத்தமாகப் பாடுவேன். வார்த்தைகளை நடுநடுவே மறக்காமல்.. பாடும் போது..தயக்கமில்லாமல்.. பரீட்ஷையில் ‘தெரிந்த’ ஒரு கேள்விக்கு அனாயசமாக.... அலட்ஷியம்.. கான்ஃபிடன்ஸ் நிறைந்து பதில் எழுதுவது போல.. ‘ஹ..” வென்று ஒரு உணர்வு உள்ளூர.
ஆனால் காலையில் சீக்கிரமே குளித்து விடுவதால் பயங்கரமாய்... பசிக்கும். அடுப்படியில் அத்தை ஸ்டவ்வில் தோசை ஊற்றும் சத்தமும்.. ஊதுபத்தி மணம் தாண்டி வரும்.. அந்தக் கெட்டி பிரவுண் கலர் சட்னியின் வறுத்தரைத்த வாசனையும்.. .. 
எப்படா இந்தக் ‘குன்றமெறிந்தாய்..” பாட்டு வரும் என்று மனசு ஏங்கும். 
“ பரிசைக் கொடுத்துவிடுங்கள் மன்னா..!” எனும் தருமியின் மன நிலை.
பசி வந்தால் பத்தென்ன.. பத்தாயிரமும் பறந்து போம்..! அப்பத்தானே சூடம் கொளுத்தி பூஜை முடிச்சு. அப்புறம் மொறு மொறு தோசையை வெளுத்துக்கட்ட முடியும்..!
அந்த தோசையை அதற்கப்புறம் நான் பார்க்கவேயில்லை.. ! என்பது என் வா நாள் சோகங்களில் ஒன்று..! (ப்ச..)
9 மணிக்கெல்லாம் சத்குரு வேலைக்குப் போய் விடுவார்கள். போகும் முன்பாக.. ஹிண்டு பேப்பரில் ஏதாவது ஹோம்வொர்க் கொடுத்துவிடுவார்கள்.


அத்தாச்சிகளுக்கு “வெள்ளிக்கிழமை விரதம்” படக்கதையை.. பாம்பு வரும்போது போடும் ம்யூசிக்கோடு சொல்லி.. நைஸாக அந்த ஹோம் வொர்க்கைச் செய்துவிடுவேன்.. 
அங்கேதான் குகை, சேலத்தில் ஜெயலஷ்மி அப்பத்தா ( எனக்கு சேலப்பத்தா..) இருந்தார்கள்.
.......................................................................................................................சேலம் தொடரும்...


இலை 17

சத்குரு : 13 :
அப்ப எது சரி..???
ஒரு நாள் சத்குரு என்னை சேலப்பத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்ல.. திடீர் என்று கடைசி பரீட்ஷை முடிந்து அந்த முதல் நாள் விடுமுறை போல் உணர்ந்தேன். அங்கே அவ்வளவு சுதந்திரம்.. உடம்பில் உள்ள அத்தனை மில்லியன் அணுக்களும் ஓஹோவென்று குதித்துக்கொண்டிருக்க...
அங்குதான் முதன் முதலில் மாணிக் தாத்தாவின் ‘சமரஸ ஸ்ன்மார்க்கம்” என்ற வார்த்தைக்கு அறிமுகமானேன். அத்துடன் கம்பீரமாய் ரசித்துப் பாடும் 
“கற்பக வல்லி நின் பொற்பதங்கள்.. பிடித்தேன்.. நற்கதி அருள்வாயம்மா..!” 
என்ற பாடல் கேட்டு இன்றளவும் அந்தப் பாடலை செவி மடுக்கையில் ஒரு கணம் ரேடியோ தாத்தாவின் முகம் நினைவில் ஆடும்..
“ அம்மா ஜயலக்ஷ்மி! ரெண்டு நாள் இவன் இங்கே இருக்கட்டும்.. ஏதாவது நல்ல சினிமாவுக்கு முடிஞ்சா கூட்டிட்டுப் போய்ட்டு வாங்க ..!
சினிமா என்ற வார்த்தையைக் கூட சத்குருவின் முன்னிலையில் சொல்லாத ஒரு சூழ்னிலையில் .. சின்னப்பையன் சினிமாவிற்குப் போய் வரட்டும் என்ற் புரிதலோடு ... அப்படி ஒரு தனிக்கவனம்,, சிறு விஷயத்திலும் கூட..
“ மற்றவர்க்கு தேவை என்ன என்பதில் காட்டும் அக்கறை..!
2 படங்கள் பார்த்தேன். “கண்மணி ராஜா..” 
முதல் முதலாய் எஸ்.பி.பி யை இந்தப் படப் பாடலான “ ஓடம் .. கடல் ஓடும்.. அது சொல்லும் கதை என்ன..?” வில் இருந்து ரசிக்க ஆரம்பித்தேன்.
அப்புறம் யாரோ ஒருவரிடம் சொல்லி.. சைக்கிளில் ரொம்ப தூரம் சென்று.. ‘கௌரவம்” படம் பார்த்தேன். 
“என்னப்பா படம் பார்த்தே..?” ன்னு சத்குரு மறுபடி அங்கே சென்றபோது கேட்க 
“ கௌரவம் ” என்று சொன்னேன். எங்கே கதையைச் சொல்லு என்றதும்... 
‘ ஒருத்தன் உண்மையிலேயே கொலை ஒன்றைச் செய்துவிட்டு பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற கிரிமினல் லாயரினால் தப்பித்துவிடுகிறான்..” 
அவனே அவனுடைய மனைவி விபத்தினால் இறக்கும்போது லாயரின் மகனால் கொலை செய்யப்பட்டதாகத் தண்டனை பெறுகிறான்..” 
இவ்வளவு தெளிவாக அன்று சொல்ல முடியவில்லை.. எனக்குப் புரிந்த அளவில் கதையைச் சொன்னேன். சத்குரு தன் யூகத்தில் நான் சொல்ல வந்ததைப் புரிந்துகொண்டு ..
“ அப்ப எது சரி ..? என்று கேட்க.. அன்று கேட்ட அந்த கேள்வியைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன்.

ஒரு குற்றம் செய்தவன் எப்படித் தப்பிக்கலாம்..? அவனைத் தண்டிக்கத்தானே சட்டம்.. ஆனால் இந்த லாயர்கள் ஏன் குற்றவாளியைத் தப்புவிக்க இவ்வளவு மெனக்கெடுகிறார்கள்..? (பணம்..?– அதைத் தாண்டிய விஷயங்களை யோசிக்க முனைகிறேன்..)

வாதத்திறமைதான் வெல்கிறது என்று கொண்டாலும்... 
உண்மை மறைக்கப்பட்டது என்று கொள்வதா..?
அப்படியே அது இருந்துவிட்டாலும் அது தன்னைக் காட்டிக்கொள்ளாமல் இருந்துவிடும் அவல நிலை ஏன் ஏற்படுகிறது...?
அமைதியாக.. இருந்துவிடுவதால்தான் அது உண்மையாக இருக்கிறதா?..?
உண்மையான ஒன்றைப் பொய்யாக்கிப் பார்ப்பதுதான் சட்ட நிபுணத்துவமா..?
பொய்களுக்கு ஏன் இவ்வளவு வலிமை..? 
உண்மைக்கு வலிவு இல்லை என்ற ப்ரம்மையை ஏற்படுத்தும்படி ஏன் இவ்வளவு வலிமை..?
உண்மை எப்போதும் மௌனமானதா..?
குரு “அறிவுத்திறளில்” சுட்ட்டியிருப்பது போல் ..
மௌனமே ஞானத்தின் எல்லையா..?
ஞானத்தின் எல்லையில்..
மௌனத்தில் இல்லாத மொழிகள் இல்லை என்றால்..

பொய்கள் ஏன் இவ்வளவு “சப்தமாக” ஒலிக்கின்றன..?
சத்தமாகச் சொன்னால் அவை சத்தியங்களாகி விடுமா..?
சத்தியத்துக்கும்.. கடவுள் என்பதற்கும் வித்யாசமிருக்கிறதா என்ன..?
‘ உண்டு என்றால் அது உண்டு.. இல்லை யென்றால் அது இல்லை..” தானா..?
“........நான் பார்த்து ஒன்றாகக் கண்டது..
நீ பார்த்து வேறாக மாறிவிடுவதும்
தெரிவது ஒன்றும்...
புரிவது ஒன்றுமாய்..
வாழ்க்கையின் அடுத்த நொடி ஆச்சரியங்களோடு.. வழி நெடுகிலும் எழும் நிறையக் கேள்விகளுக்கு வித்து .. 
சத்குரு என்னிடம் அந்தப் புரியாத வயதில் கேட்ட...
அந்த “ அப்ப எது சரி..? “ 
..................................................................................சேலம் தொடரும்....


இலை 18

SATHGURU : 14/1
“ ஷண்முகனாதா இங்கேயே ரெண்டு நாள் இருந்துட்டு வொர்க்ஷாப் பெல்லாம் போய்ப் பார்த்துட்டு வந்து.. என்னவெல்லாம் பார்த்தேன்னு சொல்லனும்..”
இது சேலப்பத்தா வீட்டில் என்னை விட்டுவிட்டுப் போகும்போது சத்குரு உதிர்த்த வார்த்தைகள். 
எம்.ஜி.ஆர்.. தன்னுடைய கொள்கைப்பாடல்களில் கருத்துக்களை மக்களுக்குச் சொல்லும் போது ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் இருந்திருக்குமா என்று தெரிந்திருக்கவில்லை.
அதைப்போல் என் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றிலும் சத்குருவின் மூலம் சுட்டிக்காட்டப்படுபவை.. பின்னாட்களில் என்னுடைய வாழ்க்கைப்பாதையின் மகத்தான பக்கங்களுக்குக் காரணமாய் இருந்து வந்திருக்கின்றன... மறுபடி அவர்கள் சொன்ன வார்த்தைகள்.. கீழே..
“ ஷண்முகனாதா இங்கேயே ரெண்டு நாள் இருந்துட்டு வொர்க்ஷாப் பெல்லாம் போய்ப் பார்த்துட்டு வந்து.. என்னவெல்லாம் பார்த்தேன்னு சொல்லனும்..”
*******************************************
முதன் முதலில் நான் மிகவும் சிறு பிள்ளையாய் அங்குச் சென்றிருக்கிறேன் .. ஆனாலும் 73 ல்( correct ஆ) காவடி எடுத்தபின் சென்ற நிகழ்வுகளைத்தான் பதிவு செய்து கொண்டிருக்கிறேன்.
சேலம் எனக்கு மிகவும் நன்றியறிதலுடன் நினைத்துக் கொள்ளும் ஊர் என்றால்.. எனக்கு அதை வார்த்தைகளில் வடிக்கத் தமிழ் பற்றாக்குறை என்றே எண்ணத் தோன்றும்.

சக்தி எலக்ற்றானிக்ஸ் என்ற நிறுவனம்.. அங்கே ஸ்ரீ.மாணிக்கம் தாத்தா அவர்களின் தொழில்னுட்ப அறிவுத் துணையொடு சோக்ஸ் உற்பத்தித் தொழில்சாலையில் நான் கால் பதித்த போது.. ஸ்ரீமதி.கீதா அத்தை ஒவ்வொன்றாக்ச் சொல்லிக் கொடுத்தது. அத்துடன் தாத்தா அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது உடனிருந்து சொல்டெரிங் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த்து.

அப்பவெல்லாம் வால்வ் ரேடியோ செட்கள் தான். மின் அணுவியலில் முதல் ஜெனரேஷன் காலம். 2 வது ஜெனெரேஷன் செமி கண்டக்டர்ஸ் , அப்புறம் LSI, VLSI, VVLSI , ICs MUPs(Microprocessors) என்று போகும்..
முதல் முதலாய் நான் வயர்களை எடுத்து ஒரு ஸ்பீக்கரில் தொடர்பு கொடுத்துப் பாட வைத்ததும்.. அது பாடியதும்.. ஒரு பரவசம். 
அப்புறம் ஒரு ப்ள்க், ஸ்விட்ச், ஹோல்டெர் இவைகளை வயரில் இணைத்து எரிய வைத்தது. ப்ல்ப் எரிந்தது என் முகத்திலும்.
என்னுடைய மின் நுண்ணணுவியல் துறைக்கான முதல் வித்து விழுந்த இடம் சேலம்.
விமானப் படையில் சேர்ந்ததும் முதலில் க்ரவுண்ட் ரேடார் (GROUND RADAR – VALVE SYSTEM) வால்வ் சிஸ்டம் களில் பணியாற்றிவிட்டு.. இறுதியில் மிராஜ்..2000 விமானங்களில் அதிநவீன டிஜிடல் மற்றும் லேசர் டெக்னாலஜிக்களால் ( DIGITAL & LASER TECHNOLOGY ) வடிவமைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் நாவிகேஷன் ( NAVIGATION )சம்மந்தப்ப்ட்ட கருவிகளில் பணியாற்றியது.
.அந்த முதல் வித்தின் விருட்சமே..
இதற்கு நடுவில் காப்பர் கம்பிகளை வைத்துப் பண்ணவேண்டிய இடத்தில் காப்பிட்ட அலுமினியக் கம்பிகளை உபயோகித்தது சம்மந்தமாக.. சத்குருவின் கடினமான விமரிசனங்கள்... இவற்றில் பெரும்பாலும் அந்த சமயங்களில் எனக்குப் புரிய வில்லை என்றாலும் சேலம் விட்டு நாகமலை வந்தபோது.. ஏதோ பெரிதாகத் தப்பு நடந்துவிட்டது என்பது மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது....
தங்கை ஸ்ரீமதி.ஜயலஷ்மியின் குடும்பத்தின்மேல் ஒரு அண்ணனாக சத்குரு அந்த நேரங்களில் நடந்து கொண்ட விதம்.. 
நகமலைக்கு சத்குருவும் குடிபெயர்ந்து வந்தவுடன் அனுசரணையாக ஏதேதொ முயற்சிகளின் பின் நான் என் அன்புக்குரிய அக்கா என்றழைக்க முயன்று தோற்று (அவர்களின் விருப்பத்தின் பேரிலேயே) அத்தை என்று அழைத்த ஸ்ரீமதி.ஜோதி அத்தையைத் தன் இளவல் ஸ்ரீ.ரவீந்திரன் (முருகாத் தாத்தாவுக்குப் பாண்டித்துரை) அவர்களுக்கு மணமுடித்து மருமகளாக்கிக் கொண்டார் சத்குரு அவர்கள்.
“அநாதரவாகிவிட்ட தோணிகளுக்கு துடுப்புக்களாயிருப்போம்.. என்று ஆதரவுக்கு வந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக மட்டும் இருந்துவிட.. செல்வ நிலையத்தில் ஜோதி குடிகொண்டது.. எந்தக் குறைகளுமின்றி. !


