Monday, 1 June 2015

விழுது - ரம்யா

இலை 1

தாத்தா - A man with eternal power who had influenced, inspired so many individuals. என்னுடைய தாத்தா, என்னுடைய அப்பா, என்னுடைய மாமா என்று இங்கு நம் உறவினர்கள் பெருமை கொள்வதன்றி "he is my guide" என்று சொல்லும் முகமறியா பலரை கண்டிருக்கிறோம். பத்து வயது வரை தான் உடனிருக்க முடிந்தது, எனக்கே பல நூறு நினைவுகள். Appas, Athans, Annans and Akkas can share their experiences with everyone. ஒரு முறை தூத்துக்குடியில் குடியேறிய சமயம் என்னை மட்டும் அழைத்துக்கொண்டு தாத்தா ஒரு ஜோஸிய நண்பரின் விலாசம் தேடிச்சென்றோம். அங்கு அந்த நபர் இல்லை. காலி செய்து பல வருடம் ஆகியிருந்தது. ஆனால் அந்த வீட்டில் இருந்த நபரும் ஜாதகம் பார்ப்பவர் தான். இருவரும் இஞ்சி டீயை ருசித்தபடி மூன்று மணி நேரம் உலக விசயம் பல பேசிக்கொண்டிருந்தனர். ஹர்ஷத் மேத்தாவெல்லாம் எனக்கு அன்று தான் அறிமுகம். எட்டு வயதில் ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. இவரும் உங்க friend ஆ, இவ்வளவு நேரம் பேசினீர்களே! என்று கேட்டேன். Simply amazing to hear their talks in wide range of topics.

இலை 2
சற்குரு - தாத்தா
என் நினைவோடையில் தாத்தாவின் செல்லப் பேத்தியாக சில ஞாபகங்கள். என்றுமே தாத்தாவிடம் திட்டு வாங்கியதாக நினைவில்லை. நான் ஒன்றாம் வகுப்பு காரைக்குடியில் படிக்கும் சமயம், காலையில் ரேடியோ கேட்பது தினமும் பழக்கம். அதில் கரகாட்டக்காரன் படப்பாடல் "மாங்குயிலே பூங்குயில்லே" பாடலுக்கு நானும் ரவி அப்பாவும் தாளம் போட்டு நடனம் ஆடிய நினைவில் மதுரைக்கு சென்ற போது தாத்தா முன் எப்போதோ என்னை அறியாமல் ஆடியிருக்கிறேன். தாத்தா ஒரு நாள் "எங்கே மாங்குயிலே தேங்குயிலே பாடி ஆடு" என்றார்கள் "தாத்தா அது தேங்குயிலே இல்ல பூங்குயிலே" எனச் சொல்லி ஆடினேன். மஹா அத்தாச்சி சொன்னது போல என் நடனத்திறமையை பார்த்து தாத்தா என்னை நடன வகுப்பில் சேர்க்கவே வேண்டாம் என்று நினைத்திருப்பார்கள்.

No comments:

Post a Comment