Monday, 18 May 2015

குலகுரு கவசம்

பெரிய தாத்தா நினைவுகளில்அனைவரும் நீந்தி கொண்டு இருக்கும்
வேலையில் கடந்த ஆண்டு காவடியின் நினைவுகளில் நீட்சியை மறைக்க முடிய வில்லை. அதோடு ஸ்ரீ மான் ASP அவர்களின் நூற்றாண்டு நினைவாக கடந்த ஆண்டுநான் எழுதிய சிறு கவசத்தை பகிர்வது மூலம் என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.


திருச்சிற்றம்பலம்
...
அல்லல் போம் வல் வினை போம்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்
போகா துயரம் போம்-குணமதிக மா
அருணை கோபுரம் மேவும் கணபதியை தொழுதக் கால்.
தெளிவுகுருவின் திருமேனி கண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தாமே..
அறுபடைஅழகனை
ஆழ்ந்தே நினைக்க
அகத்தினில் மலரும்
ஐயனின் உருவம்.
அருளரமுதே!
அறிவு கொழுந்தே!-என்றும்
எமை ஆளும்-அண்ணாமலை
புதல்வா...
அங்குத்தாயின் அருகே அமர்ந்து
ஆசிகள் அளிக்கும்- ஆறுமுகன்
மைந்தா....
அம்மையம்பதியில்
ஆனந்தமாய் அமர்ந்து
ஆன்மீகம் அளிக்கும்
அற்புத சீலா!
எளியோர் மனத்தே
என்றும் இருந்து
இன்னல் தீர்க்கும் -இக
பர சுகமே...
ஒன்றாய் பலவாய்
ஒளிரும் மணியே!
பழனி மலையின்-பக்தி
கனியே....-என்
சிந்தை நிறை-சிவ
ஞான குருவே-சிறு
மலைதேனே..
நினையா மனதை
நினைத்திட செய்யும்-நிமலா
நின்தாள்
சரணம்! சரணம்!
அழகா!அமரா!
அம்மை நகரின்
அருட்பெருஜோதி!
நின்தாள் சரணம்!
தயாள குணம் தந்து
எமை ஆண்டிடவே
வருவாய்..வருவாய்
வடிவார் அமுதே!
அடியார் உறவாய்
அருளே உருவாய்..
திருவே தருவாய்.. .
ஐயா சுப்பா!
குருவாய் வருவாய்
இருளை களைவாய்
அன்பர்கள் துணைவா
சாயி நேசா!
சத்திய நாதா!
காவடி சுமந்த
கருப்பனின் வடிவே
கவனம் ஈர்க்கும்
காந்த விழியே!
கருப்பனின் வாளே....
முருகனின் வேலே...
கருப்பனை தாங்கி களி நடம் புரிந்தாய்
பார்த்திபனுரில் பரவசம் கண்டாய்
பாலமுருகனை பாடியே துதித்தாய்
பாத யாத்திரை எங்களுக்கு அளித்தாய்...
பழனியின் வடிவே!
எங்கள் குருவே!
உம்மை நினைக்க
நிலையது உயரும்...
நினைத்தது நடக்கும்...
நிம்மதி நிலைக்கும்...
கேட்டது கிடைக்கும்...
அங்கம் சிலர்க்கும்...
அமைதி பெருகும்....
பார்க்க..பார்க்க
பயமது விலகும்...
பாவங்கள் தீரும்....
பகை அது நீங்கும்...
உம்மருள் இன்றி
உலகென்னகில்லை
உன்னைவிட்டால்
உறவெனக்கு இல்லை
உனையே நினைக்க
உனையே துதிக்க
எமை ஆண்டிடுவாய்-எங்கள்
ஐயா..
குறையோன் வாழ்வில்
நீயே கவசம்.
எம் குறை தீர்க்க
எழில் வேல் முருகனை
எழுந்தோடி வரசெயும்
எம் குலஞானி..
எத்தனை துன்பம்
எத்தனை இடர்கள்
அத்துணை இடரால்
அவதியுறாமல்- எதையும்
தாங்கும் இதயம் தந்த
மாசில்லா குருவே!
மரகத மணியே!
வாழ்க! வாழ்க! தணிகை படியாய்...
வாழ்க!வாழ்க!பழனிஎம்பதியாய்...
வாழ்க!வாழ்க! பரங்குன்றின் அழகாய்....
வாழ்க!வாழ்க! செந்தூர் அலையாய்...
வாழ்க!வாழ்க! சுவாமி மலை ஞான மாய்....
வாழ்க! வாழ்க! சோலைகனியாய்.!

No comments:

Post a Comment