சமகாலத்தில் நடந்த விஷயம் என்பதால் இதை "நானே" பதிவு செய்கிறேன்.
முதல் முதலாய் தனக்கே தனக்கென்று சுபவிளக்கு ஒன்று பேத்தியாய் ஜனித்ததும்.. செல்வ நிலயம் மேலும் ஒளிர்ந்து நின்றதும்.. 
என் சத்குருவும்.. பெரிய அத்தானும் அதைவிடவும் வாழ்க்கையில் பிறிதொரு சந்தோஷத்தை அடைந்திருக்க மாட்டார்கள்.
என் கண்முன்னே ஒரு மூத்த அண்ணன் தங்கையிடம் பாசமலர் பூக்க நின்றது .. நிச்சயம் முன்னுதாரணமாய்க் கொண்டு செயல்பட வேண்டியது என்றாலும்... 
..................................................................................தொடரும் பதிவு 14/2


இலை 19

Sathguru : 14/2
சமீப காலங்களில்..
மனவெளிகளில் மனித உறவு முறைகளுக்குள் ஏற்படும் இழைப்பின்னல்களில் பெரியதாய் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை அறிய முடிகிறது. .. 
முந்தைய கால கட்டங்களில் சார்ந்திருப்பதென்பது.. பலவீனமான பொருளதார நிலைகளோடும் சம்மந்தப் பட்டிருந்ததாலும்... 
மனதில் பெருமதிப்பும், பாசமும் இரண்டறக் கலந்திருந்தது என்பதை நிச்சயமாக நன்கு உணரமுடிந்தது.
மனம் சோர்ந்த அண்ணனாய் சத்குரு ஷண்முகபவனத்தில் கால் பதித்த போதெல்லாம்.. ஒரு தாய் கொடுக்கும் தைரியத்தைத் தங்கையிடம் பெற முடிந்தது. 
அந்த ஜெனரேஷனின் அனலாக் பரிமாணங்களிலான உறவு இழைப்பின்னல்கள் ( ANALOG FABRICATION ) காலங்களில் மாறிக்கொண்டிருக்கும் உறவு நிலைச் சங்கேதங்களுக்கு (VARYING SIGNAL COMPONENTS ) ஏற்ப உறவுச்சூழலில் மாறுதல்களின் உயர்வு தாழ்வை ஏற்றுக்கொண்டபடி.. மனங்கள் இயங்கும்..
இன்றைய டிஜிட்டல் (DIGITAL ) யுகத்தில் தனிப்பட்ட ஒவ்வொருவரும் பலவித வளர்ச்சிகளின் காரணமாய், ஏராளமான அரசியல், படிப்பறிவு, சொந்தம், அன்னியம், ஈகொ, பணபலம், இப்படிப் பலவித “ லாஜிக் “ குகளுக்கு உட்படுத்தப்பட்டு மனங்கள் டிஜிட்டல் முறைகளுக்கு (DIGITAL PROCESSING ) மாறியிருக்கிறது....,
நூற்றுக்கணக்கான உறவு நிலை லாஜிக் 1 மற்றும் 0 அதாவது “சம்மதம்” அல்லது “ சம்மதமில்லை” என்ற சங்கேதங்களுக்கு. (BINARY SIGNALS) மனங்கள் இயங்கி மாறுதலை ஏற்கும் வழிகளின்றி சட்டென்று “ஃபெய்ல்” என்று சிவப்பு விளக்கு எரிந்துவிடுகிறது. ஒன்றுக்குப்பதிலாக பலவித ஒருங்கிணைப்பு (CLOCK PULSES) சங்கேதங்களை தவறான இடங்களிலிருந்து பெறுவதினாலும், பல சமயங்களில் இயல்பு இயங்கு நிலைகளுக்கு ஒவ்வாத (FORBIDDEN ) நிலைகளுக்கு உறவுகள் தள்ளப்பட்டும் விடுகின்றன.
இப்படி எலெக்ட்ரானிக்ஸ்-ஐ இன்றைய உறவு இழைப்பின்னல்கள் (RELATIONSHIP) அடைந்திருக்கும் பரிணாம மாற்றத்திற்கு ஒப்பிடலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.. (உங்களுக்கு எப்படி..?)
மழை நீர் தான் விழும் நிலத்தின் நிறம் பெற்றுவிடுதல் போல்.. வாழும் சூழ்னிலை.. உறவுகளின் நிறத்தை மாற்றி விடுவது... தவிர்க்கமுடியாததாகிப் போய் விடுகிறதே..!
இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அவரவர் வழிகளில் சிறந்து வாழும் வகையை வரையறை செய்து.. 
“ அன்பின் எதிர்பார்ப்புக்கள்...”
என்ற வன்முறைச் சிந்தனை இன்றி வாழ்தலே சிறப்பு என்று எனக்குப் படுகிறது..
“......தாமரை இலை மேல் நீராயிரு....” 
இதன் வெளிப்பாட்டை.. 
அதன் காரணமும்... !
உன்னதமும்..!
புரியாத காலத்தில் சத்குருவிடம் பின்னொருனாளில் நான் கண்டேன்.. அதைப்பற்றிப் பிறகு ஒரு பதிவில் காணலாம்...

.....................................................................நாளை குமரனைத்தேடி குமரகிரி செல்லலாம்..
 இலை 20

சத்குரு பதிவு : 15
Title : நம் கதி என்னவாகியிருக்கும்..????
அன்று மாலை குமரகிரி செல்வதாய் ஏக மனதாய் முடிவு செய்யப்பட்டு.. நடக்க ஆரம்பித்தோம்.
அம்மாப்பேட்டையிலிருந்து நடந்து செல்ல 2, 3 கி.மீ. இருக்கும்.
வழியில் ஒரு மாசாணி அம்மன் படுத்த நிலையில்.. பனை மரங்களினூடே கொஞ்சம் பயமாக இருந்தது... அப்படி ஒரு அமானுஷ்யம்..!!. அந்த மூக்கும்.. முழியும்...!
அங்கே கைலாயத்தில்.. மாம்பழத்தினால் பிரச்ணை ஏற்பட.. நம்மைப் பாடாய்ப் படுத்தி ஆனந்திக்கும். செல்லக் குழந்தை முருகன் மயிலேறிக் கிளம்பி.. பழனி வரும் முன்பு சிறிது நேரம் இளைப்பாறிய இடம் ..தான் இந்தக் குமரகிரி..
இந்தக் கதையை சத்குரு எனக்குச் சொல்லியபோது.. இளைப்பாற வேண்டியிருந்தது.. மயிலுக்கா..? முருகனுக்கா..? என்று தோன்றியது..
இங்கே ஞானப்பழத்திற்கு.... மாம்பழமே நிவேதனம்..!!!!
‘குமரா.. இங்கு தரும் மாம்பழத்தைப் பெற்றுக் கொண்டு மனமுவந்து சற்றே. சாந்தமாயிரு.. தங்கமே..! “ என்கின்ற பாவனையாய் இந்த நிவேதனம்..
அங்கே அந்தக் குழந்தை சாந்தமாய் இருப்பதாகத்தான் பட்டது. அந்தக் குழந்தையிடம் கோபத்தை காணவும் முடியுமோ..?
இதனாலேயே சேலம் மாம்பழத்திற்கு பிரசித்தி பெற்றது என்பது இங்கே கருத்தில் கொள்ள வேண்டியது...காண்க.
சங்க காலத்தில் அவ்வைப் பிராட்டி அவதரித்த ஸ்தலம் சேலம் என்பது இன்னுமொரு விசேஷம்.
அருணகிரி திருப்புகழில் பாடப்படும் ஒரு ஸ்தலமும் இது என்பது மற்றுமொரு விசேஷம்.
இங்கே ஒரு பக்தரிடம் குமரன் தோன்றி இந்தக் கோவிலை நிர்மாணிக்கச் சொன்னது ஒருபுறமிருக்க.. அந்த பக்தரின் பெயர் கருப்பண்ணசாமி என்பது நமக்குப் பெரிய விசேஷம்..!
சத்குரு “ இதோ இதுதான் முருகன் வந்து காட்ஷியளித்த இடம் “ என்று காண்பித்த இடத்தில் அழகனின்.... பாதங்கள்...!
“....முருகனென்றால் அழகனென்று தமிழ் மொழி கூறும்..
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்.....!”
தானே பெற்றவள் போலே சக்திக்கு.. என்ன ஒரு பெருமை..?
அன்று.. “ த பார்றா !! ” என்று லேசான ஆச்சரியம் மட்டும் உணர்ந்த மனம் இன்று அந்தக் காட்ஷியை மனதில் இருத்தி முழூருவத்தில் பார்க்கிறது..
குமரகிரியை உங்கள் பார்வைக்கு இணைத்திருக்கிறேன். (பின்புலத்தில் நாமமலை).
பெரியதாய் நாமம் போட்டிருக்கும். அதனால் தானோ என்னாவோ மாமனுக்கு மரியாதை நிமித்தம் பக்கத்தில் இந்தக் குமரகிரிக் குன்றில் இளைப்பாறினார் மயில் வாஹனன் என்று தோன்றும்...
ஒருபக்கம் “அந்தப் பழத்தைத்தான் இந்தக் குழந்தைக்குக் கொடுத்திருக்கக் கூடாதா..? என்று பாசம் மேலிடக் கேள்வி நமக்குள் எழுவது மெய்யென்றாலும்..
இந்தக் கதையை சத்குருவிடமிருந்து செவி மடுக்கும்போது... அன்று தோன்றாத கேள்வி இன்று மனதில்..!
அந்தக் குழந்தை மட்டும்... இங்கு வந்திராவிட்டால்...?
நம் முன்னோர் முதல் இன்று பிறந்திருக்கும் குழந்தை வரையிலும்....
நம் கதி என்னவாகியிருக்கும்..????
****************************************************************************இனி பதிவுகள் மதுரையில் தொடரும்
 இலை 21
சத்குரு 16 :
அஞ்ஞாதவாசம் என்று அப்பாவிற்கு சத்குரு எழுதிய ஒரு கடிதத்தில் விவரிக்கப்பட்டிருந்த சேலத்திலிருந்து .. அனைவரும் குடிபெயர்ந்து நாகமலை காலனிக்குக் குடிபெயர்ந்தார்கள். அப்போது நான் 8 ம் வகுப்பில்.
அந்தச் சமயங்களில் நான் அங்கேதான் இருந்து படிப்பது என்று முடிவு. சிறு சிறு வேலைகள் செய்வேன். மாலையில் படிப்பு என்று ஓடிற்று.. காலம்.
ஒரு நாள் சமணர் மலையைச்சுற்றி வந்து நானும் சத்குருவும் பெரிய வாக்... நடந்துகொண்டிருந்தோம்... ஆலமரம்.. கோயில் பகுதியில் நடந்தபோது.. அங்கே ஒரு 4 தூண் மண்டபம். இருக்கிறது.. அதில்
‘சித்த இப்படி உட்கார்ந்துட்டு போலாமா..?” என்று கேட்டபடி சத்குரு உட்கார நானும் அமர்ந்தேன்.
சத்குருஉட்கார்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு..
“ ஒரு பத்து பதினஞ்சு வருஷம் கழிச்சு சமணர் மலை பக்கத்தில் ஒரு நாலு கால் மண்டபம்.. இருந்ததா..? ன்னு கேட்டால் உனக்கு ஞாபகம் இருக்கணும்டாப்பா..”
இருக்குமா..? ந்னு எனக்குச் சந்தேகம்.
” நான் தெரியலை மாமா.. என்கிறேன்.
“எதுக்குச் சொல்றேன்னா நம்முடைய ஞாபக சக்தியை எப்பவும் ஷார்ப்பா வச்சுக்கணும்.. அதுக்கு இப்படி எதையாவது மனசுக்குள் நினைச்சுப் பாத்துப் பாத்து.. புதுப்பிச்சுட்டே இருக்கணும்.. இதத்தான் ( Increasing the Mind power ) ந்னு சொல்றது.. அய்யா (முருகாத்தாத்தா) இத மாதிரி நிறய அப்பியாசங்கள் எங்களுக்குச் சொல்லுவாங்க...”
“ உனக்குத் தெரியுமா..? அய்யா திடீர்னு ஒரு விரலைச் சுட்டி கண்ணுக்கு நேரே காமிச்சு “ என்ன டைம்..” நு கேட்டா யாருன்னாலும் சரியான நேரத்தைச் சொல்லிருவாங்க.. . அய்யா இப்படி பல முறை பண்ணிக் காமிச்சிருக்காங்க.. நம்முடைய மன ஆற்றல்களை எப்பவும் குறெச்சு.. மதிப்பிட்றக்கூடாது.. . “
என்று அட்ன கால் போட்டிருந்த கால் பாதத்தைத் தடவியபடி.. சொல்லிக்கொண்டிருந்தார்கள்.... சத்குரு எப்போதும் தான் சொல்லும் விஷயத்தை மிகவும் லயித்துச் சொல்லும்போது.. தன் பாதங்களைத் தடவிக்கொள்வது .. ஒரு அழகு.!
முருகாத்தாத்தாவிற்கு உள்மன ஆற்றல்கள் பற்றிய ஆராய்ச்சியும் சிந்தணைகளும் எப்பொழுதும் உண்டு என்பது பற்றி நிறையக் கேட்டிருக்கிறோம்.”
உடல் ஓம்பலும்..!
நல் உளம் ஓம்பலும்..!
கற்றுக் கொடுத்தனை...!
இனியொருவர் இங்கமைவரோ..
குருவாய்..சத்குருவாய்..?
பிள்ளைகள் நாங்கள் கூவியழைக்க..
தம் செவிகள்தனில்
தேன் வந்து பாயலையோ..?”
ஒவ்வொரு மகனுக்கும் தன் தகப்பன் தான் முதல் ஹீரோ. தகப்பனைப் பார்த்துப்..
படித்துக்... கற்றுகொள்ளல் இங்கே அவசியம்.. உலகத்தின் அறிமுகம் தகப்பனின் பார்வையிலேயிருந்துதானே பிள்ளைக்குப் போய்ச்சேரும்..!
“ எங்க அப்பா..!!” என்ற நெஞ்சு நிமிர்த்தும் பெருமை சத்குருவின் ‘குரலின்’ வழி ஒலிக்காமல் .... அதன் எதிரொலி மட்டும் வியாபித்துப் பரந்து விரிந்து இன்னும்.. ‘ எங்க தாத்தா.. எங்க அய்யா. குரு, .வெனப் பரவிப் பரவிப் போய்க் கொண்டே இருக்கிறது.... தலைமுறைகள் தாண்டி.. 40 வருடங்கள் கடந்த பின்னும்... கற்றை ஊதுபத்தியின் வாசம் கமழ்ந்து சுற்றிச் சுற்றி வருவது போல...
மனங்கள் நுகரட்டும்... அவ்வாசம்..!
********************************************மதுரைப்பதிவுகள் தொடரும்..
“ இப்பூத உடல் அழிந்தே தீரும்.. திருமணம் நடந்தே தீரும்..!
இந்தகுரல் ஒலித்ததும்
ஜூன் 3 – ல் அந்தத் திருமணமும் நடந்தேறியதும்..
“ என்னுடலை அடக்கம் செய்.. எரிக்க வேண்டாம்..?”
என்று குரு திருவாய் மலர்ந்தருளியதும்...
“ தன் மேல்.. தன் சந்தனம் கமழ்ந்திருந்த உடல்மேல்.. தான் பெருமிதத்தோடு நேசித்த அந்த கம்பீரத் திருமேனிதனில் .. எத்தணை பெருமதிப்பிருந்திருந்தால்.. இந்த வாசகம் குருவிடம் இருந்து தம்பி ராமுவிற்கு வந்திருக்கும்...?
குரு ஏன் அப்படிச் சொன்னார் என்பதற்கு.. உரிய பதில்/பதிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்....!

