விழுது - பாலா
இன்றைய எந்திர உலகில் போலியான ஒரு இலக்கை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு அந்த இலக்கை அடைந்தபிந்தான் தெரிகிறது நாம் போக வேண்டிய தூரம் இன்னும் பல மைல்கள் இருக்கிறது என்று... என்னதான் மனவலிமைமிக்கவராய் இருந்தாலும் ஒரு கட்டத்தில் சோர்வடைகிறோம்.. பின் நம் முதுகில் தட்டிக்கொடுத்து போ என்று சொல்ல எப்போதும் யாரவது ஒரு அனுபவசாலி தேவை படுகிறார்கள் !!!
இங்கு தாத்தாவை பற்றி எழுதப்பட்ட ஒவ்வொரு பதிவிலும் என்னால் உணர முடிகிறது.... ஒரு மனிதன் எதனை பேரை இப்படி முதுகில் தட்டி ஓட வைத்திருக்கிறார் என்பது... சில நேரங்களில் வியப்பாகவும்... பல நேரங்களில் என் மீதே எனக்கு கோபமாகவும் (எனது ஞாபக சக்தியை எண்ணி)... போரமயாகவும் கூட... காரணம்... இப்படி ஒரு மனிதரை சந்தித்திருக்கிறேன் அவருடன் சில நாட்கள் வாழ்ந்தும் இருக்கிறேன் அனால் உண்மையில் எனக்கு தாத்தாவுடன் இருந்த ஞாபகங்களோ அவரிடம் கற்றுக்கொண்டதாகவோ எதுவும் நினைவில் இல்லையே என்றும்.. முகப்புதகத்தில் கண்டதையும் எழுதும் எனக்கு தாத்தாவை பற்றி எழுத எதுவுமே இல்லையே என்றும் !!!!!
எனக்கு ஞாபகம் இருப்பதெல்லாம் அமைதியான திருநீர் அணிந்த முகமும் அந்த திண்ணையும் தான்....!!!!
அனால் வேறு சில தாத்தாக்களை பற்றி பகிர விரும்புகிறேன் !!!
சேதுராமன் பிள்ளை (பெரிய தாத்தா ) !! லக்ஷ்மணன் பிள்ளை (சின்ன தாதா ) !!!!! - இரட்டையர்கள் !!!!
லக்ஷ்மணன் பிள்ளை என் அப்பாவின் அப்பா !!!! பேருக்கு ஏற்றது போல் ராமனும் லக்ஷ்மனுமாக தான் வாழ்ந்தார்கள் என்று சொல்ல வேண்டும் !!! பெரிய தாத்தாவிற்கு குழந்தைகள் கிடையாது அவரும் எங்களுடன் தான் இருந்தார் !!! இருவரும் அதிகமா பேசி கொண்டு பார்த்ததில்லை என்றும்.. பல நேரங்களில் கண்களாலேயே பேசிக்கொள்வார்கள் !!! நாராயணன் மற்றும் அனைவரும் திருச்சியில் படித்து கொண்டிருந்தார்கள்... நான் மட்டும் பரமக்குடியில்... எனக்கு விளையாட்டு தோழர்களை இருந்தது பெரும்பாலும் தாதாக்களே.... என்னை சைக்கிளில் வைத்து எங்கு சென்றாலும் கூட்டி செல்வர்கள் ... !!!! எந்த கடையில் நான் எதை சாப்பிடுவேன் என்று அவர்களுக்கு தெரியும் ... அந்தந்த கடைகளில் சைக்கிள்கள் தானாக நிற்கும் !!! எப்போது அம்மா சாப்பாடு பரிமாறினாலும் அண்ணன் சாப்பிட்டார என்று கேட்டு தான் சாப்பிடுவார் சின்ன தாத்தா !!! ஒரு நாளும் சாப்பாட்டில் குறை சொல்லியதே இல்லை (எங்கள் வீட்டில் தாத்தாக்கள் இருவர் மட்டும் தான் அப்படி )...!!
உணவை எப்படி ருசித்து சாப்பிட வேண்டும் என்று அவரிடம் தான் கற்று கொள்ள வேண்டும் !!! இன்றளவும் நான் பல ஊர்கள் சென்று விதவிதமான உணவுகளை சுவைபதிலும் அதை பற்றி எழுதுவதிலும் எனக்கு சந்தோசமாக இருக்கும் ... தாத்தாவிடம் என்னை அறியாமல் கற்றுக்கொண்டது தான் போல !!!!!!
