இலை 1
நீ அல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை
இந்த பாடலை கேட்கும் தோறும் மனம் இதை அசை போடும் போதும் எந்தையை எம் சிந்தை நிறை தந்தையை மனதார நினைந்து விழிஎல்லாம் நீரால் நிறைந்து உள்ளம் கசிந்து உயிர் உருகா நாள் எல்லாம் நான் பிறவா நாளே!
ஐயா துரை மகனே என அருமையுடன் அழைத்து மெய்யாய் வாழ்த்து சொன்ன மேதகு அருணைசெல்வி இதனினும் பெரிய பேறுஎனக்கு இனி வேறுண்டோ!
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்னும் தாரக மந்திரத்தை சிரம் மேற்கொண்டு வாழ்ந்த தனயனாம் என் தந்தை செய்திட்ட செயல்களெல்லாம் தாய் தந்தையின் கட்டளைகளை நிறை வேற்றிய விஷயங்களே என்பது நிதர்சனமாய் நான் கண்ட உண்மை.
என் பிறப்புக்கு முன் என் அப்பாவின் வாழ்வில் நடந்த சம்பவங்களை என் மக்கள் இருவரும் எழுதி வருவதால் அதனை தவிர்த்து பெருமாள் கோவில் வீட்டிலிருந்து இப்பெருங்கதை தொடங்குகிறேன் (சுபா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்)
என் பள்ளிப்பருவம் தொடங்குவதன் முன்னரே பெருமாள் கோவில் பின்புற வீட்டில் வாசம் (6ம் நம்பர் வீடு அதே வரிசையில் PSS OFFICE ) பெருமாள் கோவில் யானை தினசரி வீட்டின் முன்னே பீடு நடை போட நான் குஞ்சரம் ஊர்ந்த கோமகனாய் சவாரி செய்யும் பாக்கியம் அப்பாவின் செல்வாக்குக்கு சாட்சியம். ஒளிந்து விளையாட பெருமாள் கோவில் வேடிக்கை பார்க்க பஸ்கள் என ஓடியது நாட்கள் தாத்தாவின் 60 வயது நிறைவின் போது பெருமாள் கோவில் உச்சியில் ஏறி மதுரை மாநகரின் பேரழகை ரசித்த காட்சி பால பருவத்தின் பதிவான பேரானந்தம் .
பசளைக்கு செல்ல வீட்டு வாசலிலேயே பஸ் ஏறி செல்லும் முக்கியத்துவம் . பின்னர் பசளையில் இருந்து திரும்பும்போது பஸ்சில் முன் வரிசை (டிரைவர் சீட்டின் தொடர்ச்சியான) சீட்டில் பயணம் கனக்கப் பிள்ளை வீட்டு டிக்கெட் என்று புறப்பட்ட இடத்திலிருந்தே (கமுதி )காலியாக வரும் ( அந்த பாவம் தான் இப்போது பஸ்களில் சீட் கிடைக்கமாட்டேன் என்கிறது )ராதா அத்தாச்சியின் சடங்கிற்கு பசளைக்கு செல்ல எனக்கு அம்மை போட்டிருந்ததற்காக எனக்கு ஒரு தனி சீட்டும் அதனை சுற்றி வேப்பிலையை.சுவர் போல்கட்டி அம்மாவுடன் பயணம் செய்தேன் இதெல்லாம் அப்பாவின் செல்வாக்கினை சொல்லவே!
பள்ளி வாழ்க்கை தாத்தாவின் ஆணைப்படி அம்மை நகரிலே ஆரம்பமானது அரிகேன் விளக்கொளியில் சின்ன அத்தையின் வழி காட்டுதலில் அட்சர அப்பியாசம் ஆரம்பம் பள்ளி செல்லும் நேரம் தவிர நாளின் எல்லா நேரமும் தாத்தாவின் தர்பாரில்தான் நாள் தவறாமல் காலையில் பூஜை (அட சாமி கும்பிடறதுதான்) மாலை படிப்பு முடிந்தவுடன் மீண்டும் அம்மையப்பன் ஆனவருக்கு அரகரோகரா இரவு உணவுக்கு பின் எங்காவது வீட்டுக்கு வெளியில் (அந்த ஊரின் மாபெரும் கடை வீதியில் )பார்த்தால்அன்று பூஜை(இது உண்மையான அடி தான்)நிச்சயம் ஆனால் அன்பு அப்பத்தாவின் அரவணைப்பு அதனை மறக்க செய்யும்
பள்ளி வாழ்க்கை தாத்தாவின் ஆணைப்படி அம்மை நகரிலே ஆரம்பமானது அரிகேன் விளக்கொளியில் சின்ன அத்தையின் வழி காட்டுதலில் அட்சர அப்பியாசம் ஆரம்பம் பள்ளி செல்லும் நேரம் தவிர நாளின் எல்லா நேரமும் தாத்தாவின் தர்பாரில்தான் நாள் தவறாமல் காலையில் பூஜை (அட சாமி கும்பிடறதுதான்) மாலை படிப்பு முடிந்தவுடன் மீண்டும் அம்மையப்பன் ஆனவருக்கு அரகரோகரா இரவு உணவுக்கு பின் எங்காவது வீட்டுக்கு வெளியில் (அந்த ஊரின் மாபெரும் கடை வீதியில் )பார்த்தால்அன்று பூஜை(இது உண்மையான அடி தான்)நிச்சயம் ஆனால் அன்பு அப்பத்தாவின் அரவணைப்பு அதனை மறக்க செய்யும்
குருகுல வாசத்தின் பின் உள்ள கதை தொடரும்
இலை 2
No comments:
Post a Comment