 இலை 22
சத்குரு : 17
நாகமலை வைகறைகள் :
“ வைகறைப் பொழுதினில் விழித்தேன்... அந்த வடிவேல் முருகனை நினைத்தேன்..!”
அது மார்கழி மாதம்...
அதிகாலையிலேயெ நாகமலை புதுக்கோட்டையிலிருந்து பாட்டு கேட்க ஆரம்பித்துவிடும். அந்தக் குளிரின் கதகதப்பில் இன்னும் இழுத்துப் போர்த்துக் கொள்ள மட்டுமே ஆசை வரும்.
நிச்சயமாகப் படிக்க அல்ல..!
ஆனால் இந்த அரையாண்டுத் தேர்வுகள் எப்போதும் டிசம்பரில்தானே வந்து தொலைக்கின்றது....?
காலையில் 4.30 மணிக்கெல்லாம் எழுந்திரிக்க வேண்டும். முதல் நாளிரவில் 9.00 க்கு இரவில் விளக்கு அணைக்கப்படும். இது தினசரி நடப்பு.
சரியாக 4.25 காலை விளக்கு ஸ்விட்ச் போடப்படும். இது முதல் வார்னிங்.
அந்தச் சத்தத்திலேயே பெரும்பாலும் முழிப்பு வந்துவிடும். மூடிய கண்களுக்குள் சிவப்பாய்த் தெரியும். லைட்டைப் போட்டுவிட்டு சத்குரு பின்புறம் கிணற்றடிக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து எங்களை எழுப்புவார்கள்.
இடைப்பட்ட இந்தப் பத்து நிமிடம் சொர்க்கம்.
பிறகு எழுந்திரித்து மூஞ்சி கை கால் கழுவி படிக்க உட்கார்றதுன்னுதான் ஐதீகம். ஆனா இந்தத் தூக்கம் ஆளை அப்படி அமுக்கும்.
தலைகாணி மேல் புத்தகத்தை வைத்துப் படிக்க ஆரம்பிப்பேன் ( இது முதல் நிலை ).. 2 வரிகள் கூடத் தாண்டாது.
அப்புறம் நைஸாக..ரெண்டு கைகளையும் முகத்துக்கு முட்டுக் கொடுத்து.. ( இது இரண்டாம் நிலை )
மறுபடி அந்த முதல் 2 வரிகளில் ஆரம்பிக்க.. இன்னும் கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கொள்ளலாமா என்று ஆசை எழும்பும்.
இப்ப ஒரு பக்கம் சாய்ந்தாபடி.. இடது கையை முட்டுக்கொடுத்து ( இது மூன்றாம் நிலை )..
மறுபடி அந்த இரண்டு வரிகளை ஆரம்பிப்பேன்... ம் ஹூம்.. அடுத்த நிலைக்கு மாற உடம்பு உத்தேசித்துப் பெரு விருப்பம் கொள்ள ....
இப்ப நான்காம் நிலையில் அனேகமாகப் படுத்துவிடுவேன்.... அந்த. சுகம் இருக்கிறதே..!
வால்ட் டிஸ்னீ ப்ளூட்டோ நாய் எக்கச்சக்கமான.. தூக்கத்தின் கொடூரமான ஆக்கிரமிப்பில்.. படி, படுக்கை எல்லாவற்றிலும் வழிந்து, வழிந்து எஜமானரின் பின் செல்லும்.. அப்ப கண் இமைக்குக் கீழே குச்சி வச்சாக்கூட உடைந்து தெறித்துவிடும்..!
அந்த மார்கழிக் குளிரின் காலையில் எனக்கும் ப்ளூட்டோவிற்கும் ரொம்பப் பெரிய வித்யாசம் ஏதும் இருந்திருக்காது என்பேன்.
புத்தகம் திறந்த நிலையில் கிடக்க...
சிலீரென்று சாரல் போல் குளிர்ந்த நீர்.. மென்மையாய் முகத்தில் விழ வாரிச் சுருட்டி எழுந்து.. அசடு வழிய...(தூக்கமும் வழிய..) முழிக்க..
அங்கே சத்குரு .. பொய்யான கோப முறைப்புடன்.. இதான் அரைபரீட்ஷைக்குப் படிக்கிற லட்சணமா..? ந்னு கேட்டு.. “அங்கே போய்ப் படி.. என்று ஹாலைக் காண்பிக்க நான் அங்கே செல்கிறேன்..”
அன்று வீட்டிற்குப் போனதும் அப்பத்தாவிடம் இதை எதார்த்தமாகத்தன் சொன்னேன்.. ! அப்பா கூட இதைக் கேட்டுவிட்டு லேசாகச் சிரித்தபடி ஒன்றும் சொல்லாமல் அந்தப்பக்கமாய் சென்றுவிட்டார்கள்.
நானும் ஸ்கூலுக்குச் சென்றுவிட்டேன்.
மாலையில் அப்பத்தாவும் அம்மாவும் பின்பக்கத்தில் அண்ணன் வந்துவிட்டுப் போனதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். இங்கே நான் சத்குருவின் வீட்டிற்குச் செல்லப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தேன்.
வழக்கம்போல் படிப்பு.. 9.00 க்கு விளக்கணைப்பு என்று நிகழ்ச்சிகள்.
மறு நாள் காலை மறுபடி.. ரொம்பச் சீக்கிரமே வந்துவிட்ட 4.25 மணி.
வழக்கம்போல் விளக்கின் வெளிச்சம்... கண்ணுக்குள் சிவப்பு நிறம்.. எல்லாம்.
அப்புறம் ஒரே அமைதி..!
எனக்கு விழிப்பு வந்த போது.. சத்குருவின் விரல்கள் என் முதுகை வருடிக்கொண்டிருக்கிறது.
பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
என் பேர் சொல்லிக் குஞ்சு என்று கூப்பிட்டு..” எந்திரிச்சுப் படிப்பா..! என்கிறார்கள்.
என்னை வருடி எழுப்பிய அந்த வாஞ்சையான விரல்களில் ஈரம்.... கொஞ்சம் கூட இல்லை...
எதேச்சையாய் நிமிர்ந்து அந்த ஜெர்மனி சுவர்க்கடிகாரத்தை பார்க்க...
அது கம்பீரமாய் 5 தடவை அடித்து ஓய்ந்தது
.**********************************************************************************
இப்போதெல்லாம் எனக்கு காலை சரியாக 4 .. 4.15 க்கெல்லாம் தினமும் முழிப்பு வந்துவிடுகிறது..
என் பெரிய மகளைக் “ காலையில் 5 மணிக்கு எழுந்திரிக்கலைன்னா வாளித் தண்ணீரை ஊற்றிவிடு “வதாகச் சொல்லிப் பயமுறுத்திக்கொண்டிருக்கிறேன்..
- தொடரும்...
 இலை 23
சத்குரு : 18
களிமண்ணில் தாமரைகள் பூக்கும் ! :
அந்த மார்கழிக் காலைகளில் சத்குரு ‘பஜ கோவிந்தம்” பாடிய படி காலனிக்குள் நிறைய பெரிய மனிதர்களுடன் 5 மணிக்கெல்லாம் சுற்றி வருவார்கள்.
இதை நாங்கள் ஷண்முக பவனத்தில் இருந்த காலத்தில் பஜனை சத்தம் கேட்டுவிட்டு எழுந்து போய் ஜன்னலில் நின்று பார்த்துவிட்டு திரும்பி வந்து படுத்திருக்கிறேன்.
(என்ன ஒரு அயோக்கியத்தனம்..?)
அதிகாலை சூரியோதயத்திற்கு முன்னால் அந்தப் பனியில் நடப்பது எவ்வளவு சுகமானது.. ஓசோன் களை வீனாக்காமல் பெற்றுக்கொள்ள முடியும் .. என்ற விஞ்ஞான காரணத்திற்காகவாவது அதைச் செய்திருக்கலாம்.
நான் செய்தது இல்லை.
அப்படி ஒரு நாள், காலையில் நன்றாக விடிந்ததும் ஆவின் பால் வாங்கப் போனேன். ( அப்பவெல்லாம் பாட்டில் பால் ) பிள்ளையார் கோவிலில் கந்தசஷ்டி பாடிக்கொண்டிருக்கிறது...
பாட்டிலோடு திரும்பி வந்தவ்ன்.. கோவிலில் இருந்து வெளியே வந்த சத்குரு அவர்களின் கண்ணில் பட்டுவிட..
லேசாகச் சிரிக்கிறேன்..
அதைக் காணாதது போல்.. எனக்கு முன்புறம் நடக்க ஆரம்பிக்கிறார்கள்... எனக்கு அப்பவே.. வயிற்றில் கிலி.!
மாலையில் சத்குருவிடம் வழக்கம்போல் சென்றதும்..
“ ஏண்டாப்பா அவ்வளவு பேர் குளிச்சு சந்தனப் பொட்டு வச்சு கோவிலுக்கு வந்துகொண்டிருக்கும்போது.. அதற்கு நடுவில் .. எப்படி உன்னால் தூங்கின முகத்தோடு வரமுடியுது..?” என்று கேட்க....
எனக்குப் பெருத்த அவமானமாகிவிட்டது...
ரொம்ப மனசுகக்கு கஷ்டமாகிவிட்டது.....
நான் பண்ணினது தப்புத்தான்..அத நான் வீட்டுக்குள்ள வந்த பிறகாவது கேட்டிருக்கலாம்தானே..? இப்படி நுழைஞ்சதும் கேட்கணுமா..?
அதான் ரொம்ப ஃபீலிங்ஸ்.. ஆகி விட்டது..! மூடு அவுட்..!
அப்புறம் ரெண்டு நாள் போகவில்லை. அப்பா கூட “ ஏண்டா ராஜப்பா மாமா வீட்டுக்குப் போகலை..?” ந்னு கேட்டபோது மழுப்பி விட்டேன்.
மூன்றாம் நாள் முருகா அம்மாச்சி வீட்டுக்கு வந்திருந்தார்கள்..
“ சாமி ஏன்யா அந்தப் பக்கமே காணம்..?” ..
நான் பேசாமல் இருந்தேன்.. இதைக் கவனித்த அப்பத்தா.. “ என்ன ராஜா பதில் சொல்லாம நிக்கிறே..?” ந்னு கேட்டுவிட்டு.. அவர்களே..
“ அண்ணே ஏதாவது சொல்லிப்புட்டாகளா..? “ந்னு கேட்க.. நான் சொன்னேன்.
சொன்னதைக் கேட்டுவிட்டு... “ஆமா அதில என்னயா தப்பு..? மாமா நீ சுறுசுறுப்பா இருக்கணும்னு சொல்லிருப்பாக..! அதுக்குப் போய்.. போகாம இருக்கலாமா..? எல்லாம் உன் நல்லதுக்குத்தானே.ய்யா..?”
அதுக்கப்புறம் .. மூன்று நாள் கழித்து மறுபடி போனேன்...
என்னைக் கண்டதுமே.. சத்குரு முகத்தில்.. அப்படி ஒரு சிரிப்பு.. சந்தோஷம்...!
“ ஷண்முகனாதா.. வா வாக்கிங் போகலாம்னு.. உடனே கிளம்பி விட்டார்கள்..”
வழியெல்லாம்.. அதிகாலை நேரத்தின் .. மகத்துவம்.. பற்றிப் பேசிக்கொண்டே வந்தார்கள்...
பிரம்ம முகூர்த்தம்... சுந்தர்ராசு பிள்ளை.. மஹாதேவான்னு.. தண்ணீர் ஊற்றிக் குளிப்பது.. இது போன்ற பல விஷயங்கள்...
என்னை நான் ஒரு தூசு போல உணர ஆரம்பித்தேன்..அந்த சமயத்தில்..
உண்மையில் நான் செய்ததுதான் தவறு...! நாந்தேன் சாரி..!
ஆனால் நான் அதை குற்ற உணர்ச்சியோடு.. மனதில் வைத்துக்கொள்ளக்கூடாதே.. என்ற மெனக் கெடலோடு..
அதிகாலையில் குளிப்பதென்பது நல்ல விஷயமே..! என்று எனக்குப் புரிந்துகொள்வதற்காக..
இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து ..
என் மனத்தில் உள்ள “ எண்ணங்களில்” தான் பிடிக்காததைச் சொன்னவனாக ஆகிவிடக்கூடாதே..! என்கிற.. கவலையோடு..
சத்குரு என் முகம்.. வாடிவிடக் கூடாதே என்பதற்காக..
இவ்வளவு... தூரம் வாக்கிங்கும் வந்து.. தான் சொன்னதன் நியாயத்தின், ... நியாயத்தை.. அறிவுறுத்தினார்கள் என்றால்..!
“ மோப்பக் குழைந்த அனிச்சமாய் இருந்த...
என் முகம் திரிந்து நோக்கக் குழையவும்
காணச் சகியாது நின்ற என் சத்குருவே....!” “
நான் செய்த பாக்கியம் தான் என்ன..?
வாழ்விருக்கும் வரையிலும்.. இந்தக் களிமண்ணில்...
தாமரைகள் பூத்து நிற்கும்..!
நின் பாத கமலங்களுக்காய்..!
**************************************************************************************தொடரும்... பதிவுகள்

 இலை 24

சத்குரு : 19
தற்சமயம் அந்தத் தெருவின் பெயர்.. மஹரிஷி அரவிந்தர் தெரு.. இர்ண்டாவது வாடகை வீட்டிற்கு சத்குருவின் ஜாஹை மாற்றம். அச்சம்பத்தில் சுந்தர் சித்தப்பாவின் சைக்கிளை பாக்கியம் மாமா இங்கே எடுத்து வர.. அதை நான் பொருள்களை கொண்டு செல்வதற்கு உபயோகப் படுத்தினேன்.
நான் சைக்கிள் ஓட்டக் கற்ற புதிது.. என்பதால்.. அடிக்கடி அந்த ஹம்பர் சைக்கிள் காலனிக்கு வரும். நடு நடுவே அப்பா ஆஃபிஸ்ல் இருந்து சைக்கிளை எடுத்து வருவார்கள்.
அந்த நாட்களில் பெரும்பாலும் என் வாழ்க்கை சைக்கிளிலேயே கழியும். சாப்பிட . மற்றும். தூங்க அவ்வப்போது கீழே இறங்குவதுண்டு.
அம்மா, அப்பத்தா எல்லோரும் எத்தணை தடவை கடைக்குப் போகச் சொன்னாலும் போவேன்.
சத்குரு அப்போது அப்பா ஒரு பெரிய சைக்கிளை உடைத்த கதையைச் சொன்னார்கள். 17.11.75 ல் புதிதாய் பி.எஸ்.ஏ சைக்கிள் அப்பா வாங்கினார்கள். சத்குரு அவ்வப்போது அந்த சைக்கிளை எடுத்துச் செல்வதுண்டு.
இடது காலால் பெடலை அமுக்கி ஏறி உட்கார்ந்ததும்.. நிதானமாக.. வலது காலை எடுத்து மேலே வைத்து.. வேஷ்டியை சரி செய்தபடி.. மறு பக்கம் நிதானமாகப் பெடலில் கொண்டு வைப்பார்கள். இந்த 5 – 7 வினாடிகள் எனக்கு ஒரு மாஜிக்..
அப்படி ஒரு பேலன்ஸிங்..!
இந்த நிதானத்தை நான் பலமுறை இமிடேட் செய்ய முயன்று பார்த்து விழுந்திருக்கிறேன்.
எதுக்குப்பா வம்பு என்று.. குரங்குப்பெடல் போட்டு.. வண்டி வேகத்தின் மேல் நம்பிக்கை வந்ததும்.. காலை மறு பக்கம் போட்டு விடுவேன்.
எனக்கு 3 செகண்ட் கூட ஆகாது.... அப்டிஒரு அவசர நடவடிக்கையாய் அது இருக்கும்...!
சாம ன்கள் எல்லாமும் கொண்டு சேர்த்தாகி விட்டது... நாங்கள் ரமண கிருபா என்ற வீட்டில் வாசம். சாரதி அண்ணனும் அச்சம்பத்திலிருந்து இந்த வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
இந்த சமயத்தில் மெட்றாஸிலிருந்து சிவகுமார் மாமா விஜி அத்தான் இருவரும் இங்கே வந்திருக்கிறார்கள்.
இந்தச் சமயத்தில் தான் இப்போதும் கம்பீரமாய் தலைப்பாகையோடு உதட்டில் இளம் புன்னகை தவழ... மிடுக்கான முறுக்கிய மீசையுடன் ...முருகாத்தாத்தா காட்சி அளிக்கும் அந்தப் படம் மானாமதுரை .. பாரதி ஸ்டுடியோவில் வரையப்பட்டு.. தம்பி ராஜாராமன் .. பேப்பரில் சுற்றிக் கொண்டு வந்திருந்தான்.
அந்தப் பேப்பர் அவிழ்க்கப் பட்டதுமே.. மின்னல் போன்று வெளிச்சத்துடன் முகத்தின் முன்னே தாத்தாவின் முகம்.... அருகாமையில் கண்ட அந்த முகம்.. அந்தக் கண்கள் ஆயிரம் கதைகள் சொல்லி நிற்க...
அப்பாவின் மேல் ஆரோஹணம்.... ஆங்கிலம் பொங்கி ஊற்றுகிறது.....
அப்போது எனக்கு மனதில் பதிந்த வார்த்தை... “மோஸ்ட் ப்ராபப்லி..”..
“ Am AS pillai speaking... “
சத்குரு குனிந்து குனிந்து கண்கள் பணிக்க வணக்கம் செலுத்திக் கும்பிடுவார்கள். ஒவ்வொரு முறை பாஸிடிவ்வான வார்த்தைகள் வந்து விழும்போதும்....
இது அடிக்கடி தொடர்ந்து கொண்டே இருந்தது... அனேகமாகத் தினமும்....
எனக்கு ஒரே அதிசயமாய் இருக்கும்.... நம்ம அப்பா இங்கிலிஷ்ல பேசுறாங்களேன்னு..!
அப்ப்வெல்லாம் இது மாதிரி அப்பா பேச ஆரம்பித்த உடனே.. நான் தலை தெறிக்க ஓடிப்போய் சத்குருவிடம் சொல்லிவிட்டு வருவேன்.. அவர்களும் உடனே தலை வழியே ஜிப்பாவைப் போட்டுக்கொண்டு அவசரமாய் இந்த வீட்டிற்கு வருவார்கள்....
.
எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து விட்டால்... நிச்சயம்.. அப்பவின் மேல் யாராவது வந்து விடுவார்கள்.... இது வழக்கமாயிற்று.....!
அந்த ரமண கிருபா நாட்களில்...
அப்பா யாரும் ஆட்கொள்ளாமல் இயல்பாய் இருந்த போதெல்லாம்....
இயல்பாய் என் அப்பா இருந்ததே இல்லை..! நான் விரும்பும் அப்பாவாய் என் அப்பா இருந்ததில்லை..!
அப்பாவின் முகத்தில்.. அன்பைக் காண முடிந்ததில்லை...!
காண முடிந்ததெல்லாம்... ரௌத்திரம்... கோபம்..!
பலமுறை.. கைகளிலும் அந்தக் கோபம் வெளிப்பட்டிருக்கிறது...!
கைகள் விடிவது.. அம்மாவிடமும்.. என்னிடமும்....! என் தம்பி தங்கையர் அனைவரும் கோழிக்குஞ்சாய்.. பயந்துபோய்க் கிடந்தார்கள்....
அப்பத்தாவையோ பார்க்கக்கூடப் பிடிக்காது...! அம்மா..! என்று அழைத்து அழுதது.. உயிரற்ற சடலத்தின் முன்னால் தான்...! ( இதற்கும் காரணம் இருக்கிறது..)
ஆனால்... சாமி ஆடுதல் மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது....!. சாமி இறக்குதலும் ..!
அப்பாவிடம் கோபமான மன நிலை எப்போதும் .. நிலைத்திருந்தது...! குடும்பத்தில் நிம்மதி இல்லை..!
வீட்டில் சூறாவளி அடித்த போதெல்லாம்.. .. நான் சத்குருவிடம்.....!
இப்போதெல்லாம்... மிகுந்த விருப்பத்தோடு சத்குருவிடம் இருப்பதை விரும்பினேன்..
“ஹங்கேரியின் தலை நகர் என்ன சொல்லு பார்ப்பம்..!“
அய்யா நீங்கள் உலகத்தின் அத்தனை தலை நகரையும் கேளுங்கள்.. நோ ப்ரொப்ள்ம்..
நான் உங்ககிட்டத்தான் இருப்பேன்...! வீட்டுக்குப் போக மாட்டேன்...!
***************************************************************** தொடரும்........