பள்ளி பருவத்தில் மேலயகுடியின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த நான் .... எங்கு சென்றாலும் யாரு டா நீ என்று கேட்கும் போது ... ஒரு போதும் அப்பாவின் பெயரை சொல்லியதாக ஞாபகம் இல்லை... "லக்ஷ்மணன் பிள்ளையின் பெயரன் " என்று கர்வமாக சொல்லி நடைபோடுவேன் ... அவர் அங்கிருந்த பள்ளியில் ஆசிரியர் ... ஊரில் தென்படும் 5இல் ஒருவர் தாத்தாவின் மாணவர்களாக இருப்பார்கள்...
தெருவில் வருபவர்களை எல்லாம் தாத்தா செல்லமாக வம்பிலுப்பர்... பாரபட்சம் இல்லாமல் எல்லோரிடமும் அன்பை இறைத்தவர் !!! எல்லோருக்கும் பிடித்த ஒரு நபராக வாழ்ந்தவர் அவர் என்பதில் எனக்கு ஒரு கர்வம் !!!
தாத்தா ஓய்வு பெற்றபின் ஒரு நாள் பள்ளியில் சுதந்திர தின விழாவிற்கு தலைமை தாங்க கூப்பிட்டார்கள்... அங்கே கபடி போட்டிகள் நடைபெற்றன... வெற்றி பெற்றவர்கள் தாத்தாவிடம் பரிசுகள் வாங்கினர்.. வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் ஒரு பேனா பரிசாக கொடுக்க பட்டது ... அருகில் அமர்ந்த நான் எனக்கும் ஒரு பேனா வேண்டும் என அடம்பிடிக்க ... அருகில் இருந்த ஆசிரியர்கள் ஒரு பெனாதனே குடுங்க சார் என்று சொல்ல.. என்னிடம் திரும்பிய தாத்தா "கழுத சும்மா இரு.. அவங்க எல்லாம் ஜெயிச்சுருக்காங்க வாங்குறாங்க , நீயும் ஜெயிக்கும்போது பேனா கிடைக்கும் என்று சொன்னார் "... அப்போது கோவம் வந்தது.. இப்போது புரிகிறது.... இப்போதும் பேனாவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன் !!!!!!!
சண்முகம் தாத்தா (தேவி சித்தியின் அப்பா )
இவரை பற்றி சொல்ல இரண்டு சொற்கள் போதும் .. ஒன்று உழைப்பு ...!!! மற்றும் ஒன்று எளிமை !!!
அவரால் முடியாத ஒன்று சோம்பேறியாக ஓரிடத்தில் இருப்பது .. அவர் சித்தப்பாவின் கடை வேலைகளிலும் கட்டிட வேலைகளிலும் துணையாக இருந்தவர்... எடுத்துக்கொண்ட ஒவ்வொரு செயலையும் முழு ஈடுபாட்டுடனும் எவ்வளவு சிக்கனமாக சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்வர்... வியந்திரிக்கிறேன் பல முறை !!!! "கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே என்று சொல்வார்கள்" ... எதார்த்தத்தில் யாரால் செய்ய முடியாது இதை .. ஆனாலும் அவர் எதிர்பார்ப்பின்றி உழைத்த ஒரு மனிதராக என் மனதில் உயர்கிறார் !!!
முனியாண்டி தாத்தா (பிரபா சித்தியின் அப்பா)
பலநேரங்களில் கோபக்கார மனிதராக அனைவருக்கும் தென்படும் மனிதர் என்றாலும் !!! அவரிடம் நான் வியப்பது சுய ஒழுக்கம் !!! அவரால் ஒழுக்கமின்மையை எங்கு பார்த்தாலும் போருக்க முடியாமல் சொல்லிவிடுவார் ... பலருக்கு அது அவரை கோபக்காரராக காட்டிவிடுகிறது !!!
பள்ளி பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் நான் எப்போதும் ஒரு below average மாணவன்தான் !! என் ஆர்வம் எல்லாம் எப்போதும் விளையாட்டில் !!! பொய் சொல்லி விளையாட்டு போட்டிகளுக்கு செல்வேன் பல சமயம் மாட்டிக்கொண்டு அடி வாங்குவேன் !!!! ஆனாலும் என்னை வீட்டில் ஒவ்வொரு முறை போகும்போதும் அமரவைத்து இப்போ எந்த matchukku போன ... அங்க tournament நடக்குது போகலைய ... என்று என் திறமையை மதித்து பேசும் ஒரு நபராக இருந்தவர் அவர் மட்டுமே... அவர் ஒரு உடல் கல்வி ஆசிரியர் !!! இந்த வயதிலும் அவர் trouser மாட்டிக்கொண்டு மைதானத்துக்கு செல்கிறார் !!!!
I have always admired him as a sports man and wondered how could a man stick to his biological clock so strictly.
இப்படியாக தாத்தாக்கள் பலவிதங்கள் !!! தாத்தாக்கள் தீர்க்க தரிசிகள் !!!!!