இலை 25
Satguru : 20 :
சொல்வதையெல்லாம் செய்துவிட முடிகிறதா என்ன..?
வீட்டில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்க... சத்குருவிடம்.. புகாரும் அளிக்கப்பட்டது.
அப்புறம் கொஞ்சம் அமைதி.. நிலவ .. நாட்கள் நகர்ந்தன. நடுவே சத்குரு தமிழ்பேராசிரியர் முருக ரத்தினத்தின் வீட்டிற்கு... மாற்றம்..
இந்த முறை.. நான் வீடு மாற்றச் செல்லவில்லை. ஏதொ சாக்குச் சொல்லி அந்தச் சமயம் தீவிரமாகப் படிப்பதாகச் சொல்லி விட்டேன். ( அப்பத்தானே தப்பிக்கலாம்! )
“ என்னடாப்பா அந்தப் பக்கத்திலேயே காணம்..?” என்றார்கள். என்னமோ எனக்கு அந்தச் சமயம் வேலை பார்த்து உதவ மனம் வரவில்லை.
இப்போது நேர் எதிர் வீட்டில் சத்குரு.. கூப்பிட்ட குரலுக்கு ஓடிவிடும் தூரம்.!
இந்த நேரத்தில் தான்.. பாமா அக்காவிற்கு.. குழந்தை வேண்டி எல்லோரும் ப்ரார்த்தித்துக் கொண்டிருந்த நேரம்..
எங்கிருந்தோ ஒருவனை அழைத்துக் கொண்டு வந்தார்கள்.. அம்மன் அவன் மேல் ஆட்கொண்டு அருள் வாக்கு சொல்வதாக..!
பலவீனமான தருணங்களில்.. இப்படியும் தானே சில விஷயங்கள் நடந்துவிடுகின்றது..?
அவன் மடேர் மடேரென்று.. சுவற்றில் அடித்துக்கொண்டு.. சாமியாடினான்..! அந்த நேரத்தில் அவன் சொன்னதை எல்லோருமே கேட்கும்படியாக நிகழ்ச்சிகள்..
ஒரே நாளில் சமயபுரம் போய்.. வந்தார்கள்... மிகுந்த களைப்பு..! அனைவர் முகத்திலும்..!
ஏன் இந்த மாதிரி நடந்தது.. என்று சொல்லத் தெரியவில்லை..
முருகன் வந்து மகிமைகள் நிகழ்த்திய வீட்டில்...
எவனோ இவன்..?
நம் நம்பிக்கைகள் .. சரணாகதி..! இவற்றையெல்லாம் மீறி வேற்று ஆளொருவன் கூற்றில் ..
நிகழ்வுகள் சாத்தியங்களாகிவிடுமா என்ன..?
அதன் தேவைதான் என்ன?
அழகு மலராய் சுபஷ்ரீ அங்கே அவதரிக்கக் கருப்பணின்.. வேலவனின் அருளிருக்கும்போது...! வேறென்ன நடந்து விட முடியும்...
மறு வாசல் மார்க்கம் காட்டுபவன்தானே.. நம் குலம் காத்து நிற்பவன்..!
நமக்கு என்ன செய்ய வேண்டும் .. என்பது அவனுக்குத் தெரியும்...!
கையடித்துச் சத்தியம் காப்பவன் அவன்..!
அவனன்றி நமக்கு வேறெது வேண்டும்..!
தாத்தன் வடிவிலும்.. தகப்பன் வடிவிலும்...
குருவாகி.. சத்குருவுமாகி.... தாயும்.. ஆனவனாய்..
HE ALONE EXISTS.. NOTHING ELSE...NOBODY ELSE..!
***********************************************************************தொடரும்


இலை 26

சத்குரு : 21
சாமியாடுதலில் கேள்விகள் இல்லாது அதை ஏற்றுக்கொண்டிருந்த மாதிரியான மன நிலையில் இருந்த சத்குரு.. YSS -ல் சேர்ந்தபின்பான காலகட்டம் அது பற்றிய தெளிவு வேண்டி... பின்னாளில் 93-ல் என நினைக்கிறேன்.. அவர்களுக்கும் எனக்கும் நடந்த ப்ரத்யேகமான சாமியாடுதல் (நானும் ஆடிக்கொண்டிருந்தேன்) தொடர்பான ஸ்ம்பாஷனைகளின் சாரத்தை பின் ஒரு பதிவில் பகிர்வேன். அதற்கு முன்னோட்டமாகவே இதற்கு முன்பான இரண்டு பதிவுகளும்..
***************************************************************************...*****
இனி.. ராசாத்தேவர் என்பவர் ஆரம்பிக்க.. வீடு கட்டுவது பற்றிய அத்தியாயம் ஆரம்பித்தது.
அப்பவெல்லாம்.. ஒரு செண்ட் 500 ரூ. 8 செண்டுகளுக்குச் சற்றுக் குறைவாய் செல்வ நிலயம் எழுவதற்கும்.. 5 செண்டிலான இடம் ஷண்முகபவனத்திற்குமாய் முடிக்கப் பெற்றது.
19500 ரூ பில்டிங் கோ ஆப். சொசைடியில் லோன் அப்பா வாங்கினார்கள். 35 ரூ மாதம் பிடித்தம். கட்டிடம் எழும்பியது. வெடிகள் வைத்து கிணறு.. முண்டுக் கற்களினால் பேஸ் மட்டம் என வேலை...
அந்தக் கால கட்டத்தில்.. அப்பா ஆஃபிஸ் போய்விடுவார்கள்.

சத்குரு கையில் குடையோடு.. இந்த வீட்டிற்கும் அந்த வீட்டிற்கும்.. நடந்து நடந்து... நாள் முழுக்கக் காத்திருந்து.. காவலிருந்து...
(பொதுவாய் காத்து நிற்பதும், காவலிருப்பதும் குலதெய்வத்தின் வேலை) அதை சத்குரு எங்களுக்குச் செய்தார்கள்.
ஒரே வித்தியாசம்.. கையில் வாளுக்குப் பதில்.. குடை...!
மேற்பார்வையிட்டு.... மாயாண்டி கொத்தனாரிடம் உரியவற்றைப் பேசி... சிமெண்ட் மற்றும் கம்பி, செங்கல் தேவைகளுக்கு... ஒருங்கினைந்து செயல் பட்டு.. காங்க்ரீட் போடும் போது.. எல்லோருக்கும் வடைகள் கிடைத்ததா என்பதை உறுதி செய்வது வரை...
யாதுமாகி நின்று.. அந்த வீட்டை எழுப்பி..
35 வருஷங்களுக்கும் மேலாய் கைம்பெண்ணாகி விட்ட போதிலும்.. கலங்காமல் ஓடாய் உழைத்து புகுந்த வீட்டுடன் ஒன்றி..
தன் மகன், என் அப்பனைத் தங்கைக்குத் தாரை வார்த்தும்.. என் அப்பன் அதிர்ஷ்டக் கட்டை.. 40 நாளில் தகப்பன் விட்டுச் சென்ற ரணம் ஆறும் முன்னே,,. தாயாய் வரித்த ஷெண்பகமும் விட்டுச் செல்ல,..
தங்கை விட்டுச் சென்ற ஐந்து மக்களையும் அரவணத்து.. ஒப்பற்ற கடமைகள் ஆற்றி நின்ற பிறகும்.. என் அப்பத்தாளை நடு வீதியில் நிற்க வைத்தது.... கனவிலும் நினையாத காலம்...
தங்குவதற்கு என்று தங்கைக்கொரு இடம்... சத்குருவின் நிழலில் ஷண்முக பவனமாய் எழுந்து நின்றது....
இந்த நல் நிகழ்வையாவது மகிழ்வுற நடக்க விட்டதா காலம்...?
இல்லை..!
தாய் ஐவரை விட்டுச் சென்றாள். கொஞ்ச காலமாவது வாழ்ந்திருந்தாள்.. ஐந்தாவதாய் வந்த பஞ்சவர்ணமோ.. 10 மாதக் குழந்தையை விட்டு.. வயிற்றில் 4 மாதக் குழந்தையோடு... தாயைத் தேடிச் சென்றுவிட...
என் தகப்பன் அழுது பார்த்திருக்கிறேன்...
ஆனால் சத்குரு அழுது .. பார்த்ததில்லை..!
அந்த நாற்காலியில்.. ரொம்பச் சின்ன உருவமாய் தன்னை மடக்கிக் கொண்டு.. ஆறாய்க் கண்களில்.. நீரோட...!
மனம் பதைக்கப் பார்த்திருந்தேன்...
மனதில் ஒரு கணம்.. ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் போதிருக்கும் அந்தக் கம்பீர உருவம்.. எழுந்து மறைந்தது...
************************************************************************தொடரும்
இலை 27

சத்குரு : 22
அத்தணை உறவுகளுக்கும் ஆதார ஸ்ருதியாய் இருப்பது ‘ தாயன்பு “ என்னும் மகோன்னதமான உறவு.
இந்தத் தாயன்பை குறித்து நிற்பது “ அங்காள ஈஸ்வரி “ அதாவது உறவு நிலைகளுக்குள் வியாபித்து நிற்பது தாயன்பின் வேறு பட்ட வடிவங்களே..!
இந்த உறவுகளை -அங்காள ஈஸ்வரியைக்- காத்து நிற்பதே ‘ காவல் தெய்வம்
“ காவல் தெய்வம் என்பது நம் அனைவரையும் அனத்து வழிகளிலும் காத்து ரட்சித்து காலம், நேரம் என்ற வரையறையும்.. எல்லைகள் என்ற வரையறையும் இல்லாது எல்லாக் காலங்களிலும் ‘உறவுகளைக்” காத்து நிற்பதே ‘ க...ுல தெய்வம் “
மாட கோபுரங்கள் என்ற எல்கையும் கூட இந்த மன்னர்களுக்கு இருப்பதில்லை.
( முத்தையன் வழிபாட்டு ஸ்துதியில் இதனாலேயே
“ மாட கோபுரம் இல்லாத மன்னவனே போற்றி..!
என்று இந்த உணர்வை எழுதினேன் )

இதற்கு முன் சமீபத்தில் ஒருமுறை அலங்காரம் செய்து எடுக்கப்பட்ட கருப்பனின் திருமுகத்தில் சுப்பையன் தெரிந்தது ஒரு பௌதீகச் சான்று.
இந்தத் தகுதியும் பேராண்மையும்.. எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை.
உரிய நேரத்தில் இந்த காவல் தெய்வங்கள் தாமாகவே சந்ததியரால் இனம் காணப்படுவர். அப்படி நான் சத்குருவிடம் கண்டு கொண்டதைத்தான் நேற்றய பதிவில் பகிர்ந்தேன்

இலை 28

பதிவு 21 ன் தொடர்ச்சி :
சத்குரு : 23
சத்குரு காட்டூருக்குச் செல்லவில்லை. பௌர்ணமி நிலவின் கீழ் அந்தப் பஞ்சவர்ணம் தழலில் கனன்றதைக் காணத் தைரியம் இல்லையென்று இங்கேயே இருந்துவிட்டார்கள்.
...
அந்தச் சமயத்தில் மட்டும் அல்ல நம் உறவுச் சூழலில் இப்படித்தான் தாங்க முடியாமல் இடிகள் இரக்கமின்றி அவ்வப்போது விழுந்துவிடுகின்றன.
இதை விளங்கிக் கொள்ளும் அளவிற்கு நமக்குச் சக்தி இருப்பதில்லை.
இருந்தாலும் மீண்டு வருகிறோம்.... மீண்டும்.. மீண்டும்....
இப்படிப் பட்ட சூழலில் என் தாய் மாமன் வீட்டில் இருந்து யாரும் இந்த இழப்பைக் கேட்கக் கூட இல்லை. அதே தெருவில் பக்கத்தில் தான் இருந்தார்கள்.
அப்பாவுக்கோ மஹா கோபம். சமாதானத்திற்கு அச்சம்பத்திலிருந்து பெரியவர்கள் வந்திருந்தும்.. எதுவும் நடக்கவில்லை. இவ்வளவுக்கும் அவர்களும் ஷண்முக பவனத்திற்கு அருகிலேயே இடம் வாங்கியிருந்தார்கள்.
ஷண்முகபவனம் கிரஹப்ரவேசம் வேண்டாம் என்று அப்பா......
“ என் பிரியமான மகளாய் என்னிடமே வளர்ந்த என் தங்கையை இழந்திருக்கும் இந்த நேரத்தில் இது அவசியமா..? என குமுறிக்கொண்டிருக்க..
சத்குரு “ வேலு – பாமா.. திருமணம் நடந்த விதம் உனக்குத் தெரியாததா..? என்று எவ்வளவோ உதாரணங்கள் எடுத்துச் சொல்லி... ஒரு வழியாய் எளிமையாக அந்த நிகழ்ச்சி சில மாதங்களின் பின் நடந்தது. ஆனாலும் யார் முகத்திலும் சந்தோஷம் இல்லை.
தாய் மாமன் வீட்டிற்கும் சொல்லவில்லை.
அங்கே நாங்கள் குடி சென்றதும்.. சத்குரு வீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறையேனும் வந்து செல்வார்கள். அண்ணனும் தங்கையும் அளாவளாவுவார்கள். முக்கிய விஷயங்கள் பேசுவார்கள்.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது .. சத்குரு அவர்கள் வரும்போது நடக்கும் நடை.
அதில் ஒரு தயக்கமோ.. துவளலோ தென்பட்டால்.. ஒரு பெரும் ப்ரச்னையைத் தாங்கி வருகிறார்கள் என்பதும்..
போகும்போது கேட்டைத் திறந்து நம்பிக்கை உணர்வு மேலிட தயக்கங்கள் ஏதுமின்றி சிரித்தபடி சில வேளைகளில்.. வெளியேறும்போது.. தீர்வுடன் செல்கிறார்கள் என்றும்..
போகும்போது பாதி திறந்த கேட்டின் வழியே சற்றே நழுவுவது போல ஒருக்களித்தபடி.. சின்ன எட்டு வைத்து வெளியேறினார்கள் எனில்.. தீர்வு கிடைக்கவில்லை என்றும்.. புரிந்து கொள்ளலாம்.
இப்படித்தான் ஒரு நாள் சத்குரு வெளியே சென்ற போது.. அந்த நடையில்.. மிகுந்த பாரமும் கவலையும் தெரிந்தது..
அப்பத்தாவின் முகத்திலும் அதன் சாயல்..
********************************************************************** தொடரும்

இலை 29

சத்குரு : 25
முந்தைய பதிவு..
சற்று மன இறுக்கமான பதிவு.. அறிவேன்..
இருப்பினும் மாமனிதரான சத்குருவும் ஒரு சாமான்ய மனிதனாக எதிர் கொள்ள வேண்டிய வாழ்க்கையின் பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது என்பதைப் பதிவு செய்யும் பொருட்டே பகிரப்பட்டது. ...
இதே போன்று ஏராளமான கடுமையான நேர்முகங்களை குடும்பத் தலைவர் என்ற முறையில் எதிர் கொண்டதைப் பார்த்திருக்கிறேன்.
அதற்காக எந்தச் சமயத்திலும் இயற்கையான அவர்களின் கரிசனம் அனைவரிடத்திலும் குறிப்பாக இளம் தலைமுறையினரிடம் எள்ளளவு கூடக் குறைந்தது இல்லை.