இன்றைய எந்திர உலகில் போலியான ஒரு இலக்கை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு அந்த இலக்கை அடைந்தபிந்தான் தெரிகிறது நாம் போக வேண்டிய தூரம் இன்னும் பல மைல்கள் இருக்கிறது என்று... என்னதான் மனவலிமைமிக்கவராய் இருந்தாலும் ஒரு கட்டத்தில் சோர்வடைகிறோம்.. பின் நம் முதுகில் தட்டிக்கொடுத்து போ என்று சொல்ல எப்போதும் யாரவது ஒரு அனுபவசாலி தேவை படுகிறார்கள் !!!
இங்கு தாத்தாவை பற்றி எழுதப்பட்ட ஒவ்வொரு பதிவிலும் என்னால் உணர முடிகிறது.... ஒரு மனிதன் எதனை பேரை இப்படி முதுகில் தட்டி ஓட வைத்திருக்கிறார் என்பது... சில நேரங்களில் வியப்பாகவும்... பல நேரங்களில் என் மீதே எனக்கு கோபமாகவும் (எனது ஞாபக சக்தியை எண்ணி)... போரமயாகவும் கூட... காரணம்... இப்படி ஒரு மனிதரை சந்தித்திருக்கிறேன் அவருடன் சில நாட்கள் வாழ்ந்தும் இருக்கிறேன் அனால் உண்மையில் எனக்கு தாத்தாவுடன் இருந்த ஞாபகங்களோ அவரிடம் கற்றுக்கொண்டதாகவோ எதுவும் நினைவில் இல்லையே என்றும்.. முகப்புதகத்தில் கண்டதையும் எழுதும் எனக்கு தாத்தாவை பற்றி எழுத எதுவுமே இல்லையே என்றும் !!!!!
எனக்கு ஞாபகம் இருப்பதெல்லாம் அமைதியான திருநீர் அணிந்த முகமும் அந்த திண்ணையும் தான்....!!!!
அனால் வேறு சில தாத்தாக்களை பற்றி பகிர விரும்புகிறேன் !!!
சேதுராமன் பிள்ளை (பெரிய தாத்தா ) !! லக்ஷ்மணன் பிள்ளை (சின்ன தாதா ) !!!!! - இரட்டையர்கள் !!!!
லக்ஷ்மணன் பிள்ளை என் அப்பாவின் அப்பா !!!! பேருக்கு ஏற்றது போல் ராமனும் லக்ஷ்மனுமாக தான் வாழ்ந்தார்கள் என்று சொல்ல வேண்டும் !!! பெரிய தாத்தாவிற்கு குழந்தைகள் கிடையாது அவரும் எங்களுடன் தான் இருந்தார் !!! இருவரும் அதிகமா பேசி கொண்டு பார்த்ததில்லை என்றும்.. பல நேரங்களில் கண்களாலேயே பேசிக்கொள்வார்கள் !!! நாராயணன் மற்றும் அனைவரும் திருச்சியில் படித்து கொண்டிருந்தார்கள்... நான் மட்டும் பரமக்குடியில்... எனக்கு விளையாட்டு தோழர்களை இருந்தது பெரும்பாலும் தாதாக்களே.... என்னை சைக்கிளில் வைத்து எங்கு சென்றாலும் கூட்டி செல்வர்கள் ... !!!! எந்த கடையில் நான் எதை சாப்பிடுவேன் என்று அவர்களுக்கு தெரியும் ... அந்தந்த கடைகளில் சைக்கிள்கள் தானாக நிற்கும் !!! எப்போது அம்மா சாப்பாடு பரிமாறினாலும் அண்ணன் சாப்பிட்டார என்று கேட்டு தான் சாப்பிடுவார் சின்ன தாத்தா !!! ஒரு நாளும் சாப்பாட்டில் குறை சொல்லியதே இல்லை (எங்கள் வீட்டில் தாத்தாக்கள் இருவர் மட்டும் தான் அப்படி )...!!
உணவை எப்படி ருசித்து சாப்பிட வேண்டும் என்று அவரிடம் தான் கற்று கொள்ள வேண்டும் !!! இன்றளவும் நான் பல ஊர்கள் சென்று விதவிதமான உணவுகளை சுவைபதிலும் அதை பற்றி எழுதுவதிலும் எனக்கு சந்தோசமாக இருக்கும் ... தாத்தாவிடம் என்னை அறியாமல் கற்றுக்கொண்டது தான் போல !!!!!!
பள்ளி பருவத்தில் மேலயகுடியின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த நான் .... எங்கு சென்றாலும் யாரு டா நீ என்று கேட்கும் போது ... ஒரு போதும் அப்பாவின் பெயரை சொல்லியதாக ஞாபகம் இல்லை... "லக்ஷ்மணன் பிள்ளையின் பெயரன் " என்று கர்வமாக சொல்லி நடைபோடுவேன் ... அவர் அங்கிருந்த பள்ளியில் ஆசிரியர் ... ஊரில் தென்படும் 5இல் ஒருவர் தாத்தாவின் மாணவர்களாக இருப்பார்கள்...
தெருவில் வருபவர்களை எல்லாம் தாத்தா செல்லமாக வம்பிலுப்பர்... பாரபட்சம் இல்லாமல் எல்லோரிடமும் அன்பை இறைத்தவர் !!! எல்லோருக்கும் பிடித்த ஒரு நபராக வாழ்ந்தவர் அவர் என்பதில் எனக்கு ஒரு கர்வம் !!!
தாத்தா ஓய்வு பெற்றபின் ஒரு நாள் பள்ளியில் சுதந்திர தின விழாவிற்கு தலைமை தாங்க கூப்பிட்டார்கள்... அங்கே கபடி போட்டிகள் நடைபெற்றன... வெற்றி பெற்றவர்கள் தாத்தாவிடம் பரிசுகள் வாங்கினர்.. வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் ஒரு பேனா பரிசாக கொடுக்க பட்டது ... அருகில் அமர்ந்த நான் எனக்கும் ஒரு பேனா வேண்டும் என அடம்பிடிக்க ... அருகில் இருந்த ஆசிரியர்கள் ஒரு பெனாதனே குடுங்க சார் என்று சொல்ல.. என்னிடம் திரும்பிய தாத்தா "கழுத சும்மா இரு.. அவங்க எல்லாம் ஜெயிச்சுருக்காங்க வாங்குறாங்க , நீயும் ஜெயிக்கும்போது பேனா கிடைக்கும் என்று சொன்னார் "... அப்போது கோவம் வந்தது.. இப்போது புரிகிறது.... இப்போதும் பேனாவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன் !!!!!!!
சண்முகம் தாத்தா (தேவி சித்தியின் அப்பா )
இவரை பற்றி சொல்ல இரண்டு சொற்கள் போதும் .. ஒன்று உழைப்பு ...!!! மற்றும் ஒன்று எளிமை !!!
அவரால் முடியாத ஒன்று சோம்பேறியாக ஓரிடத்தில் இருப்பது .. அவர் சித்தப்பாவின் கடை வேலைகளிலும் கட்டிட வேலைகளிலும் துணையாக இருந்தவர்... எடுத்துக்கொண்ட ஒவ்வொரு செயலையும் முழு ஈடுபாட்டுடனும் எவ்வளவு சிக்கனமாக சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்வர்... வியந்திரிக்கிறேன் பல முறை !!!! "கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே என்று சொல்வார்கள்" ... எதார்த்தத்தில் யாரால் செய்ய முடியாது இதை .. ஆனாலும் அவர் எதிர்பார்ப்பின்றி உழைத்த ஒரு மனிதராக என் மனதில் உயர்கிறார் !!!
முனியாண்டி தாத்தா (பிரபா சித்தியின் அப்பா)
பலநேரங்களில் கோபக்கார மனிதராக அனைவருக்கும் தென்படும் மனிதர் என்றாலும் !!! அவரிடம் நான் வியப்பது சுய ஒழுக்கம் !!! அவரால் ஒழுக்கமின்மையை எங்கு பார்த்தாலும் போருக்க முடியாமல் சொல்லிவிடுவார் ... பலருக்கு அது அவரை கோபக்காரராக காட்டிவிடுகிறது !!!
பள்ளி பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் நான் எப்போதும் ஒரு below average மாணவன்தான் !! என் ஆர்வம் எல்லாம் எப்போதும் விளையாட்டில் !!! பொய் சொல்லி விளையாட்டு போட்டிகளுக்கு செல்வேன் பல சமயம் மாட்டிக்கொண்டு அடி வாங்குவேன் !!!! ஆனாலும் என்னை வீட்டில் ஒவ்வொரு முறை போகும்போதும் அமரவைத்து இப்போ எந்த matchukku போன ... அங்க tournament நடக்குது போகலைய ... என்று என் திறமையை மதித்து பேசும் ஒரு நபராக இருந்தவர் அவர் மட்டுமே... அவர் ஒரு உடல் கல்வி ஆசிரியர் !!! இந்த வயதிலும் அவர் trouser மாட்டிக்கொண்டு மைதானத்துக்கு செல்கிறார் !!!!
I have always admired him as a sports man and wondered how could a man stick to his biological clock so strictly.
இப்படியாக தாத்தாக்கள் பலவிதங்கள் !!! தாத்தாக்கள் தீர்க்க தரிசிகள் !!!!!