குடும்பத்துக் கவலைகள் மனதில் ஓடும்போது தாம் விரும்பிச் செயல் படும் தளங்களில் இதன் வெளிப்பாடு நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.
ஆனால் சத்குரு இதனின்றும் வேறுபட்டிருந்தார்கள். இது அனைவருக்கும் சாத்தியமான விஷயமே அல்ல..!
இனி.. என் பள்ளி நாட்களுக்கு வருகிறேன்.
அப்போது 10ம் வகுப்பு. நாகசுந்தரம் என்ற NCC (AIR WING) ஆஃபிசர்.. ஏர் விங் .. மாணவர்களை விளையாட்டு மைதானத்தில் அமரச் செய்து.. பறக்கும் விமான மாடலை வைத்து வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். மேலும் மறு நாள் காண்டிடேட்ஸ் தேர்வு ( CANDIDATES SELECTION ) இருப்பதையும் தெரிந்து கொண்டேன்.
தேர்வுக்காக விருப்பபட்ட மாணவர்களை வரிசையாக நிற்க வைத்த வரிசையில் நானும் இருந்தேன்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் வரிசையில் நான் இல்லை.
ஆம்.. அதில் நான் “ செலக்ட் “ ஆகவில்லை...!
அந்த NCC மாணவர்கள் பெரேட்(PARADE) செய்வது.. பெரிய பூட் போட்டு அணிவகுத்து நடப்பது.. இறுதியில்.. பூரி கிழங்கு சாப்பிடுவது எல்லாம் பார்த்துக்கொண்டே .. இருந்தேன்.. கூடவே அந்த மாணவர்கள் செய்த க்ளைடர் (GLIDER ) மாடல்களையும்.. பார்த்துக்கொண்டே இருந்தேன்....
காலம் ஓடிற்று.
இறுதி பாட்ச் (BATCH) 11-ம் வகுப்பு.. முடிந்து.. பி.யு.சி.. வெள்ளைசாமி நாடார்.. கல்லூரியில் சேர்ந்தேன். FIRST GROUP.. Also called MPC group.அப்போது மூர்த்தி மாமா.. ( BSc )பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி.. யில்.
கல்லூரி வாழ்க்கையின் போதும் .. முன்பு நின்றது போல்.. தரைப்படை என்.ஸி.ஸி selection க்குச் சென்று நின்றேன். ..
Prof. அகஸ்டின் (Eng Dept).. march செய்யச் சொல்ல.. 26 இன்ச் பெல்பாட்டத்தில்.. March பண்ண முடியவில்லை.
எனக்கே அசிங்கமாயிருந்தது.. !
Army என்.ஸி.ஸியிலும் நான் தேர்வாகவில்லை...
ஸ்போர்ட்ஸ்லயோ அல்லது என்.சி.சி யிலோ ஒரு சர்டிஃபிகேட் கண்டிப்பாக வேண்டும். அப்பத்தான் வேலையெல்லம் கிடைக்கும். இந்தக் காரணத்தினாலேயே முருகா மாமாவுக்கு சப்.இன்ஸ்பெக்டர் செலக்ஷன் ஆக முடியவில்லை என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதனாலேயே மிகவும் கவலையாகக் கூட இருந்தது.
பி.யூ.சி முடித்து.. பி.எஸ்.சி (Physics)) ல்.. சேர்ந்து.. படித்துக் கொண்டிருந்தேன். படிப்பில் என்னுடைய பெர்ஃபாமன்ஸ் எனக்கே திருப்தி கரமாயில்லை..
இந்தச் சமயத்தில்தான்.. சத்குரு.. இந்து ஆங்கில நாளிதழில் வெளி வந்த விமானப் படைத் தேர்வுக்கான விளம்பரத்தை கட் செய்து கொண்டு வந்திருந்தார்கள். டிசம்பர் 1980 முதல் வாரத்தில் வந்திருந்த விளம்பரம் அது.
என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட விளம்பரம் அது..!
“ இதுக்கு அப்ளை பண்ணுப்பா..! பார்க்கலாம்..” என்றுவிட்டு சென்றுவிட்டார்கள்.
மறு நாள் நானே அதை டைப் செய்து.. பூர்த்தி செய்து அனுப்பினேன்...
என் வாழ்வின் மகத்தான பக்கங்களுக்கு.. பிள்ளையார் சுழி இடப்பட்டதை நானறியேன்..
சத்குரு... அறிந்திருந்தார்கள் போலும்....!!!
***********************************************************************தொடரும்

இலை 30
சத்குரு : 26
INA VETERAN SENDS HIS DISCIPLE TO THE INDIAN AIR FORCE:
நான் அனுப்பியிருந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் பட்டு 14 டிசம் 1981 அன்று தேர்வுகளுக்கு வரும்படி அழைப்பு.. வந்திருந்தது.
அந்தச் சமயத்தில் செமெஸ்டர் தேர்வுகள்.. நடந்து கொண்டிருந்தது. நல்ல வேளையாக 13 ந் தேதியே கடைசி கெமிஸ்ட்ரி.. முடிந்த உடனே கிளம்பினேன்..
கால் லெட்டர் வந்ததை சத்குருவிடம் சொல்ல.. அவ்வளவு சந்தோஷம். கூடவே ..
”இதில் எப்படியாவது செலக்ட் ஆயிடுப்பா..! ஆயிட்டேன்னா.. உன் அப்பாவிற்கும் உதவியாயிருக்க முடியும். உன்னுடைய வாழ்க்கையும் மாறிவிடும்.. யூனிஃபார்ம் ல தேசத்திற்கு சேவை என்பது பெரிய கொடுப்பினை.. உன் அப்பாவை நேவியில் சேர்க்க நினச்சது.. முடியாமப் போயிருச்சு.. அம்மாவும் .. உங்க அப்பத்தாவும் சம்மதிக்கலை... ஒரே புள்ள ..அவனைப் போயி..” னு தடுத்து விட்டார்கள். என்றுவிட்டு “சத்குரு மதுரையிலிருந்து இடம் கிடைப்பது கஷ்டம்.. நேரே திருச்சிக்குப் போய் அங்கிருந்து வேறு பஸ் பிடித்தால் போய் விடலாம்”.. என்று.. நிறைய வழிகாட்டுதல்..
.
ஆனால் எனக்கு மனதில் நம்பிக்கை.. இல்லை.
காலை 5.30 க்கு சென்னை.. தாம்பரத்தில் இறங்கி (உடன் 3 பேர்) விமானப் படைத் தளத்திற்குச் சென்றோம். காத்திருந்தோம் வெளியில்.
சரியாக 7 மணிக்கு உள்ளே அழைத்தார்கள். பயங்கரமான கூட்டம் ஆயிரக் கணக்கில்.
முதலில் 1200 பேர் கொண்ட குழுவாக .. ஓடுபாதையில்(ரன்வே) பிரித்தார்கள். நல்ல வெயில். மொத்தமாக 6 குழு பிரிந்து நிற்க.. கிட்டத்தட்ட 7300 பேர்..
நான் முதல் பாட்ச். அந்த ஹாலில் 1200 பேரும் அமர்ந்தோம். இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கப்பட்டது.. 30 கேள்விகள். அவகாசம் 20 நிமிடங்கள். நேரம் முடிந்து மணி ஒலிக்கும் போது.. இரண்டு கைகளையும் உயர்த்தி நின்று விட வேண்டும்.
கணிதம்.. ஆங்கிலம் , விஞ்ஞான மற்றும் ஜி.கே சம்மந்தப்பட்ட கேள்விகள்.. எளிது என்று சொல்லிவிடமுடியாதபடி வினாக்கள்..!
கைகளை உயர்த்தி நின்றுவிட்டு வெளியே.. வந்தேன்.. விமானப் படையினரின் சீருடையும்.. அந்தச் சூழ்னிலையும்.. மனதைக் கலக்கிற்று.
இப்படியாக 6 குழுவினருக்கும் (Batches ) தேர்வு முடிந்த போது.. மாலை 4 மணி.
5 மணிக்கு விமான ஓடு பாதையில் வந்து அமரச் சொன்னார்கள். ஜே..ஜே.. ன்னு கூட்டம்.
அத்தனை பேரும்.. படபடப்போடு.. அமைதி காக்க..
முடிவுகள்.. சொல்ல ஆரம்பித்தார்கள்.. 30 பேருக்குப் பின் என் நம்பரும் அறிவிக்கப் பட்டது.. எங்களைத் தனியே நிற்கச் சொன்னார்கள்.
நாங்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறோமா..? இல்லை ஃபெயிலா..? என்று தெரியவில்லை.
இப்போது.. நாங்கள் மொத்தமாக 128 பேர்.. தனியே நின்றிருக்க.. 7300 பேரில் 128 பேர் என்ற விகிதம் நிச்சயம் நமக்கு சாதகமான முடிவாக இருக்க வாய்ப்பில்லைதானே..?
ஃபெயில் என்பதை நாங்களாகவே முடிவு செய்து விட்டோம்.
30 க்கு 25க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Sqn Ldr.Seshan declared the results as below...!
‘Listen Gentle Men.. All those who have scored 25 & above out of 30 are declared ‘Passed”. Am happy to announce here these 128 Boys have cleared their PST (Preliminary Screening Test). And they will proceed for the medical fitness and Theory exams after two days.. I wish them all the Best..”
Thats all I broke into tears..
இதை உடனடியாக மாமாவிற்கும்.. வீட்டிலும் சொல்ல வேண்டும்...
ஆனால் எனக்குத் தெரியாது.. இதை விடவும் கடினமான தேர்வுகள் வரும் நாட்களில் இருக்கின்றன என்பது.
இது தெரியாமல்..
மனதில் உற்சாகம் கரை புரண்டோட நேரே.. அய்யனாவரம் சென்று கதவைத் தட்டினேன்..
*********************************************************************** தொடரும்
இலை 31
சத்குரு : 27
நான் வந்த விவரத்தை அயனாவரத்தில்..பெரியம்மா, பெரியப்பாவிடம் சொல்ல.. பெரியப்பாவிற்கு ரொம்பச் சந்தோஷம்.
ஸ்ரீ.சொக்கலிங்கம் பெரியப்பா என் மனைவியின் வழியில் அவர்களின் அப்பத்தாக்களின் வழி உறவினர் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
“ஏன்ய்யா உன் ஓய்வு நேரத்தை எப்படி கழிப்பாய்..? இந்தக் கேள்வியுடன் தான் சம்பாஷணை பொதுவாக ஆரம்பிக்கும்.
இந்த முறை..
இந்த இரண்டு நாட்களிலும் பெரியப்பா.. எனக்கு ஒரு இண்டர்வியூ வை எப்படி சந்திக்க வேண்டும் என்பதைத் தெளிவாக.. செய்முறை பயிற்சியோடு சொல்லிக்கொடுத்ததை மிகுந்த நன்றியறிதலோடு நினவு கொள்கிறேன்.
இரண்டு நாட்கள் கழிந்து.. சென்றேன்.
நண்பர்கள் ஹைட்.. வெயிட்.. சரியாக இருக்கணும்.. இல்லன்னா ரிஜெக்ட்.. என்று சொல்ல.. நானும் பயந்து போய்.. 9 வாழைப்பழங்கள் தின்று.. எடையை ஏற்றிக்கொண்டேன். வயிறு தனியாக அசைவது போல ஒரு ஃபீலிங்...
அந்த சுற்று நல்ல வேளையாக.. முடிந்தது.. அதற்கு அடுத்த நாள்..
முதலில் ஆங்கிலம்... பின் கணிதம்.. அதன் பின் சயின்ஸ்..G K.. என்று 45 நிமிடத் தேர்வுகள்... ஒவ்வொரு முறையும் தேர்வு முடிவுகள்... அப்புறம் அடுத்த தேர்வு...
இப்படியாக.. 128 லிருந்து எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து.. 98 ஆகி இருந்தது.
சத்குருவின் .. என் குல தெய்வத்தின் அனுக்ரஹம்.. நிச்சயம் எனக்கிருந்ததால்... 98 பேரில் நானும் இருந்தேன்.
இன்னும் இரண்டு படிகள். இப்பொது மனதில் சற்று நம்பிக்கை பிறந்தது. கூடவே தவிப்பும்.. இதிலும் தேர்ச்சி பெற வேண்டுமே..?
பதினைந்தாம் நாள் விமானப் படை வளாகத்தினுள் நுழைகிறேன்.. இன்று ஃபைனல் மெடிகல் எக்ஸாம்( Final Medical Examination) ஓடவிட்டு.. நடக்கவிட்டு.. கயிறு ஏறச்சொல்லி என்று.. அனைத்திலும் .. வெற்றிகரமாக வெளி வந்தேன்.
எண்ணிக்கை.. 87 ஆகி இருந்தது.
ஒரு நாள் விட்டு 17-ம் நாள்.. நேர்முகத் தேர்வு... ( Personal Interview )
அந்த அறையின் உள்ளிருந்து வெளியே வந்தவர்கள் பேயடித்த முகத்துடன்.. வெளி வந்தார்கள்..
என் முறை வந்த போது... உள்ளே செல்ல..
பளீரென்று 3 ஃபோக்கஸ் லைட்டுகள் (FOCUS LIGHTS). ஒளி வெள்ளம்.. பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மனதில் பதட்டம்.. தொற்றிக் கொண்டது.
“ Are you Mr.Shanmuga nathaan..” இடது பக்க இருட்டிலிருந்து கேள்வி..
“ yes sir “ என்று சொல்லி விட்டு நின்றேன். ( அப்படித்தான் பெரியப்பா சொல்லிக்கொடுத்தது)
“ Please sit down “
“ Thankyou sir..” உட்கார்ந்த பின்.. எங்கு.. எதைப் பார்க்கவேண்டும் எனத் தெரியவில்லை.. அவ்வளவு வெளிச்சம்.
என்னுடைய ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது.. என்று நன்கு தெரிகிறது.
ஒவ்வொரு மூலையிலிருந்து வந்த கேள்விகளை வைத்து.. 4 பேர் இருந்தார்கள் என்று கணித்தேன்.
“ What is kaleidoscope..? “
“ Dont know sir..”
“ You say yourself a Science student of Physics..?”
.....................................................................
“ What is the Chemical Name of Diamond..?”
........................................................
“ Why it shines..? in dark..”
............................................
“ what do you mean by Refractive Index..?”
....................................................
( I replied all the above questions suitably ) AND THE SESSION LASTED FOR 20 MTS
“ Why do you want to join the Air Force..?..”
“ Actually my father had a chance to join the Navy..”
Interviewing Officer interrupted.. sharply..!
“ Why..You don’t want to..?”
“ I definitely want to join the AF. not only I love to be in Uniform. Also to fulfill my Maternal Uncles Dream.. .”
“ Who is your Maternal Uncle..?”
“ He is Sri.Aiyaadurai ..an Ex from INA. A World War veteran and A close Associate of Subhaash Chandra Bose.. Also a Freedom Fighter of India..”
When I said this, I was at the Peak of my Confidence.
.........................................- SILENCE ...................................................
There was an Absolute Silence.. there..!!!!
அதற்கப்புறம் அங்கே கேள்வி இல்லை. எனக்கு சத்குருவின் பெயரும் விளக்கமும் கொடுத்த பின் எனக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை...
“ Thankyou Shanmugan.. you can go now..”
கம்பீரமாக வெளியே வந்தேன்.
18-ம் நாள் முடிவுகள் வெளிவந்தது.. நான் விமானப் படையில் நுழைந்தேன்.
Kindly watch – the miracle done ON 18th day.
And the Task assigned to me BY SATHGURU is not an Easy one...!
I am very proud to say that..!
.................................................AIR WARRIOR CONTINUES..FROM NOW

இலை 32
சத்குரு : 28
AIRWARRIOR REPORTS TO SATHGURU : PART 1
இந்த விமானப் படை வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும்..
சத்குரு அவர்களுக்கே சமர்ப்பணம்.
ஏனெனில் என் தகப்பன் சுட்டு விரல் பற்றி டி.வி.எஸ் நிறுவனத்தில் இணைத்து.. அவர்கள் காட்டிய வழியில் 42 வருடங்கள் பணி செய்த பெருமை என் தகப்பனுக்கு உண்டு.
வேற்று நிறுவனங்கள் வந்து அதிக சம்பளத்திற்கு அழைத்த போதும் செல்லவில்லை.
சில விஷயங்கள் மனதிற்கு வெகு நெருக்கமானவை. அதை மீறி எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் மாற்றங்களை மனது அங்கீஹரிப்பதில்லை.
அந்த வகையில் அடுத்து வரும் சில பகிர்வுகள் .. வேறு எவரிடமும் நான் பகிர்ந்ததில்லை. காரணம் அந்தப் புனிதமான தருணங்களைப் புரிந்து கொள்வது எல்லோராலும் முடியாது.
ஒரு நொடிப் பொழுதில் அது வேறு விதமாக.. தற்பெருமையாகக் கூட கருதப்பட்டு விடலாம் என்ற அச்சத்தில் .. என் அப்பாவிடம் கூட மேலோட்டமாகத்தான் பகிர்ந்திருக்கிறேன்.
இவை யாவும் சத்குருவிடம் கூட நான் பகிர்ந்துகொள்ள காலம் இடம் கொடுக்கவில்லை. ஆகவே இந்தப் பகிர்வுகள் அவர்கள் எனக்குக் காட்டிய பாதையில்.. நான் அதற்குரிய தகுதிகளோடு பணியாற்றி இருக்கிறேன்.. என்பதை சில சுவடுகளின் மூலம் பதிவு செய்து.. சத்குருவின் திருப்பாதங்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.
ஜெய் ஹிந்த்..!
இறுதியில் நாங்கள் 72 பேர் தேர்வானோம்.
அதில் 14 பேர்களுக்கு... ( ELECTRONICS & COMMN. ENGG )
என்னை வழியனுப்ப அப்பா வந்திருந்தார்கள் சென்னைக்கு. அப்பாவிடம் தேர்வான செய்தி மற்றும் என்னுடைய உருக்கமான நன்றியையும் உறுதி மொழியையும் பதிவு செய்து சத்குரு அவர்களுக்கு அனுப்பினேன்.
That letter Begins like this...
“ சுதந்திரப் போராட்ட வீரரும் எங்கள் குடும்பத்தின் தந்தையுமாகி நின்ற “ என்று ஆரம்பித்து.
.
“உங்கள் வழிகாட்டுதலில் விமானப் படையில் இணையும் விமானப்படை வீரனும் அன்புப் பேரனுமாகிய என்னுடைய வீர வணக்கத்தைத் தெரியப் படுத்திகொள்கிறேன்.. ஜெய் ஹிந்த்..!
என்று முடியும்.
அதைப் படிக்கும்போது என் அப்பா அழுதுவிட்டது இன்னமும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது.
பெங்களூர் பயணம்... 6 ஜனவரி 1981. ல் காலைப் பொழுதில் நிறையக் கனவுகளோடு எங்கள் குழு உரிய இடத்தில் ‘ர்ப்போர்ட்” செய்தது.
எங்களை வரவேற்று ஸ்க்வாட்ரன் லீடர் யாதவ் ( Sqn Ldr Yadav ) பேசிய உரை பின்வருமாறு .:
“ My dear Gentlemen , I welcome you all for the 16th Batch Training here. I see here number of heroes.. like Kamal, Rishikapoor, Mithun and Rajnikanth.. . We will ensure your Identity is ERASED into to. What so ever you are.. who so ever you are..! right now you are like this sand. ( Picked up Hand full of mud )
We have to find the ‘”Gold”...... “ The Soldier” in you.. and thats what you have come here for. I expect you all to have that GUTS to undergo the tough training procedures for the next six months.. You have to take this as a challenge for you individually.. and personally. You have to become FIT physically and mentally worthy to wear the Uniform...
All these days you all must have had food in Golden bowls.. Never mind.. We will ensure you turn out to be a brave Air warrior. and become ready to Serve the Nation with Smile..
AIR FORCE.. is a way of LIFE..!
I wish you all Best of Luck.. Jaihind..!..”
*********
வெல்கம் லன்ச் நன்றாகத்தான் இருந்தது.
அப்புறம் நான் ஏற்கனவே சொன்ன “ சிகை அலங்காரம் “
மறு நாள் காலை 4.45 க்கு விசில்.. ரன்னிங் .. முதல் நாள் 1.6 கி.மீ மட்டும். அதற்கப்புறம் பரேட். 2 மணி நேரம் என ஆரம்பித்து... நாளுக்கு நாள் இந்த நேரங்கள் அதிகரிக்கப்பட்டன.
DAILY காலையில் 5 கி.மீ , க்ராஸ் கன்ட் ரி ரன்னிங் 12 – 15 கி.மீ. வாரத்தில் 3 முறை.. அணிவகுப்பு 2.30 மணி நேரம்.. கொஞ்ச நேரம் விமானப்படை பற்றிய வகுப்புக்கள்..
அதிலும் எங்களுக்கு வாய்த்த டரெய்னர் (CLINT EASTWOOD) ‘ க்ளிண்ட் ஈஸ்ட் வூட்” ன் மறுபதிப்பு. கொஞ்சம் கூட ஈவு இரக்கம் கிடையாது. அவனை ஏமாற்ற முடியவே முடியாது...
உடம்பு அத்தனயும் வலிக்கும்... யாரிடமும் சொல்லக்கூட முடியாது...!
அப்புறம் 3 மாதங்களின் பின் சிறு ஆயுதங்கள் உபயோகித்தல்.. என்ற வகையில்.. ரைஃபிள் .. ரிவால்வர்.. மற்றும் ஸ்டென் கன் (SMC – STEN MACHIN CARBINE ) சிறிய வகை இயந்திரத்துப்பாக்கி.. சுடுதல் என்று பயிற்சிகள்.. மாதத்தில் மூன்று முறை...
இந்தப் பயிற்சிகளின் போது ஒரு கணம் ஸ்டெப் கட்டிங் குடன் கல்லூரி மாணவனாய் எவ்வளவு சுதந்திரனாய்.. கண்களில் கனவுகள் பல தேக்கி வலம் வந்தேன் என்று மனது நினத்துவிட்டாலும்..... ஆண்மை மிகுந்த 7.62 (mm) குண்டுகளடங்கிய மகஸினைப் பொருத்திச் சுடும்போது.. தோள்கள் வாங்கும் ரீகாயில் ( RECOIL KICKS ) குத்துக்கள்.. மனதை .. உடம்பை.. இறுக்கி வைக்கும்..
JUNGLE SURVIVAL :
நடுவில் 5 நாட்கள் ஜங்கிள் ப்ரேட். (JUNGLE PARADE)
மேன் வெர்சஸ் வைல்ட் தான். 5 கிமீ பரப்பளவில் தும்கூர் ரோட்டில் ஒரு காடு. 6 நாட்கள். இலை தளைகள் செருகி நிறமறைப்பு (CAMOUFLAGE ) செய்யப்பட்ட உடை துப்பாக்கி சகிதம்.. இரவு 8 மணிக்கு சாப்பாட்டிற்கு மட்டும் கூடவேண்டும்.
மற்றபடி தண்ணீரும் இல்லாமல் வாழ வேண்டும்.
இரவில் பச்சை இலைகளை பாலித்தீன் கவர்களில் கட்டி வைக்க 2 ஸ்பூன் நீர் காலையில் கிடைக்கும்..
பசளையில் சிறுவனாயிருந்தபோது.. பூவலிங்கம் பெரியப்பா வீட்டு சேவலைக் கல்லெறிந்து கொன்றது.. கௌதாரிப் பறவைகளை வேட்டையாடத் துணைபுரிந்தது..
தெரியாமல் கொண்டு சென்ற மிளகாய்ப்பொடியைத் தடவி சுட்டு.. உணவுக்கான வழிவகை..!
பொதுவாய் இந்த உடல் என்ற மண்ணை எடுத்து உலையில் போட்டு.. விதவிதமாய் வெப்பத்தில் உருக்கி... முதலில் சொன்னது போல் தங்கம் காண வேண்டும்.
அதற்கு கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டும்.. அவ்வளவுதான்...!
என்னால் ஒத்துழைக்க என்பதை விட..
என் உடம்பால் அது முடிந்தது... !
இந்த ஆறு மாதங்களின் முடிவில்.. என்னுடன் வந்திருந்தவர்களில் 4 பேர் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.
நான் 28 நாள் விடுமுறையில் மதுரைக்குச் சென்றேன்...
அந்த நாள் காலையிலேயே .. சத்குரு விஜயம்..!
நான் பாத்ரூமில் குளித்தவன்.. வேகமாக முடித்து.. நேரே அவர்கள் காலடியில் நமஸ்கரித்தேன்.
ஒரே உணர்ச்சிப் பெருக்கு...” ஜைஹிந்த்” என்று சல்யூட் அடித்த கையோடு என்னை ஆரத்தழுவிய சத்குருவின் வாசம் இன்னும் என் நாசியில்...
தழுவியபடி சொன்ன வார்த்தை...
“ இந்தப் பாகிஸ்தான் காரங்களை..ஒண்ணுமில்லாமப் பண்ணனும்ப்பா..”
மந்திரமாய் என்னை 20 வருடங்கள் இயக்கிய வார்த்தைகள் இவை
##############################################‪#‎TO‬ CONTINUE

இலை 33
SATHGURU : 29
PART 2 :
IN OPERATIONS WITH AF AND ARMY :
லீவில் வந்ததும் முதலில் நான் செய்த வேலை.. ஸ்கூலில் NCC OFFICER நாகசுந்தரம் சாரைப் போய்ப் பார்த்தேன். விமானப் படையில் சேர்ந்த்தைப் பற்றிப் பெருமையாகப் பேசியதுடன் நில்லாமல்.. தலைமைஆசிரியரிடம் கூட்டிச் சென்றது.. HE SHOOK HANDS AND CONGRATULATED ME.
இங்கே கல்லூரியிலும்.. PROF:AUGUSTIN ஐப் போய்ப் பார்த்தேன்.. அவருக்கே உரிய ஸ்டய்லில் கை குலுக்கிவிட்டு “ சாரி” என்றார். ( For not selecting me in the NCC )
###################################
என் முதல் பணியிடம்.. பதான் கோட்... அங்கே பெரும்பாலும்
( BASE OPERATIONS ) பணி. மேற்கு எல்லைப்புறங்களின் மொத்தப் பரப்பும் ரேடார் களினால் கண்காணிக்கப்பட்டு.. பாகிஸ்தான் விமான போக்கு வரத்தும் கண்காணிக்கப்பட்டு.. அதன் ஏர் சிசுவேஷன் மேப் முன்னே பெரிய கண்ணாடித் திரைகளில் வினாடிக்கு வினாடி.. தெரிந்து கொண்டிருக்க .. வளைவு வளைவான பல அடுக்கு கட்டுப்பாடுகள்...மங்கலான அவரவர்க்கு உரிய ப்ரத்யேக விளக்கு மற்றும் தொலை தொடர்புக் கருவிகளுடன் .. மேற்கு எல்லை வான் பரப்புகள்.. 24 மணி நேரக் கண்காணிப்பில்..
அங்கே இருக்கும் ஒவ்வொரு வினாடியிலும்.. அடுத்த செகண்ட் சாமி வந்துவிடும் போன்ற திக் திக் மன நிலை...
இந்த இடம் கட்டளைகள் பிறப்பிக்கப்படும் இடம். தலைமைத் தளபதியின் விரல் அசைவுக்குக் காத்திருக்கும் தயார் நிலையில் விமானங்கள். கோயிலின் கருவறை போல. குறிப்பிட்ட பிரிவினரைத்தவிர வேறு விமானப் படையில் இருப்பவர்களே “பார்க்க்க்கூட” வாய்ப்புகள் இல்லாத இடம்.!!!!
இங்கே பணியாற்றுதல் பெரிய.. கொடுப்பினை..! 25க்கும் மேற்பட்ட வேறு பட்ட பொறுப்புகளுடன் விமானிகள், ரேடார் க்ரூ..ஏர் டிஃபென்ஸ் ஆபரேஷன்ஸ் குழு என அனைத்தும் ஒன்றினைந்து ஒரு பெரிய வாத்தியக் குழு போல இயங்கும் இடம்...
இங்கே இசை பிறப்பதில்லை...
“..SCRAMBLE ..”என்ற வார்த்தை . மூன்று முறை ஒலிக்க...
90 வினாடிகளில் போர் விமானங்கள் விண்ணில் பறக்கக் கட்டளை பிறக்குமிடம்.
நான்கு வருடங்களுக்கு இங்கு பணி புரியும் பேறு பெற்றேன்.
MOST PRESTIGIOUS AND CLASSIFIED PLACE IN THE INDIAN AIR FORCE..WHERE AN AIR WARRIOR GETS THE OPPORTUNITY TO PERFORM.
MY MAIN STRENGTH WAS SHARP AND EFFICIENT RT ( WIRELESS RADIO TELEPHONY ) COMMUNICATION SKILLS
I WAS BLESSED TO WORK HERE WITH THE GRACE OF SATGURU.
********
1983 டிசம்பர் மாதம் நடந்த ஆர்மி.. மற்றும் விமானப்படை கூட்டாக நட்த்திய போர்ப்பயிற்சி ஒத்திகையில்.. பாகிஸ்தான் தன்னுடைய ஆர்மி ட்ரூப்புக்களை எல்கயில் குவித்துவிட.. டென்ஷன் ஆரம்பமாகிவிட்ட்து...
( உண்மையில் இதுக்குப் பேர்தான் “டென்ஷன்” )
அந்தச் சமயத்தில் 1984-ல் 17 AOP என்ற தரைப்படை ஹெலிகாப்டர் யூனிட்டில் 28 நாட்கள் ராஜஸ்தான் பாலைவனத்தில்.. பணி புரியும் வாய்ப்பு கிட்டியது. மேஜர்.ரண்தாவா.. கேப்டன் .சுதிர். இருவரும் சீட்டா ஹெலிகாப்டர் விமானிகள்.
மேற்கு எல்கையோரம் 100-150 அடி உயரத்தில் தாழப் பறந்தபடி...டாரோட்.. லோங்கேவாலா.. கட்டாடோ.. கிஷன் கர்.. ஃபெரோஜ்பூர்.. இப்படி வாய்க்கு நுழையாத பெயர்கள் கொண்ட பாலைனிலக் க்ராமங்களினூடே.. ட்ரூப் மூவ்மெண்ட்டைக் கண்காணித்தல்.
இவர்கள் பறப்பதற்கு விமானப்படை கட்டுப்பாட்டு அறையிலிருந்து.. அனுமதி பெற்றுத் தருதல் என்ற கோ ஆர்டினேஷன் வொர்க்.
A SAMPLE COMMUNICATION :
CONTROL 12.. REQUEST ADC FOR PANTHER .. FIRST LEG COURSE 140 AT LEVEL 100 FOR 7 MTS.. SECOND LEG COURSE 140.. AT LEVEL 115 FOR 13 MTS WITH PERMISSION TO FLY OVER 150 FOR 5 SECS AFTER 10 MTS FLIGHT.
ENROUTE HALT FOR 20 MTS AT KISHANGARH…. ROGER…
என்னுடைய திறமையான ரேடியோ தொடர்பு.. இந்த ரோந்துக்கான பணியில் என்னையும் கூடவே.. கூட்டிச் சென்றார்கள். முறையாக விமானப்படை அதிகாரிகளின் அனுமதி யுடன்...
எனக்கு முதல் முதலாய்.. ஹெலிகாப்டரில் பயணம்.
மீனாக்ஷி கோபுர உயர அளவில்.. அப்படியே மதுரை கீழே நகர்ந்தால் எப்படி யிருக்கும்..?
முதலில் கொஞ்சம் பயம்.. இருந்தது. சரியாக 22 நாட்கள் இப்படி ஒரு நாளைக்கு 3-4 மணி நேரம் என்ற கணக்கில் பறந்து திரிந்தேன்..
இதில் நான் 21 நாட்கள் குளிக்கவில்லை என்பதைப் பெருமையோடு கூறிக்கொள்கிறேன்.
குடிப்பதற்கு மட்டுமே நீர் கொடுக்கப்படும்
.
24ம் நாள் என்னுடைய பதான்கோட்டிற்குத் திரும்பிவிட்டேன்.
ஒருவாரம் கழித்து அந்த ஹெலிகாப்டர் யூனிட்டிலிருந்து அந்த செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“ H-1943 “ என்ற அந்த ஹெலிகாப்டர் உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கி விபத்துக்குள்ளானது என்றும். அதில் அந்த சர்தார்ஜி. மேஜர்.. கோ பைலட் இருவரும்.. வீரமரணம் எய்துவிட்டார்கள். என்று.
ஜெய் ஹிந்த்..!
====================================================
இன்று இந்து நாளிதழில் சமீபத்தில் காணாமல் போன டொர்னியர் கடலோரக் காவல் படை விமானத்தின் விமானியின் மனைவி ஸ்ரீமதி.தீபா.. தன்னுடைய 14 மாதக் குழந்தையை விமானியாக்குவேன் என்று சபதம் எடுத்திருக்கிறார்.
இந்தத் தாயின் மனதும்.. என் தகப்பனைச் சேர்க்க முடியாமல் போனாலும்.. என்னை விமானப் படையில் சேர்த்து அழகு பார்த்த சத்குருவின் மனதும் வேறொன்றாய்த் தோன்றவில்லை.
ஜெய் ஹிந்த்..!
###################AIR WARRIOR CONTINUES PART III IN FLYING SQUADRONS



இலை 35
SATHGURU : 30
எல்லாப் புகழும்..சத்குரு வுக்கே :
PART III :
ரேடார் பணியிலிருந்து போர் விமான அணிக்கு மாற்றம்.
அன்பே வா.. படத்தில் அசோகன் சொல்வார் :
“ விமானப் படையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அவனுடைய விமானம்தான் முதல் காதலி “
இது சத்தியமான வார்த்தை..!
என் முதல் விமானம் . மிராஜ் 2000. MIRAGE 2000
8 வருடங்கள் ( 7 SQUADRON ) 7 ஸ்குவாட்ரான், குவாலியர், மத்யப்ரதேஷ் மானிலம்.
அதில் ஒரு சிறு துளி :
(I HAVE TRIED TO GIVE LESS TECHNICAL DETAILS AS FAR AS POSSIBLE )
TAIL NUMBER KF 104 என்ற விமானம்.( GROUP CAPTAIN. PANESAR ) க்ரூப் கேப்டன்.பனேசர் (சர்தார்ஜி) மிகத் திறமையான விமானி. இந்த விமானத்தில் தாம்சன் சி.எஸ்.எஃப் டாப்ளர் ரேடார் THOMSON CSF RADAR . இயங்கவில்லை.
ஆன் செய்து பார்த்தபோது. குறை ஏதும் தெரியவில்லை. முதலில் பவர் சப்ளை யூனிட்டை (POWER SUPPLY UNIT ) மாற்றி அனுப்பினேன். பறந்துவிட்டு வந்தபோது சரியாகவில்லை. இப்படி வேறுபட்ட பார்ட்ஸ் களை ஒருவித லாஜிக்படி மாற்றினாலும்.. பறக்கும்போது இந்த ரேடார் இயங்கவேயில்லை. 3 நாட்களாக இயங்காமல் இருக்க ஏர்.ஹெட் க்வார்ட்டர்ஸிலிருந்து ( AIR HEADQUARTERS).. விசாரணை வந்துவிட.. அதுவும் இந்த விமானம் புதுப்பொண்ணு.. என்பதால் ரொம்ப விசேஷம்.
ஃப்ரான்ஸ் பயிற்சி பெற்ற SQN LDR பட்டாசார்யா வந்தார். இதை மாற்று.. அதை மற்று என்றார்..எதுவும் நடக்கவில்லை. (HQ ) தலை மேல். ப்ரஷர் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதுவரை 13 முறை பறந்து விட்ட விமானத்தில்.. இந்தக் குறை நீங்கவேயில்லை. 9 நாட்கள் ஓடி விட்டன.
3 ஆவது நாளிலேயே எனக்கு நாம் தவறான பாதையில் இருக்கிறோம் என்று தெரிந்துவிட்டாலும்.. பட்டாசார்ய சொன்னதை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். ( ஃப்ரான்ஸ் ட்ரெய்ண்ட்) அல்லவா..?
5 ஆவது நாளிலிருந்தே எனக்கும் அவருக்கும் ஆர்க்யூமெண்ட் ஆரம்பம்.
6 ஆவது நாள் முதலில் இவரைப் பார்க்கும்போது “ குட் மார்னிங் “ வாய் சொன்னபோது .. மனது அதைச் சொல்லவில்லை.
“ அப்ப எதில் ப்ரச்னை என்பதை நீயே சொல் “ நான் சொல்கிறேன் என்றுவிட்டு மௌனமாகிவிட்டேன். உள்ளே தீர்மானித்தேன்.. இன்று வேலை நேரம் கழிந்த பின்.. ஆரம்பிக்கலாம். அதற்கு அனுமதியும் வாங்கிவிட்டேன். எனக்கு 24 மணி கெடு வைத்து அனுமதி கொடுத்தார் எஸ்.டி.ஓ (STO - SENIOR TECHNICAL OFFICER )
விமானத்தில் இருக்கும் கம்ப்யூட்டரை டவுன்லோட் செய்தேன். இதற்கு லாபரேட்டரியில் தான் அனுமதி கிடைக்கும். இருந்தும் செய்தேன்.
அதில் பார்த்தபோது.. கடந்த 13 பறந்த டாடா பதிவுகளில் ( FLIGHT FAULT REPORT ).. 8 முதல் 11 வினாடிகளில் இந்த ஃபெய்லியர் பதிவாகியிருந்தது...
அப்படியானால்...? அப்படியானால்..?
ரேடாரில் நிச்சயமாக இல்லை. தென்..?
எனக்கு முன்னே அந்த KF 104 மௌனமாக நின்று கொண்டிருந்தது..?
APPLY LATERAL THINKING.. MAN
இரவு வீட்டில் இதை யோசித்தபடியே தூங்கிப்போனவன்.. காலையில் எழுந்தபோது மனதில் ஒரு சிறு யோசனை உதித்தது.
அதன்படி காசியோ ( CASIO) ஸ்டாப் வாட்சை ஆன் செய்து.. 6 விமானங்கள் ஒடி டேக் ஆஃப் ( TAKE OFF ) ஆவதைக் கணக்கிட்டேன். அந்த ஆவரேஜ்.. டேக் ஆஃப் டைம் 8 – 11 வினாடிகளுக்குள் இருக்க..
மனதில் உற்சாகம்..
UNDER CARRIAGE LIFTS OFF APPROXIMATELY IN THIS TIME…
அதாவது.. சக்கரங்கள் தரையை விட்டு எழும்பும்போது.. இந்த நேரம் கோ.இன்ஸைட் ( COINCIDE ) ஆக.. அண்டர் கேரேஜ்.( UNDER CARRIAGE ). பற்றிய மேனுவல்களைப்( MANUAL ) பரப்பிப் படிக்க ஆரம்பித்தேன்... அதில் நிறைய மைக்ரோ ஸ்விச்சுகள் இருக்க.. அதில் ஒன்று ரேடாருடன் ( RADAR ) சம்மந்தப்பட்டிருக்கிறது.. தெரிந்து.. மேலும் படிக்க “ அதில் ஒரு லைன் தரையில் இருந்து விமானம் மேலெழும்போது.. ஏர் கண்டிசனிங் ( AIR CONDITIONING ) பகுதிகளைக் கனெக்ட் செய்யும்..
அது நடக்கவில்லை. ஆகவே.. ரேடார் இயங்க முடியவில்லை ..PROBABLY THIS COULD BE THE REASON.
இது லாஜிக்.
ஓடிப்போய் அந்த வலது சக்கரத்து கேபிள் அமைப்புகளைப் பார்க்க.. கொஞ்சம் நாற்றம் அடிப்பது போல் உணர்ந்தேன்.. ஏர் ஃப்ரேம் ( AIR FRAME ) டிபார்ட்மென்டில் போய் கொஞ்சம் பானல்களை ( PANEL ) ஓப்பன் செய்ய ரிக்வெஸ்ட் செய்ய.. ஓப்பன் செய்யும்போதே..
“ இந்த ( STARBOARD WHEEL ) ஸ்டார் போர்ட் வீல்லதான் சார் போன வாரம் பேர்ட் ஹிட் (BIRD HIT ) ஆச்சு “ என்று சொல்ல..
1+2+3=6 எனக்குத் தெளிவாயிற்று..
கழுகு ஒன்று அடித்ததில் அந்த குறிப்பிட்ட கனெக்டர் வெட்டி விட்டார் போல் துண்டாகியிருந்தது.
அது சரி செய்து அனுப்பினேன்.
Gp.Capt பனேசர் வந்து இறங்கியவுடன்.. “ WHERE IS NATHAN ? “ என்று கேட்க.. நான் சற்று தயக்கத்துடன் சென்றேன்..”
“ YOUR RADAR IS BEAUTIFUL. NICE MAN!! “ என்று சொல்லவும் எனக்கு உயிர் வந்தது.
“ GOOD WORK NATHAN “ இதைச் சொன்னது SQN LDR பட்டாச்சார்யா.
என் ( PROFESSIONAL JURISDICTION ) எல்லையைத் தாண்டி வேலை செய்ததற்காக . எனக்கு.. BEST AIR WARRIOR என்ற கௌரவம் 1994 ல் வழங்கப்பட்டது.
இதை எனக்கு வழங்கியவர்.. மேற்கு பிராந்தியத் தலைமைத் தளபதி..AIR MARSHAL VK GANDHI
அந்தப் புகைப்படம் இணைத்திருக்கிறேன்.
I DEDICATE THIS FIRST HONOUR TO SATHGURU..!
########################################################
I HAVE TRAINED MANY YOUNG PILOTS FROM THE MIG SQUADRONS WHO JOINED THE MIRAGE FLEET, ON THE LASER GUIDED BOMBS DELIVERY. WHILE DELIVERING ANY WEAPON THE FIGHTER HAS TO LOOK AT THE TARGET FOR MORE TIME DURATION IN SECONDS. THIS IS NOT POSSIBLE IN THE HILLY TERRAINS AS THE AIRCRAFT MANOEVUR CANT BE RESTRICTED TO FLYING LIMITS. THE LASER WEAPON CAN AIM THE TARGET IRRESPECTIVE OF THE AIRCRAFT DYNAMICS AT BELOW 5000 ALT.
HERE I WISH TO MENTION.. THESE LASER BOMBS HAVE DESTROYED THE BUNKERS OCCUPIED BY PAKISTAN DURING KARGIL WAR.
“ இந்தப் பாகிஸ்தான் காரங்களை..ஒண்ணுமில்லாமப் பண்ணனும்ப்பா..”
KINDLY WATCH THE MIRAGE VIDEO ATTACHED EARLIER
ALL THE MISSIONS WERE SUCCESSFUL.
FOR WHICH I WAS HONOURED SECOND TIME IN THE MIRAGE SQUADRON.
THE AWARD WAS GIVEN BY THEN WNG COMMANDER NANDRAJOG.
I DEDICATE THIS SECOND HONOUR TO SATH GURU
############################################################
I WAS TRANSFERRED TO AMBALA ( 5 SQUADRON ) IN THE JAGUAR SQUADRON. HERE I CONTRIBUTED THE MAXIMUM TO ACHIEVE 100% FLYING OF ALL THE JAGUAR PLANES ON A PARTICULAR DAY. THIS MEANS ALL THE PLANES SHOULD FLY BEFORE SUN SET TIME. MY 23RD JAGUAR PLANE TOOK OFF JUST 2 MINUTES BEFORE SUNSET. IN THE YEAR 2000.
FOR WHICH I WAS AWARDED FOR BEST EVER CONTRIBUTION FROM AN AIRWARRIOR FOR THE YEAR 2000.
THIS WAS AWARDED BY THE THEN AIR VICE MARSHAL CHINNA
I DEDICATE THIS THIRD HONOUR TO SATHGURU.
############################################################



இலை 36
AIRWARRIOR CONCLUDES.. !!
இந்தத் தளத்தில் விமானப் படை வாழ்வின் சில துளிகளை
“இப்போது” பதிவு செய்ததன்.. காரணங்கள் இரண்டு :.
...
முதலாவது :
சத்குரு அவர்கள் காட்டிய வழியில் என் தகப்பன் போலவே சிரமேற்கொண்டு முற்றிலும் அதற்குரிய புனிதமான தகுதிகளோடு பயணித்திருக்கிறேன் என்பதை அவர்கள் நம்மோடிருந்த காலத்தில் என்னால் தெரிவிக்க முடியவில்லை என்பதாலும்..
இரண்டாவதாக..
அங்கே கொட்டி கிடக்கும் வாய்ப்புக்கள் இன்றைய தலைமுறையினரின் கவனத்திற்கு வரவேண்டும். அதற்குரிய ஆர்வம் இவர்களிடம் துளிர்க்க வேண்டும்.. என்ற என் பேரவாவும் தான் சற்று விளக்கமாக எழுதத் தூண்டியது
சத்குரு எனக்குள் விதைத்த விதையை நான் பல இடங்களில் தூவி இருக்கிறேன். சிலருக்குப் ப்ரத்யேகமான வழிகாட்டுதலும் செய்திருக்கிறேன்..
TRY JOIN THE FORCES.. FEEL THE PRIDE IN UNIFORM....
AND TOUCH THE SKY WITH GLORY...!
JAIHIND

இலை 37
சத்குரு : 31
மறுபடியும் ஷண்முகனாதன் தொடர்கிறேன்..:
அடிக்கடி என் உடன் பிறந்தோரிடம் நான் ஒன்று சொல்வதுண்டு. நீங்களெல்லாம் என்னை விட 20 வருஷங்கள் அப்பா அம்மாவுடன் சேர்ந்து அதிகமாக இருந்திருக்கிறீர்கள்.. என்று.
அந்த வகையில் சத்குருவுடனான 13 வருடங்களை... 1994 வரை இழந்திருக்கிறேன்.
விடுப்புக்களில் வரும்போது அவர்களுடன் கழித்த நேரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தச் சமயங்களில், பெரும்பாலும் தேசத்தைப் பற்றிய கவலைகள் இருக்கும். அங்கே வீட்டிற்குச் செல்லும்போது இருவருமே பரஸ்பரம் வீரவணக்கத்தோடு ( ஜெய் ஹிந்த் ) தான் எதிர்கொள்வோம்.
மனத்தளவில் சீருடையில் சத்குருவும்.. நான் பணியிலும் இருந்ததினால், என்னுடன் பகிர்ந்து கொள்ளும் அந்தக் கணங்களில் சற்றுப் பின்னோக்கிப் பயணித்து அவர்கள் காலத்திய நினைவுகளின் லயிப்போடு தேசத்தைப் பற்றிய சத்குருவின் பகிர்வுகள் நினைவுகளில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அழியாத சித்திரங்கள்.
1988 – ல் அப்பத்தா அவர்களின் மறைவின் போது.. அந்த உயிரற்ற உடலின் முன் அமர்ந்து “ ஓம் நமசிவாய..” என்று மீண்டும் .. மீண்டும் சொல்ல முயன்று.. முடியாமல் வெடித்து அழுது நின்ற கோலம்.. எங்கள் மனங்களில் உறைந்து நிற்கும், பச்சை மரத்தில் எழுதி வைக்கப்பட்ட கீரல்கள்.
அப்பத்தா அவர்களின் மறைவின் போது நான் கண்ட மற்றுமொரு அழியா நினைவு.. “ அம்மா “ அன்று அழைத்து அழுது நின்ற என் தகப்பன்.
அவனுள் உறைந்திருந்த இந்த “ அம்மாவென்று அழைக்காத மறுப்பை..” வைராக்கியம்.. என்று சொல்வதா..?
குழந்தை பருவத்தில் தாயின் வெறுப்பைச் சுமந்து நின்ற காரணம் என்று கொள்வதா ..?
தகப்பன் அவசியமே இல்லாமல் அந்த வயதில் மறைந்து போனது.. அருணாசலத்தின் குற்றமில்லையே..?
ஒவ்வொரு முறையும் என் தகப்பன்.. என் தாத்தாவின் படத்தின் முன் நின்று.. “ வெரி இர்ரெஸ்பான்ஸிபிள் பெர்ஸன் “ என்று எங்கள் முன் எங்கள் அங்கீஹாரத்தை எதிர்பார்த்துச் சொன்னபோதெல்லாம்..
மனதில் கனன்று நிற்கும் அந்த வலியை எங்களால் உணர முடிந்தது.
அந்த இழப்பை “என்னில் காண முயன்று.. அந்த அளவு கோலில் நான் குறைந்து நின்ற போதெல்லாம்.. நானும் தகப்பன் சொன்னதை.. இன்றளவும் சொல்வது.. தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது..!
“ வெரிமச் இர்ரெஸ்பான்சிபிள் பெர்ஸன் “ நானும்தான்..!
எந்தக் காரணத்திற்காகவும் எந்த தகப்பனுக்கும் தன் பிள்ளைகளை அனாதரவாக்கிச் செல்ல உரிமையே இல்லை. ஒவ்வொரு தகப்பனும் தன் பிள்ளைகள் சுயமாய்த் தலையெடுக்கும் வரையிலுமாவது .. துணை நிற்க வேண்டிய கடமை இருக்கிறது என்பதும்.. இதை நினைவில் கொண்டு குலதெய்வத்தின் நினைவும் கொண்டு முழு எச்சரிக்கை உணர்வோடு வாழ்ந்து சிறந்து வழிகாட்ட வேண்டும்..
என் தகப்பனுக்கு நல்லகாலம். !
தகப்பன் என்ற குறை தெரியாமல் பெரிய தாத்தா ஸ்ரீ.இராமனாத பிள்ளையும், ஸ்ரீ. சுப்பையா பிள்ளையும்.. ஸ்ரீ. அய்யாதுரைபிள்ளை அவர்களும்.. வெவ்வேறு காலங்களில் சுட்டு விரல் பற்றி நடத்திச் சென்றார்கள். மூன்று தெய்வங்களாய் நின்ற குலதெய்வங்கள்.!!
அப்பத்தாவின் மறைவின் பின்பு.. சத்குருவின் வருகை, வீட்டில் அவர்கள் பேசுவதற்கோ.. பிள்ளைகளோ.. அப்பாவோ.. யாருமே ஒன்றாய் கூடுதல் என்பதோ அரிதாகிவிட்டது போன்ற பல்வேறு காரணங்களால் குறைய ஆரம்பித்தது. செல்வ நிலையத்திற்குச் நாங்கள் சென்று வருவதும் கிட்டத்தட்ட நின்றே விட்டது.
இதன் நடுவில் மனித மனங்கள் எடுக்கும் சில அகோர வடிவங்கள்,
உறவுகளின் மேன்மையை ..!
ஸ்ருஷ்டியின் அழகை.. !
உணர்த்திக் காட்டவே..!
என்று நியாயம் கற்பித்துக்கொண்டு வாழ்வை எதிர் நோக்குதல் இங்கே தவிர்க்க முடியாத யதார்த்தம் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய நிஜம் ..!
போக்குவரத்து சிதைந்து நின்றிருந்த காரணத்தினாலேயே நான் பாத்யாத்திரைக்கு வரும்போதெல்லாம்... அனைவரின் வீட்டிலும் பூஜை என்ற நிகழ்வை எல்லோரும் ஒன்றுகூடவென்று பின்னாளில் ஆரம்பித்து வைத்தேன்..!
இப்படியிருக்க சத்குரு ஒரு நாள் இரவில் 9 மணிக்கு மேலிருக்கும்.. வெறும் துண்டு போர்த்திக்கொண்டு வந்து அப்பாவின் பெயர் சொல்லி அழைத்தபடி நின்றார்கள்.
கண்களில் கலக்கம்....!
###################################### தொடரும்.. பதிவுகள்

இலை 38
சத்குரு : 32
அந்த அசாதாரணமான் இரவு நேரத்தில்.. வெறும் துண்டு மட்டும் போர்த்திக்கொண்டு சத்குரு வந்திருக்கிறார்கள் என்றால்..
அப்பா பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள்.. வெளியே அப்போது கேட் போடவில்லை. ஒரு கம்பு மட்டும் இருக்கும். அதை எடுக்கும் சத்தம் கேட்டு அப்பா வெளியே லைட் வெளிச்சத்தில் பார்க்க .. சத்குரு..!!!!
...
ஒரு கணம் திகைப்புற்றாலும்.. சமாளித்துக்கொண்டு.. “ என்ன..?” என்று கேட்க
“.. அப்பா... ! அம்மா..!.. அம்மா..!” வேறு வார்த்தைகள் வரவில்லை.. குரல் கம்மி ஒலிக்கிறது
சொல்லும்போதே பேச முடியாமல் உதடுகள் துடிக்க.. கண்களில்.. நீர் ததும்பிக்கொண்டு.. சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
ஏற்கனவே முருகா அம்மாச்சிக்கு உடல் நிலை சரியில்லாம்ல் இருக்கிறது என்பது தெரிந்த விஷயமே என்பதால்.. அப்பா முகத்தில் ஒரு நிம்மதி..
அப்பாவிடம் பதற்றம் இப்போது இல்லை.
“ அம்மாவை சென்னையிலிருந்து கூட்டிக்கொண்டு வர்ராங்களாமப்பா..” இதைச் சொல்லும்போதே தொண்டை அடைக்கிறது சத்குருவுக்கு.
ஆனால் அப்பாவிடம் அந்த உணர்ச்சிக் கொந்தளிப்புக்கேற்ற முக பாவம் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தன்னுடைய தாய் சென்று சில மாதங்களே ஆகியிருக்க. தகப்பன் முகமே தெரியாது..
இந்த நிலையில்.. .. தன் அத்தை சிறப்புற வாழ்ந்து... உடல் நலிந்து இறுதி நாட்களை நெருங்கிக்கொண்டிருந்தது பெரிய தாக்கத்தை மனதில் ஏற்படுத்தவில்லை என்று புரிந்துகொள்ளும் அதே வேளையில்..
இத்தணை வயதான பின்பும்.. “தன் தாய்” முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்ற நினைப்பை.. செய்தியை.. அந்த “ மகனால்” மனதாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையும் புரிந்துகொள்ளும் மன நிலை நமக்கு இருந்தேயாக வேண்டும்..!.
எத்தணை வயதானால் என்ன..?
“ பிள்ளைகள் மூப்பதில்லை.. பெற்றோர் காண்..!”
என்பது உண்மைதானே!
அந்த உதாரண மகனாய் சத்குரு.
இந்த சோகமான மன நிலையில் .. அந்தச் செய்தி கேட்டதும்.. பகிர்வதற்குப் பக்கத்தில்.. எவரும் இன்றி அக்கணமே.. புறப்பட்டு.. மகன் ஸ்தானத்திற்குச் சற்றும் குறையாத அருணாசலத்திடம்.. ஓடோடி அந்த ராத்திரியில் வந்து நிற்கும் .. இந்தக் காட்ஷியின் பதிவு..
ஒரு அருமையான மகனையும்..!
மகனாய் நின்ற மருகனையும்...! முன் நிறுத்தும்..
அடுத்த இரண்டாம் நாள் கொழும்பில் பெற்றெடுத்த அந்தப் பசளைப் பேரரசி சுப்பையன் ஜோதியில் கலந்தது.
( இந்தப் பதிவு தங்கை ரேவதி கூற எழுத்தில் நான் பதிக்கிறேன் )
##################################‪#
இலை 39

சத்குரு : 33
ஞானமளிப்பவன் யார்..?
அந்த முறை நான் லீவில் வந்திருந்த சமயம் செல்வ நிலையத்திற்குச் சென்றேன். வழக்கமான பரஸ்பர சம்பாஷணைகளில் என்னை அதிகம் கவனிக்க வைத்தது..
“ How is your wife and child ..? “
இந்தக் கேள்வியை சத்குரு என்னிடம் கேட்டபோது.. அதில் நான் உணர்ந்த தூரம்...
அந்த நிமிஷத்தில் நான் தூரத்தில் இருந்தேனா.. அல்லது அவர்களே எட்டாத தூரத்தில் இருக்கிறார்களா..?
என்று ஒரு கணம் குழம்பியபடி நான் இருக்க..
என் முகம் செத்துவிட்டது எனக்கே தெரிந்தது.....
ஒன்றும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் சீக்கிரம் கிளம்பிவிடலாம் என்று கூடத் தோன்றியது.
அளவற்ற பாசமும் பிரியமும் கொண்டோரின் சின்ன புருவச் சுளிப்புக் கூட மனது தாங்க மாட்டேன் என்கிறதே...!
“ ஷண்முகனாதா.. ராஜ யோகமனு கேள்விப்பட்டிருக்கியா..?.. அதப்பத்தி எதாவது தெரியுமா..? என்று கேட்க..
‘’ராஜ யோகம்-னு விவேகானந்தரின் புத்தகம் இருக்கிறது.. இன்னும் அதை நான் படிக்கவில்லை.. பிரம்மகுமாரிகள் இயக்கத்தில் அது சொல்லித்தருகிறார்கள்
எனச் சொல்ல..
“ அந்தப் புஸ்தகத்தைக் கொண்டு வந்து கொடுப்பா..” என்று சொன்னதும் என் முகத்தில் கொஞ்சம் உயிர் வந்தது.
மறு நாள் காலையிலேயே.. சத்குரு வீட்டில் பிரசன்னம்.. நான் கொண்டுபோய்க் கொடுப்பது வரை காத்திருக்கவில்லை
அப்போதுதான்.. முதல் முறையாக சத்குரு.. தான் “.YSS..” ல் இருப்பதைத் தெரிவித்தார்கள். மேலும் ‘கிரியா யோகம்” பற்றிய வழிகாட்டுதல்களின்படி அந்தப் பாதையில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை சத்குருவின் பேச்சில் தெரிந்து கொண்டேன்...
அந்தச் சமயத்தில் அனைவரும் குறிச்சிக்கு எங்கள் குலதெய்வம் கும்பிட போயிருந்தோம். விசேஷம் இதில் என்னவென்றால் “ சத்குருவும்.. சிதம்பரம் பெரியப்பா” இருவரும் அந்த முறை வந்திருந்தார்கள்
வழக்கம்போல் பூஜை..செய்து விமரிசையாக சாமி கும்பிட்டோம். அப்பாவிற்கு அருள் வந்து வாளேந்தி ஆட... எல்லோரும் சூழ்ந்திருக்க... அனைவர் கண்களிலும் கண்ணீர் வழிந்தோட அந்த இடமே முத்தையன் ஆக்கிரமிப்பில்.. மின்பாய்ந்திருந்தாற்போல இருந்தது..
அந்தச் சூழலில் சத்குரு “தனியே” நின்றிருந்ததும்..
ஆங்காங்கே.. இருந்த சின்னஞ்சிறுசுகளை .. “ அங்க போய் சாமி பார்..” என்று சொல்லிக்கொண்டிருந்ததையும் நான் கவனிக்கத் தவறவில்லை....
முதலில் என்னிடம் அவர்கள் “ How is your wife and child ..? “ என்று கேட்டபோது தூரத்தை உணர்ந்தேன்..
பேசிய சில சந்தர்ப்பங்களில் வழக்கமாகப் பேசும் பேச்சுக்களில் இருந்துகூடத் தூர உணர்ந்தேன்..
இப்போது குல தெய்வம் கும்பிட வந்த இடத்திலும்.. சத்குரு தூர இருந்ததை கவனிக்கிறேன்.
ஏன்..?
இது பற்றிய கேள்வி என்னுள் இருந்து கொண்டே இருந்தது..? ஒருவேளை அப்பத்தா இருந்திருந்தால் ஏதாவது தெரிய வந்திருக்குமோ என்னவோ..?
நானே ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தேன்.. அந்த நாளும் வாய்த்தது..!.. சத்குரு வீட்டிற்கு வந்திருந்த சமயம் கேட்கிறேன்
“ மாமா நீங்கள் கோவிலில் அப்பாவிற்கு சாமி வந்த போது தூரத்திலேயே நின்றிருந்தீர்கள்..? ..” என்று தயங்கியபடி முடிக்காமல்... ..விட..
“ ஷண்முகனாதா.. சாமியாடுறதுன்னா உனக்கு என்ன தெரியும்?.. நீ ஆடிருக்கேல்ல ..! இப்ப சொல்லு..!”
“ அது ஒரு மாதிரி நான் என் உடம்பே பத்தாமல் இருப்பது போலவும்.. ஒரு பெரிய சக்தி மின்னல் போல உள்ளே இருப்பது போலவும் தோணும்... அப்படியே மனசு உணரும் பலத்தில் அந்த இடத்தையே ஒரே கையாலேயே இருக்கும். பெரிய மரத்தை எல்லாம் கூடப் பிடுங்கி எறிந்துவிடலாம்..போல அவ்வளவு பலசாலியாக.. இருப்பது போல இருக்கும்..”
இதற்கு முன்னால் நான் சில முறை அப்படி ஆடி இருக்கிறேன். சேலத்திலும் ஆடியிருக்கிறேன்..
“ ஏன் என்று யோசிச்சியாப்பா..?”
“ இல்லியே.. ஆனா ஒரு நாலஞ்சு நாளக்கி .. இப்படியே பவர்ஃபுல்லா இருக்குற மாதிரி இருக்கும். மாமா..!”
“ அப்ப நீ என்ன சொல்றேன்னு உனக்குத் தெரியுமா..?”
“ தெரியும்...ஆனா ஏன் இப்படிச் சொல்றேன்னு தெரியாது..!”
இப்படியாக அந்த உரையாடல் மேலும்.. மேலும்.. நிகழ்ந்தது.
..................................!!
...................................!!
...................................!!
அதில் புரிந்து கொள்ளுதல் என்பதற்கு .. மிகவும் அப்பாற்பட்ட விஷயங்களைப் பேசினார்கள்..! அது விமரிசனங்களுக்கோ.. அஹங்காரம் சார்ந்த அறிவுக்கோ நிச்சயம் எட்ட முடியாத தேவ ரகஸ்யமாகவே எனக்குப்பட்டது...
அன்றைய சத்குருவின் அமைதியான ஸ்வரூபம்.. நான் இதுகாறும் கண்ட ரூபம் இல்லை..!
சுய பரிசீலனை.. என்பதன் அவசியத்தை எனக்கு உணர்த்திய கம்பீர ரூபம்..!
முடிவில் “யோசுச்சுப் பார்..”! என்று விட்டுச் சென்றார்கள்...
அந்த நாளின் முற்பகல் 11 மணி வரையிலுமான இரண்டு மணி நேரங்களுக்கு நான் மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்....!!!
=========================================================
அந்தப் பேச்சின் சாரத்தை நான் படித்த பின் வரும் சின்னஞ்சிறு கதையின் மூலம் பதிவு செய்கிறேன்.
“ குழந்தையொன்று ஆண்டவன் படத்தின் முன்னே நின்று கண்கள் மூடி வேண்டிக்கொண்டிருந்தது..”
இதைப் பார்க்கும் தாய் கேட்கிறாள்...!
“ என்ன வேண்டுகிறாய் செல்லம்..?”
“ அம்மா திருக்குறளை எழுதி இருப்பது “ பாரதியாராக இருக்க வேண்டும்.. என்று வேண்டினேன் அம்மா..”
என்றது குழந்தை..!
“ ஏண்டா செல்லம் அப்படி வேண்டினாய்..? எனத் தாய் கேட்க
“ அப்படித்தானம்மா நான் டெஸ்டில் எழுதி இருக்கிறேன்..” என்றது குழந்தை
############################################## தொடரும்....


இலை 40

சத்குரு : 33
ஷண்முகனாதன் நிறைவு செய்கிறேன் :
அன்று சத்குரு கூறிய வாசகங்கள் ஆழ்ந்த மன ஒருமையுடன் உச்சரிக்கப்பட்டன. பலனை உறுதியாகக் கொடுக்கவல்ல உள்ளார்ந்த திறன் கொண்டவையாய்த் திகழ்ந்தன.
...
அச்சொற்களிலில் இருந்து கிளம்பும் அதிர்வலைகளை உரிய முறையில் பயன்படுத்த, எவனொருவனின் வாழ்க்கையிலும் துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று தோன்றியது.
ஆன்மீக பலமுள்ளவர்களிடம் உரிய தகுதிகள் கொண்ட சீடர்கள் தாமாகவே செலுத்தப்படுகிறார்கள். அவர்களிடமே குருக்களின் போதனைகள்.. சென்றடைகின்றன.
நம் சமுதாயம் ஒரு தொடர்ச்சியான உயிருள்ள பாரம்பரியத்தின் மூலமாகவும்.. புத்துணர்ச்சியூட்டும் குருக்களின்.. நம் முன்னோர்களின் மூலமாகவும்.. கணக்கற்ற மாற்றங்களிடையே கூடத் தன்னைச் சரி செய்து கொண்டு பயணிக்கிறது...
நம்மிடம் நம் முன்னோர்களின் குணதிசயங்கள் ஜீன் களில் கடத்தப்பட்டு நம்மில் விரவிக்கிடக்கின்றன. அவையே நமக்காக அவர்கள் விட்டுச் சென்ற பெரும் புதையல்.
அவர்களின் பூத உடல்கள் நம் கண்களுக்குப் புலப்படாது இருந்தாலும்.. அந்த உடல்கள் சுமந்த ஆன்மாக்கள் நம்மைக் காத்து அருள் புரிவதோடு.. தங்கள் பயணத்தையும் தொடர்ந்தபடியே இருக்கின்றன.
தகுந்த தருணங்களில் தங்கள் இருப்பின் அருகாமையையும் புலப்படுத்துகின்றன.
அவர்கள் நிலைத்திருப்பவர்கள்...என்றென்றும்..!
சூழ்னிலைகள் காரணமாகவோ.. தவிர்க்க முடியாத நியமங்களின் பொருட்டோ.. முன்னைப்போல் அல்லாது.. நம் குடும்பங்கள் வெவ்வேறு.. இடங்களில்.. சிதறிக்கிடந்தாலும்..
இந்தக் கால கட்டத்தில்
இது தவிர்க்க முடியாததே என்றாலும். கூட.
அன்பின் வழியில் இணைந்தே இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அதனாலேயே பாட்டன்களின் பெயரைச் சொல்லி ஒன்று கூடுகிறோம்.
இந்த ஒன்று கூடல் அடிக்கடி மனதில் துவேஷங்களின்றி நிகழ வேண்டும்.
ஒன்று கூடி அன்று பேத்தி எடுத்த புகைப்படம்.. வெறும் நிழலாய் மட்டும் இருந்துவிடாமல்.. நிஜமாகவும் இருக்க முன்னோர்கள் அருள்புரிய வேண்டும்..
தீய சொற்களும்.. மனிதர்களும் நிச்சயம் பலம் உடையன அல்ல. அதைப் பலமுள்ளதாகச் செய்வது நம்முடைய மனங்களே..!
நாம் கொடுக்கும் முக்கியத்துவமே..!
நல்லவை தீயவை என்று எதுவும் இல்லை பாகுபாடு செய்து பார்ப்பது கன்மம் கைக்கொள்ளும் மனங்களே. அதற்கு வெகுதூரம் பயணப்பட வேண்டியதிருந்தாலும்...
முன்னோர் பால் கற்றவற்றைக் “கொஞ்சம்” கடைப்பிடித்தாலே போதும்.. நல்மார்க்கம் தென்படலாம்..!
மற்றவரிடம் கொள்ளும் அன்பாயிருக்கட்டும்...
தோட்டத்தில் மலர்ந்து கிடக்கும் பூக்களாகட்டும்...
ஆண்டவனின் அருளின்றி.... அவை நிகழ்வதில்லை..!
இறை நம்மை நெருங்கி வருவது.. குருக்கள் மூலமாகவே..!
இதை அனுபவபூர்வ உணர்வோடு பகிர்கிறேன்.
அந்த அளவற்ற நன்றி உணர்தலால்தான்.. என்னுடைய அத்தணை பகிர்வுகளும் இருந்தன என்று கூறுவேன்.!
நன்றியுடன் இருப்பதென்பது.. நாங்களாக வளர்த்துக்கொண்ட பண்பல்ல..!
எங்களுக்கு வழங்கப்பட்ட ஒன்றால் உணர்ச்சிவசப்பட ஊற்றெடுக்கும் ஓர் உணர்வு..!
மனித உருவிலும்..
தெய்வ உருவிலும்....
தொழுது வரும் தெய்வங்களிடமிருக்கும்
“தாய்மை” எனும் பேரன்பு பரிதவிப்போரின்
இறைஞ்சுதல்களை கேட்காமலிருக்காது......
என்ற மாறாத நம்பிக்கையுடன் என் பகிர்வுகளை நிறைவு செய்கிறேன்...
வாழிய பாரதம்...!
ஜெய் ஹிந்த்..!
மிக்க அன்புடன்
ஷண்முக நாதன் அருணச்சலம்.